search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity attacked"

    வேதாரண்யம் அருகே வயலில் கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி 2 பசுமாடுகள்- கன்றுக்குட்டி உயிரிழந்தன.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட உம்பளச்சேரி கீழ்பகுதியில் வசித்து வருபவர் திலகர்(வயது45). அதே ஊரை சேர்ந்தவர் சாந்தி(40). இவர்கள் 2 பேரும் தங்களது வீடுகளில் பசுமாடுகள் வளர்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திலகருக்கு சொந்தமான ஒரு பசுமாடு மற்றும் கன்று குட்டி ஒன்றும், சாந்திக்கு சொந்தமான பசுமாடும் அந்த பகுதியில் உள்ள ஒரு வயலில் சம்பவத்தன்று மோய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வயலில் சாய்ந்த கிடந்த மின்கம்பத்தில் சென்ற மின்கம்பியை மாடுகள் மிதித்துள்ளன. இதனால் மாடுகளை மின்சாரம் தாக்கியது. இதில் 2 பசுமாடுகளும், கன்றுக்குட்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாடுகளின் உரிமையாளர்கள் அங்கு வந்து பார்த்தனர். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 2 பசுமாடு, ஒரு கன்று குட்டி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பெருமாநல்லூர் அருகே வீட்டில் உள்ள மின் வயரை தெரியாமல் மிதித்ததில் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    பெருமாநல்லூர்:

    பெருமாநல்லூர் அருகே காளிபாளையம் அம்பாள் நகரில் வசித்து வந்தவர் வடிவேல்(வயது 35). பனியன் நிறுவன தொழிலாளி. இவருடைய மனைவி சுகன்யா(30). இவர்களுக்கு நவநீதன்(5) என்ற மகன் உள்ளான். இவர் குடியிருக்கும் வீட்டில் கீழ் மட்ட தொட்டியில் உள்ள தண்ணீரை வீட்டின் மேல் உள்ள தொட்டிக்கு மோட்டார் மூலம் தினமும் ஏற்றுவது வழக்கம். அதன்படி, நேற்று காலை வீட்டின் மேல் உள்ள தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்காக வடிவேல் மின்மோட்டாரை இயக்கினார். அப்போது, கீழே கிடந்த மின் வயரை அவர் தெரியாமல் மிதித்துவிட்டார். இதனால் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மின்மோட்டார் முறையாக பொருத்தப்படாமல் இருந்ததும், மோட்டாருக்கு மின் இணைப்பு கொடுக்க பயன்படுத்தப்பட்ட மின் வயர் டேப் சுற்றாமல் இருந்ததும், மின்மோட்டாரை இயக்கிவிட்டு, திரும்பிய போது மின்வயரை வடிவேல் மிதித்ததால், அவர் மின்சாரம் தாக்கி இறந்ததும் தெரியவந்தது. இதைதொடர்ந்து வடிவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

    மேலும் இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி பனியன் நிறுவன தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது. 
    ×