என் மலர்
நீங்கள் தேடியது "Farmer loan"
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், விவசாயி. இவரது மகள் ரம்யா. இவர் கொத்தமங்கலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் கடந்த 2009ம் ஆண்டு ரூ.2.92 லட்சம் கடன் பெற்று புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் படித்து வந்தார்.
இந்த நிலையில் கஜா புயலால் ராஜேந்திரன் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த தென்னை மரங்கள் மற்றும் பயிர்கள் முழுமையாக சேதமடைந்தது.
இதற்காக தமிழக அரசு ரூ.34ஆயிரம் நிவாரணத்தொகையை அவரது வங்கி கணக்கில் செலுத்தியது. இது தொடர்பாக அவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ்.தகவல் வந்ததையடுத்து, ராஜேந்திரன் தொகையை பெற வங்கிக்கு சென்றார்.
அப்போது அந்த நிவாரண தொகையை வங்கி நிர்வாகம் மகளுக்காக வாங்கியிருந்த கல்வி கடனுக்கு வரவு வைத்து கொண்டது தெரியவந்தது. மேலும் ராஜேந்திரன், அவரது மனைவி ராணி ஆகியோருக்கு 100 நாள் வேலை திட்டத்தில் கிடைக்கும் தொகையையும் வங்கி வரவு வைத்தது தெரியவந்தது. இதனால் ராஜேந்திரன் அதிர்ச்சியடைந்தார்.
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன், வட்டி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ள நிலையில், வங்கி நிர்வாகத்தின்செயலால் அதிருப்தியற்ற ராஜேந்திரன், நிவாரணத்தொகையை பெற்று தரக்கோரி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்துள்ளார். மேலும் இது போன்று பலரின் நிவாரண தொகைகள் கடனுக்காக பிடித்தம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. #Gajastorm #Storm

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நம் நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு கடந்த 2017-18ஆம் நிதி ஆண்டில் வாராக்கடன் ரூ.9.61 லட்சம் கோடி என மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
ஒவ்வொரு நிதி ஆண்டிலும் பொதுத்துறை வங்கிகளுக்கு வாராக்கடன் இருப்பதாக அறிவிக்கும் அரசு, அந்த கடனை வசூல் செய்ய முறையான தொடர் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பது தான் உண்மை நிலை.
அரசு விவசாயிகளின் கடனை மட்டும் வசூல் செய்ய கெடுபிடி நடவடிக்கையில் ஈடுபட்டது. ஆனால் பெரு முதலாளிகள், தொழில் அதிபர்கள் போன்ற வசதி படைத்தவர்கள் வாங்கிய கடனை வசூல் செய்ய கெடுபிடி நடவடிக்கைகளை ஆரம்பக்கட்டத்திலேயே எடுக்க அரசு தவறிவிட்டது.
பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகள் கடன் கொடுப்பதில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை கடைப்பிடித்தனரா என்பதெல்லாம் கேள்விக்குறியே.
எனவே பொதுத்துறை வங்கிகளுக்கு வாராக்கடனாக உள்ள தொகையை வசூல் செய்ய வேண்டும். அதே சமயம் விவசாயிகள் வாங்கிய விவசாயக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
மத்திய பா.ஜ.க. அரசு- பொதுத்துறை வங்கிகளுக்கு முதலீடுகளை அதிகரிக்கும் விதமான அம்சங்கள் இருக்கும் வகையிலும், கடன் கொடுப்பதிலும், வசூல் செய்வதிலும், நியாயமாக கடன் வாங்க வருவோருக்கும், மாணவர்களுக்கும், சிறு குறு தொழில் முனைவோருக்கும் கடன் கொடுப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். விவசாய தொழில் பாதிக்கப்படும் போது விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் வகையிலும்- புதிய கொள்கை வகுத்து, செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #TamilMaanilaCongress #GKVasan






