என் மலர்
நீங்கள் தேடியது "DMK IT wing"
- டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் பல கார்களில் மாறி மாறி மறைந்திருந்தே போகும் மருமம் என்ன?
- பழனிசாமியுடன் இருப்பவர் யார்? அவர் ஏன் தன் முகத்தை மறைக்க வேண்டும்?
எடப்பாடி பழனிசாமியின் கள்ளக் கார் பயணங்களும், கேள்விகளும்!? என்று திமுக IT Wing தனது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக, திமுக ஐடி விங் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
1. வெள்ளை அரசு வாகனத்தில் சென்றதாக சொல்லும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வரும் போது எப்படி ரூ.8 கோடி மதிப்புள்ள DL2CAN 9009 பதிவெண் கொண்ட கருப்பு Bentley தனியார் சொகுசு காரில் வந்தார்?
2. டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் பல கார்களில் மாறி மாறி மறைந்திருந்தே போகும் மருமம் என்ன?
3. கட்சி தொடர்பான சந்திப்பு என்றால் கட்சியினர் உடனிருக்க வேண்டும், அரசு அலுவல் என்றால் அதிகாரிகள் உடனிருக்க வேண்டும், தனிப்பட்ட குடும்ப நிகழ்வென்றால் குடும்பத்தினர் இருக்கலாம்! ஆனால் திரு அமித்ஷா இல்லத்தில் இருந்து வெளியே வந்த காரில் பழனிசாமி உடன் இருந்தது யார்?
4. பழனிசாமியுடன் இருப்பவர் யார்? அவர் ஏன் தன் முகத்தை மறைக்க வேண்டும்?
5. அமைச்சருக்கு நிகரான கண்ணியமிக்க தமிழ்நாடு எதிர்க்கட்சித்தலைவர் பொறுப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது முகத்தை மறைத்துக் கொண்டு அமித்ஷா அவர்களின் இல்லத்திலிருந்து வெளியேறுவது ஏன்? என்ன அவசியம்? என்ன நிர்பந்தம்? எதை மறைக்கிறார்? யாரை மறைக்கிறார்?
செய்தியாளர் சந்திப்பில் தடுமாறும் பழனிச்சாமியிடம் இந்த கேள்விகளுக்கு பதிலுண்டா?
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- ஷெனாய் நகரில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் இன்று நடைபெற்றது.
- அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் நாணயம் இல்லாத நாணயத்தின் இரு பக்கங்கள் என்றார்.
சென்னை:
சென்னை ஷெனாய் நகரில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பாராட்டுகளைப் போலவே விமர்சனங்களையும் நான் விரும்புகிறேன்.
விமர்சனங்களில் தனிப்பட்ட நலனை விட பொதுநலன் தான் அதிகம் இருக்கும். எனவே அதை விரும்புகிறேன்.
தி.மு.க.வை கற்பனையில் கூட அழிக்க முடியாது.
கொள்கை என்றால் கிலோ எவ்வளவு என கேட்பது அ.தி.மு.க.
பாஜகவும், அதிமுகவும் நாணயம் இல்லாத நாணயத்தின் இரு பக்கங்கள்.
மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சமாட்டோம் என்பதால் பொய் மூட்டைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
போலியான பெருமைகள் தேவையில்லை, உண்மையான உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்தால் போதும்.
துர்கா ஸ்டாலின் கோவிலுக்குச் செல்வது அவரது தனிப்பட்ட விருப்பம்.
ஆரியத்திற்கு தான் நாங்கள் எதிரி, ஆன்மிகத்திற்கு அல்ல.
நமது கருத்துக்க்ள் தமிழகத்தைத் தாண்டி இந்தியா முழுமைக்கும் ஒலிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வு ரத்து இயக்கத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.






