நாகை மீனவர்கள் இடையே நடுக்கடலில் `திடீர்' மோதல்: வலையை அறுத்து வாக்குவாதம்

3 பைபர் படகுகளையும் விசைப்படகில் கட்டி இழுத்துச் சென்றனர். இரும்பு உருண்டை, ஐஸ்க ட்டி போன்றவற்றையும் வீசி தாக்குதல்.
நாகை மீனவர்கள் இடையே நடுக்கடலில் `திடீர்' மோதல்: வலையை அறுத்து வாக்குவாதம்
Published on

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் எல்லையம்மன் கோவில்தெருவை சேர்ந்த சத்யராஜ் (வயது 40) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த சற்குணம் (35), செந்தில் (50) வில்பிரட் ஆகியோர் கடந்த 28-ந்தேதி காலை செருதூர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இதேபோல், செருதூர் வடக்குத்தெருவை சேர்ந்த கணேசமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், அவரும் அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (40), ஆனந்தவேல் (38), அஜித் (24) ஆகியோரும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இதேபோல், செருதூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த செந்தில் (42) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் டி.ஆர்.பட்டினத்தை சேர்ந்த மணிவண்ணன் (28), காரைக்கால் மேடு பகுதியை சேர்ந்த அருள் வடிவேல் (40), சரவணன் பிள்ளை, சுனாமி குடியிருப்பை சேர்ந்த ரமேஷ் (38) ஆகியோரும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

அப்போது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தோப்புத்துறையில் இருந்து கிழக்கே சுமார் 23 நாட்டிகல் கடல் மைல் தொலைவில் தங்களது படகை நங்கூரம் இட்டு நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது அங்கு 2 விசைப்படகுகளில் வந்த மீனவர்கள் இவர்களது வலையை அறுத்துவிட்டு சென்றனர்.

இதுகுறித்து கேட்டதற்கு தங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மேற்கண்ட 3 பைபர் படகுகளையும் அவர்களது விசைப்படகில் கட்டி இழுத்துச் சென்றனர். அதோடு மட்டுமின்றி இரும்பு உருண்டை, ஐஸ்க ட்டி போன்றவற்றையும் வீசி தாக்கி உள்ளனர்.

பின்னர், காயங்களுடன் மீனவர்கள் நேற்று மாலை கரை திரும்பினர். தகவல் அறிந்ததும் சக மீனவர்கள் உதவியுடன் காயமடைந்த செந்தில், வில்பிரட், சத்தியமூர்த்தி ஆகியோர் சிகிச்சைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்தரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் மீனவ கிராமங்களில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com