search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government worker struggle"

    அரசு ஊழியர்களின் போராட்டம் நியாயமானது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். #JactoGeo #Seeman

    மதுரை:

    மதுரையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டுதான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி உள்ளார். நாளை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை தொடர்வார்களா? என்று தெரியவில்லை.

    முன்பு கருணாநிதி கொண்டு வந்த திட்டத்தை எல்லாம் ஜெயலலிதா கிடப்பில் போட்டார். மாநிலம் முழுவதும் ஒரு வாரமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் நியாயம் உள்ளது.

    நாட்டின் எதிர்கால தலைமுறையை உருவாக்குவது ஆசிரியர்கள்தான். அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தைதான் கேட்கிறார்கள். அரசு போராடவே கூடாது என்றால் தவறு.

    அவர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதை விடுத்து அவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபடக்கூடாது.

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். 40 தொகுதிகளில் தலா 20 தொகுதிகள் ஆண்கள் -பெண்களுக்கு ஒதுக்கப்படும். சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo #Seeman

    வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் அரசு ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    வேலூரில் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர், அகில இந்திய அஞ்சலக ஊழியர்கள் சங்கத்தினர், சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம், டாஸ்மாக் அனைத்து தொழிலாளர்கள் சங்கம், மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கம் உள்பட பல்வேறு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    2-வது நாளாக மத்திய அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அனைத்து பகுதிகளுக்கும் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்கள், ஆட்டோக்கள், சரக்கு லாரிகளும் வழக்கம்போல் இயங்கின.

    வேலூரில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் மட்டும் தமிழக எல்லையான ஓசூர் வரை இயக்கப்பட்டன. திருப்பதி, சித்தூர் உள்ளிட்ட ஆந்திரா மாநிலத்துக்கு வழக்கம்போல் பஸ்கள் சென்றன.

    இதேபோல் திருவண்ணாமலையிலும் மத்திய அரசு ஊழியர்கள் இன்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ, பஸ்கள் வழக்கம் போல் ஓடியது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-வது நாளாக அரசு ஊழியர்கள் பொது வேலை நிறுத்தத்தை தொடர்ந்து அரசு அலுவலகங்கள் அனைத்தும் வெறிச்சோடின.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-வது நாளாக அரசு ஊழியர்கள் பொது வேலை நிறுத்தத்தை தொடர்ந்து அரசு அலுவலகங்கள் அனைத்தும் வெறிச்சோடின. அலுவலகங்களில் பணிகள் நடைபெறாததால் பணி நிமித்தமாக வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    நாடு முழுவதும் தொழிற் சங்க கூட்டமைப்பினர் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல் படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் வேலை நிறுத்த போராட் டத்தை அறிவித்திருந்தனர்.

    அதன் தொடர்ச்சியாக நேற்று வேலை நிறுத்தம் தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து தாசில்தார் அலுவலக ஊழியர்கள், ஊராட்சித் துறை வளர்ச்சி மேம்பாட்டு துறையினர், காப்பீடு திட்ட அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பெரும்பாலான துறைகளின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட் டனர்.

    மாவட்ட அளவில் வரு வாய்த்துறையில் அனை வரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங் களும் வெறிச்சோடி காணப் பட்டன.

    மின்வாரிய துறையில் மாவட்ட அளவில் 743 பேரில் 330 பேர் பணிக்கு வரவில்லை. போக்குவரத்து துறையில் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேசு வரம், முதுகுளத்தூர் என அனைத்து பகுதிகளிலும் சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட சங்கத்தினர் 150-க்கும் மேற் பட்டோர் வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டனர்.

    அனைத்து அரசு அலுவலகங்களிலும் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் ஏராள மான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணியில் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை. வழக்கம் போல் பஸ்கள் அனைத்தும் இயங்கியது.

    ×