என் மலர்
நீங்கள் தேடியது "Disqualified"
- மக்களவை செயலகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
- லட்சத்தீவு இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது
புதுடெல்லி:
கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற லட்சத்தீவு எம்.பி. முகமது பைசலை மக்களவை செயலகம் கடந்த ஜனவரி மாதம் தகுதி நீக்கம் செய்தது. இந்த தண்டனையை எதிர்த்து முகமது பைசல் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கீழ்கோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து ஜனவரி 25ம் தேதி உத்தரவிட்டது. இதனால் லட்சத்தீவு இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது.
இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட லட்சத்தீவு எம்பி. முகமது பைசல் மக்களவை செயலகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டு மற்றும் 10 ஆண்டு சிறைத்தண்டனைக்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தபிறகும், தகுதி நீக்கம் செய்யும் அறிவிப்பை மக்களவை செயலகம் திரும்பப் பெறவில்லை என முகமது பைசல் தனது மனுவில் கூறி உள்ளார்.
தகுதி நீக்கம் தொடர்பான அறிவிப்பை ரத்து செய்யாததால் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் நடப்பு கூட்டத்தொடரில் பங்கேற்க தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்தது. சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்தார்.
சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கொறடா உத்தரவை மீறி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரதுஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
பின்னர் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பி.எஸ். அணி இணைந்தது.
இதற்கிடையே ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. சார்பில் சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. அவர் நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டார்.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சபா நாயகர் முடிவில் தலையிட முடியாது என்று ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
இதை தொடர்ந்து தி.மு.க. சார்பில் சக்கரபாணி, டி.டி.வி. தினகரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.

இந்த நிலையில் ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எ.ஏ.க்கைளை தகுதி நீக்கம் செய்ய கோரும் மேல் முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரி தி.மு.க., டி.டி.வி. தினகரன் தரப்பில் முறையிடப்பட்டது.
ஆனால் விரைவாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் விரைவாக விசாரிக்க முடியாது. வழக்கை பட்டியலிட முயற்சி செய்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த வழக்கின் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கை விரைவாக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது. #SupremeCourt #OPS #MLADisqualify