என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெருமாநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
Byமாலை மலர்22 July 2018 4:11 PM GMT (Updated: 22 July 2018 4:11 PM GMT)
பெருமாநல்லூர் அருகே வீட்டில் உள்ள மின் வயரை தெரியாமல் மிதித்ததில் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பெருமாநல்லூர்:
பெருமாநல்லூர் அருகே காளிபாளையம் அம்பாள் நகரில் வசித்து வந்தவர் வடிவேல்(வயது 35). பனியன் நிறுவன தொழிலாளி. இவருடைய மனைவி சுகன்யா(30). இவர்களுக்கு நவநீதன்(5) என்ற மகன் உள்ளான். இவர் குடியிருக்கும் வீட்டில் கீழ் மட்ட தொட்டியில் உள்ள தண்ணீரை வீட்டின் மேல் உள்ள தொட்டிக்கு மோட்டார் மூலம் தினமும் ஏற்றுவது வழக்கம். அதன்படி, நேற்று காலை வீட்டின் மேல் உள்ள தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்காக வடிவேல் மின்மோட்டாரை இயக்கினார். அப்போது, கீழே கிடந்த மின் வயரை அவர் தெரியாமல் மிதித்துவிட்டார். இதனால் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மின்மோட்டார் முறையாக பொருத்தப்படாமல் இருந்ததும், மோட்டாருக்கு மின் இணைப்பு கொடுக்க பயன்படுத்தப்பட்ட மின் வயர் டேப் சுற்றாமல் இருந்ததும், மின்மோட்டாரை இயக்கிவிட்டு, திரும்பிய போது மின்வயரை வடிவேல் மிதித்ததால், அவர் மின்சாரம் தாக்கி இறந்ததும் தெரியவந்தது. இதைதொடர்ந்து வடிவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி பனியன் நிறுவன தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது.
பெருமாநல்லூர் அருகே காளிபாளையம் அம்பாள் நகரில் வசித்து வந்தவர் வடிவேல்(வயது 35). பனியன் நிறுவன தொழிலாளி. இவருடைய மனைவி சுகன்யா(30). இவர்களுக்கு நவநீதன்(5) என்ற மகன் உள்ளான். இவர் குடியிருக்கும் வீட்டில் கீழ் மட்ட தொட்டியில் உள்ள தண்ணீரை வீட்டின் மேல் உள்ள தொட்டிக்கு மோட்டார் மூலம் தினமும் ஏற்றுவது வழக்கம். அதன்படி, நேற்று காலை வீட்டின் மேல் உள்ள தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்காக வடிவேல் மின்மோட்டாரை இயக்கினார். அப்போது, கீழே கிடந்த மின் வயரை அவர் தெரியாமல் மிதித்துவிட்டார். இதனால் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மின்மோட்டார் முறையாக பொருத்தப்படாமல் இருந்ததும், மோட்டாருக்கு மின் இணைப்பு கொடுக்க பயன்படுத்தப்பட்ட மின் வயர் டேப் சுற்றாமல் இருந்ததும், மின்மோட்டாரை இயக்கிவிட்டு, திரும்பிய போது மின்வயரை வடிவேல் மிதித்ததால், அவர் மின்சாரம் தாக்கி இறந்ததும் தெரியவந்தது. இதைதொடர்ந்து வடிவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி பனியன் நிறுவன தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X