search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fuel price cut"

    5 மாநில தேர்தலுக்காக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். #PetrolDieselPrice #AnbumaniRamadoss
    சென்னை :

    பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ம.க. சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடந்தது.

    இதில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, துணை பொது செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தின் போது டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 15 மாதங்களில் பெட்ரோல் விலை 32 சதவீதமும், டீசல் விலை 38 சதவீதமும் அதிகரித்துள்ளது. இவ்வாறு எந்த நாட்டிலும் அதிகரிக்கவில்லை. கச்சா எண்ணெய் விலை குறைந்தும், மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைக்கவில்லை.

    நமது அண்டை நாடான பாகிஸ்தான் ரூ.51-க்கும், பர்மா ரூ.44-க்கும், பூட்டான் ரூ.57-க்கும் விற்பனை செய்கின்றன. பூட்டானுக்கும், இந்தியாவுக்கும் ஒரே நிறுவனம் தான் பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்கிறது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல் அதிக விலையில் விற்பனை செய்கிறது.

    பெட்ரோல் மற்றும் டீசலின் இந்த விலை உயர்வால் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்கள் ரூ.12 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மதுவுக்கு 82 சதவீதமும், புகையிலைக்கு 28 சதவீதமும் வரி விதிக்கும் அரசு, பெட்ரோலுக்கு 118 சதவீதம் விதிக்கின்றது.

    ஜி.எஸ்.டி. வரிக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கொண்டுவந்தால், 28 சதவீதத்துக்கு மேல் வரி விதிக்க முடியாது. இதனால் பெட்ரோல் விலை மிக அதிக அளவில் குறைய வாய்ப்பு உள்ளது. நேற்று முன்தினம் பெட்ரோல் விலையில் ரூ.2.50 மத்திய அரசு குறைத்துள்ளது. இதில் மத்திய அரசு வரியில் ரூ.1.50, எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1 குறைத்துள்ளன.

    5 மாநில சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் தான் மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைத்துள்ளது. கர்நாடக தேர்தலின் போது அங்கு பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யவில்லை. ஆனால் வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் பெட்ரோல் விலையை உயர்த்தியது.

    பெட்ரோலுக்கு ரூ.45 வரி விதிப்பதில், ரூ.30 மாநில அரசுக்கும், ரூ.15 மத்திய அரசுக்கும் செல்கிறது. இதில் மாநில அரசு ரூ.20-ம், மத்திய அரசு ரூ.5 குறைத்து பெட்ரோலை விற்பனை செய்ய வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் பா.ம.க. மீண்டும் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PetrolDieselPrice #AnbumaniRamadoss
    மராட்டியத்தில் பெட்ரோலை தொடர்ந்து டீசல் விலையும் ரூ.4.06 குறைந்தது. இதனால் தினந்தோறும் விலையேற்றத்தால் கலக்கம் அடைந்த வாகன ஓட்டிகளுக்கு விலை குறைப்பு சற்று ஆறுதலை அளித்துள்ளது. #Petrol #Diesel #FuelPriceCut
    மும்பை :

    பெட்ரோல், டீசல் விலை கடந்த மே மாதம் முதல் தினந்தோறும் ஏறுமுகத்தில் இருந்து வந்தது. மராட்டியம் முழுவதும் பெட்ரோல் விலை ரூ.90-ஐ தாண்டி விற்பனையானது.

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்தன. ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் மூலமும் வலியுறுத்தப்பட்டது.

    இதையடுத்து மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு தலா ரூ.1.50 குறைப்பதாக நேற்று முன்தினம் அறிவித்தது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் லிட்டருக்கு ரூ.1 வீதம் குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    இதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2.50 விலை குறைக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் நடவடிக்கையை தொடர்ந்து உடனடியாக மராட்டிய அரசும் பெட்ரோல் மீதான மதிப்பு கூடுதல் வரியை ரூ.2.50 குறைத்தது. மத்திய, மாநில அரசுகளின் இந்த நடவடிக்கையால் மராட்டியத்தில் பெட்ரோல் விலை ரூ.5 குறைந்தது.



    ஆனால் டீசல் மீதான வரியை மராட்டிய அரசு குறைக்காமல் இருந்தது. இதனால் டீசல் விலை குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில், மராட்டியத்தில் டீசல் விலையை ரூ.1.56 குறைப்பதாக நேற்று நாசிக்கில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். ஏற்கனவே மத்திய அரசு டீசல் விலையை ரூ.2.50 குறைத்த நிலையில், மராட்டியத்தில் டீசல் விலை நேற்று லிட்டருக்கு ரூ.4.06 குறைந்தது.

    விலை குறைப்பை தொடர்ந்து மும்பையில் நேற்று பெட்ரோல் ரூ.86.97-க்கும், டீசல் ரூ.77.45-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    தினந்தோறும் விலையேற்றத்தால் கலக்கம் அடைந்த வாகன ஓட்டிகளுக்கு விலை குறைப்பு சற்று ஆறுதலை அளித்துள்ளது. #Petrol #Diesel #FuelPriceCut
    பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2.50 குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். #FuelPriceCut
    மும்பை:

    பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி, அமைச்சர்கள் அருண் ஜெட்லி, தர்மேந்திர பிரதான் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தை அடுத்து அருண் ஜெட்லி செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு விதிக்கும்  கலால் வரி ரூ.1.50 குறைக்கப்படும் எனவும், எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் பங்குக்கு ரூ.1 குறைக்கும் எனவும் அறிவித்தார். மொத்தம் லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கப்பட்ட நிலையில், மாநில அரசுகளும் ரூ.2.50 குறைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

    இதனை அடுத்து, பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2.50 குறைக்க பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா மாநில முதல்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனால், மேற்கண்ட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 குறைகிறது.
    ×