search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gas cylinder accident"

    • சிலிண்டர் வெடித்த விபத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து வீடு தரைமட்டமானது.
    • சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அம்பேத்கார்நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது25). இவரது தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    வீட்டில் இன்று காலை முத்துக்குமார் மட்டும் தனியாக இருந்துள்ளார். பின்னர் வெந்நீர் வைப்பதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார்.

    சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதனால் முத்துக்குமார் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டார். இதனால் அவர் காலில் பலத்த காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சிலிண்டர் வெடித்த விபத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து வீடு தரைமட்டமானது. மேலும் அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த கட்டில் துணிகள், பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது. சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அப்துல் கரீம் வீட்டில் சமையல் செய்த போது கியாஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதனால் அறை முழுவதும் தீ பரவியது.
    • ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் சிலிண்டர் வெடித்து விபத்தில் இறந்தனர். தீயணைப்பு வீரர்கள் செல்வதற்குள் அவர்கள் தீயில் கருகி பலியானார்கள்.

    பானிபட்:

    அரியானா மாநிலம் பானிபட் மாவட்டம் டெசில் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கரீம்.

    மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர் இங்கு புலம்பெயர் தொழிலாளியாக வசித்து வருகிறார். ஒரு அறை எடுத்து குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை 6.30 மணியளவில் அப்துல் கரீம் வீட்டில் சமையல் செய்த போது கியாஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதனால் அறை முழுவதும் தீ பரவியது.

    இதில் அப்துல் கரீம் (வயது 48), அவரது மனைவி அப்ரோஜ் (45), மகள்கள் இஸ்ரத் (18), ரேஸ்மா (16), அப்சானா (8), மகன் ஷக்குர் (12) ஆகிய 6 பேர் பலியானார்கள்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் சிலிண்டர் வெடித்து விபத்தில் இறந்தனர். தீயணைப்பு வீரர்கள் செல்வதற்குள் அவர்கள் தீயில் கருகி பலியானார்கள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேற்கு வங்களாவில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

    கோவை அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து படுகாயம் அடைந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள காமராஜபுரத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 77). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்.

    இவர் நேற்று காலை 5 மணியளவில் வழக்கம் போல பால் வாங்கி வந்து சமையல் அறைக்கு சென்றார்.

    அப்போது அங்கு சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு அறை முழுவதும் பரவி இருந்தது. இது தெரியாமல் சின்னராஜ் அறையில் இருந்த சுவிட்ச்சை போட்டார். கண் இமைக்கும் நேரத்தில் சிலிண்டர் வெடித்து சிதறியது.

    இதில் சின்னராஜ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு சின்னராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    கொடைக்கானல் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் மனைவி-மகளுடன் தி.மு.க. பிரமுகர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். #KodaikanalFireAccident
    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான மங்களம்கொம்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 50). தி.மு.க. பிரமுகரான இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆவார். அவரது மனைவி மஞ்சுளா தேவி (45). இவர்களது மகள் விஷ்ணு பிரியா (10). இவர் திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில் தங்கி தனியார் பள்ளியில் படித்து வந்தார்.

    தற்போது அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஊருக்கு வந்திருந்தார். இவர்களது வீடு மலைப்பகுதியில் உள்ளது. எனவே காட்டு யானைக்கு பயந்து வீடானது தகர கொட்டகையால் வேயப்பட்டு இருந்தது. சுற்றிலும் மரப்பலகையால் அடைக்கப்பட்டு இருந்தது.

    நேற்று இரவு கணேசன் தனது குடும்பத்தினருடன் அயர்ந்து தூங்கினார். இன்று காலை 6 மணி ஆனதும் மஞ்சுளா தேவி காபி போடுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைக்க முயன்றார். அப்போது சிலிண்டரில் உள்ள கியாஸ் கசிவாகி இருந்தது.

    இதை கவனிக்காத மஞ்சுளா தேவி நெருப்பை பற்றவைத்தார். கண் இமைக்கும் நேரத்தில் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சிறிது நேரத்தில் வீடு முழுவதும் நெருப்பு பற்றியது.


    வீடு பூட்டப்பட்டு இருந்ததால் வீட்டில் உள்ளவர்கள் அலறி துடித்தனர். சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. எனவே அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். தண்ணீரை எடுத்து நெருப்பை அணைத்தனர். ஆனால் வீட்டுக்குள் கணேசன், அவரது மனைவி மஞ்சுளா தேவி, மகள் விஷ்ணு பிரியா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. தகவல் அறிந்ததும் ஏராளமானோர் திரண்டனர். இது குறித்து தாண்டிக்குடி போலீசாருக்கு தகவல் எட்டியது. அவர்கள் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து போன கணேசன் அந்த பகுதி மக்களுக்கு பரிட்சயமானவர். எனவே அவர் இறந்ததால் கிராமத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.  #KodaikanalFireAccident

    ×