என் மலர்
நீங்கள் தேடியது "Foreign exchange case"
ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு 1996-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் கோர்ட்டு முடிவு செய்தது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, உடல் நலம் சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜராக முடியாமல் போனது.

இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவானது,
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராக தேவையில்லை என்றும், காணொலி காட்சி மூலம் சசிகலா விசாரணைக்கு ஆஜராகலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் 4 மாதங்களில் சசிகலா, பாஸ்கரன் மீதான அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை முடிக்க எழும்பூர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். #Sasikala #ForeignExchangeCase #EgmoreHighCourt
சென்னை:
இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக டெபாசிட் செய்து அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக, டி.டி.வி.தினகரன் மீது 1996-ம் ஆண்டு அமலாக்க பிரிவு வழக்கு தொடர்ந்தது.
எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், லண்டன் உள்ளிட்ட இடங்களில் உள்ள தனது தரப்பு சாட்சிகள் 17 பேரை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும், இந்த வழக்கு குறித்து விசாரணை அதிகாரி, லண்டன் இந்திய தூதரகத்திற்கு அனுப்பிய ஆவணங்களை தனக்கு வழங்கவேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் பொருளாதார கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து தினகரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், தினகரன் தரப்பு கோரிய ஆவணங்களை எல்லாம் எழும்பூர் கோர்ட்டு வழங்க வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக விசாரணையில் உள்ள வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அப்போது, டி.டி.வி.தினகரன் தரப்பு வக்கீல் குறுக்கிட்டு, ‘ஒரே பரிவர்த்தனை தொடர்பாக 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த 2 வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த 2 வழக்குகளையும் விசாரிக்க தடை விதித்துள்ளது’ என்று கூறினார்.
இதையடுத்து 6 மாதங்களுக்குள் வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை மட்டும் நீதிபதி ரத்து செய்தார். #TTVDhinakaran #Foreigncurrencycase






