search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fishermen clash"

    • பாலகுமார் உள்ளிட்ட 8 பேர் விசைபடகின் மூலம் ஆத்மநாதன் பைபர் படகில் வேகமாக மோதினர்.
    • கடலில் விழுந்து மாயமான காலாத்திநாதனை சகமீனவர்கள், கடலோர காவல் படையினர் தேடி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுக பகுதியை சேர்ந்தவர்கள் ஆத்மநாதன் (வயது 33), சிவநேசசெல்வம் (25), காலாத்திநாதன் (22). 3 பேரும் சகோதர்கள். இவர்கள் நேற்றிரவு பைபர் படகில் நாகை துறைமுகத்திற்கு கிழக்கே சுமார் 2 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த பாலகுமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், காளியப்பன், பாலகிருஷ்ணன், வேலாயுதம், மாரியப்பன், கண்ணன், தண்டயுதபாணி, பாலகுமார் உள்ளிட்ட 8 பேர் விசைபடகில் அங்கு மீன் பிடிக்க வந்தனர். பின்னர் ஆத்மநாதன் மீன் பிடிப்பதற்காக கடலில் விரித்து வைத்திருந்த வலையை அறுத்து விட்டு சென்றனர். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கோஷ்டி மோதலாக உருவெடுத்தது.

    இதில் ஆத்திரமடைந்த பாலகுமார் உள்ளிட்ட 8 பேர் விசைபடகின் மூலம் ஆத்மநாதன் பைபர் படகில் வேகமாக மோதினர். இதனால் பைபர் படகு நடுகடலில் கவிழ்ந்தது. அதில் இருந்த ஆத்மநாதன், சிவநேசசெல்வம், காலாத்திநாதன் ஆகிய 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். கடலில் விழுந்தவர்கள் கவிழ்ந்த பைபர் படகை பிடித்து கொண்டு நீந்தினர். இதைத் தொடர்ந்து பாலகுமார் உள்ளிட்ட 8 பேரும், கடலில் தத்தளித்த 3 பேரையும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இந்நிலையில் அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த நம்பியார்நகரை சேர்ந்த மீனவர்கள், கடலில் தத்தளித்தவர்களை மீட்க வந்தனர். இதற்குள் கடலில் விழுந்த காலாத்திநாதன் மாயமானார். இதைத் தொடர்ந்து ஆத்மநாதன், சிவநேசசெல்வம் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவநேசசெல்வம் இறந்தார். ஆத்மநாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீதர், காளியப்பன், பாலகிருஷ்ணன், வேலாயுதம், மாரியப்பன், கண்ணன், தண்டயுதபாணி உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். பாலகுமார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மேலும் கடலில் விழுந்து மாயமான காலாத்திநாதனை சகமீனவர்கள், கடலோர காவல் படையினர் தேடி வருகிறார்கள். அசம்பாவிதங்களை தடுக்க 2 கிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோஷ்டி மோதலில் மீனவர் ஒருவர் இறந்தது, கடலில் விழுந்து மீனவர் மாயம் ஆகிய சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூரில் மீனவர்கள் மோதலில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 20 பேர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #fishermenmurder

    கடலூர்:

    கடலூர் மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவர்கள் தனித்தனியாக பைபர் படகில் மீன்பிடித்த போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று காலை கடலில் மீன்பிடித்த போது மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தேவனாம்பட்டினம் மீனவர்கள் அரிவாள், கடப்பாரை, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சோனாங்குப்பம் பகுதிக்கு நடந்து சென்ற போது போலீஸ் சூப்பிரண்டு விஜய குமார் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்தனர்.

    ஆனால் அதையும் மீறி தேவனாம்பட்டினம் மீனவர்களில் சில பேர் சோனாங்குப்பத்துக்கு சென்று அங்கு வெளியில் நின்று கொண்டிருந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன்(65), பாண்டியன்(58) ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதை தடுக்க வந்த ஏழாயி உள்பட 2 பெண்களை தடியால் தாக்கினர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் பஞ்சநாதன் பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த பாண்டியன் உள்பட 3 பேருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் பற்றி கடலூர் துறைமுகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து தேவனாம்பட்டினத்தை சேர்ந்த கந்தன், சதீஷ், தன்ராஜ் உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய் தனர். அவர்களை தேடி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக 13 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். 2 மீனவ பகுதி மக்களிடம் வடக்கு மண்டல ஐ.ஜி.ஸ்ரீதர், டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.



    மோதல் சம்பவத்தால் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம் பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடை பெறாமல் தடுக்க இன்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீசார்கள் அந்த பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நகரின் முக்கிய பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் மோதலால் இன்று கடலுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.

    மீனவர்கள் மோதலில் பலியான பஞ்சநாதன் உடல் பிரேத பரிசோதனை முடிந்து சோனாங்குப்பத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அமைச்சர் எம்.சி.சம்பத், அ.தி.மு.க. நகர செயலாளர் குமரன் மற்றும் அ.தி.மு.க.வினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். கொலை செய்தவர்களை கைது செய்தால் தான் உடலை அடக்கம் செய்வோம் என்று பஞ்சநாதனின் உறவினர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். #fishermenmurder

    கடலூரில் மீனவர்கள் மோதலில் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர்:

    தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் நடந்து வருகிறது. மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. பைபர் படகு மூலம் மட்டும் கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், சோனாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்களுக்கும் இடையே பைபர் படகில் சென்று மீன்பிடிப்பது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

    இதனால் அந்த 2 பகுதி மீனவர்களுக்கிடைய முன்விரோதம் இருந்து வருகிறது. இன்று காலை தேவனாம் பட்டினத்தை சேர்ந்த 150 மீனவர்கள் அரிவாள், கடப்பாறை, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தேவனாம்பட்டினம் கடற்கரையில் திரண்டனர். அவர்கள் அங்கிருந்து சோனாங்குப்பத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பயங்கர ஆயுதங்களுடன் ஊர்வலமாக செல்லக் கூடாது என்றனர்.

    இதனால் போலீசாருக்கும், தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


    அப்போது தேவனாம்பட்டினம் மீனவர்களில் 15 பேர் தடையை மீறி திடீரென சோனாங்குப்பத்துக்கு அரிவாளுடன் சென்றனர். அங்கு வெளியில் நின்று கொண்டிருந்த சோனாங்குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன்(65), மற்றும் பாண்டியன்(58) ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த தாக்குதலில் பஞ்சநாதன், பாண்டியன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பஞ்சநாதன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். பாண்டியனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதையடுத்து சோனாங்குப்பத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் தேவனாம்பட்டினத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    அரிவாளால் வெட்டி விட்டு தப்பிஓடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews

    ×