search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரியானாவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
    X

    அரியானாவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

    • அப்துல் கரீம் வீட்டில் சமையல் செய்த போது கியாஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதனால் அறை முழுவதும் தீ பரவியது.
    • ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் சிலிண்டர் வெடித்து விபத்தில் இறந்தனர். தீயணைப்பு வீரர்கள் செல்வதற்குள் அவர்கள் தீயில் கருகி பலியானார்கள்.

    பானிபட்:

    அரியானா மாநிலம் பானிபட் மாவட்டம் டெசில் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கரீம்.

    மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர் இங்கு புலம்பெயர் தொழிலாளியாக வசித்து வருகிறார். ஒரு அறை எடுத்து குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை 6.30 மணியளவில் அப்துல் கரீம் வீட்டில் சமையல் செய்த போது கியாஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதனால் அறை முழுவதும் தீ பரவியது.

    இதில் அப்துல் கரீம் (வயது 48), அவரது மனைவி அப்ரோஜ் (45), மகள்கள் இஸ்ரத் (18), ரேஸ்மா (16), அப்சானா (8), மகன் ஷக்குர் (12) ஆகிய 6 பேர் பலியானார்கள்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் சிலிண்டர் வெடித்து விபத்தில் இறந்தனர். தீயணைப்பு வீரர்கள் செல்வதற்குள் அவர்கள் தீயில் கருகி பலியானார்கள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேற்கு வங்களாவில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×