search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DESTROYED BY FIRE"

    • வடிவேல் (50). இவரது தேங்காய் குடோன் கபிலர்மலை-ஜேடர்பா ளையம் செல்லும் சாலையில் உள்ள செம்மடைபாளையம் அருகே உள்ளது.
    • தேங்காய்கள் குவிக்கப்பட்டருந்த பகுதிக்கு மேலே மின் கம்பிகள் சென்று கொண்டி ருந்தபோது. காற்றின் காரணமாக மின்சார கம்பி களில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பொறிகள் தேங்காய் மட்டையில் விழுந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கபிலக்குறிச்சி ஊராட்சி தலைவராக இருப்பவர் வடிவேல் (50). இவரது தேங்காய் குடோன் கபிலர்மலை-ஜேடர்பா ளையம் செல்லும் சாலை யில் உள்ள செம்மடை பாளையம் அருகே உள்ளது.

    இதில் சுமார் ரூ. 8 லட்சம் தேங்காய்கள் குவிக்கப்பட்டு இருந்தது. தேங்காய் விலை குறைவாக இருப்பதால் தேங்காயை உரிக்காமல் குவிக்கப்பட்டு மேல் தேங்காய் மஞ்சு களை(நார்) போட்டு தேங்காய்களை மூடி வைத்தி ருந்தனர். அதற்கு மேல் தேங்காய்கள் உலராமல் இருக்க தேங்காய் மட்டை களை போட்டிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் தேங்காய்கள் குவிக்கப்பட்டருந்த பகுதிக்கு மேலே மின் கம்பிகள் சென்று கொண்டி ருந்தபோது. காற்றின் காரணமாக மின்சார கம்பி களில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பொறிகள் தேங்காய் மட்டையில் விழுந்தது. இதனால் தேங்காய் மட்டை மற்றும் தேங்காய் மஞ்சு களில்திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தேங்காய் குடோனில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர் .இருப்பினும் காற்றின் காரணமாக தீ வேகமாக பரவி எரிய ஆரம்பித்தது.

    இதுகுறித்து வடிவேல் நாமக்கல் தீயணைப்பு துறை யினருக்கும், வேலாயுதம்பா ளையம் தீயணைப்பு துறையினருக்கும் , ஜேடர்பாளையத்தில் உள்ள தீயணைப்பு வாகனத்திற்கும் தகவல் தெரிவித்தார்.

    தகவலின் அடிப்படையில் நாமக்கல் தீயணைப்பு துறை உதவி மாவட்டஅலுவலர் வெங்கடாசலம் தலைமை யிலான தீயணைப்பு வீரர்கள், வேலாயுதம்பா ளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள், ஜேடர்பாளை யத்தில் உள்ள தீயணைப்பு வாகனம் ஆகிய மூன்று வாகனங்களும் விரைந்து சென்று தேங்காய்களில் வேகமாக எரிந்து கொண்டி ருந்த தீயை சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அனைத்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுதனர்.

    இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் ரூ.75 லட்சம் மதிப்பிலான சுமார் 8 லட்சம் தேங்காய்கள் தீயில் எரிந்து நாசமாயின.

    • கால்நடைகளுக்கு தீவனமாக போடுவதற்காக வைக்கோல் போர் அவரது வீட்டின் அருகே வைத்திருந்தார்.
    • இந்நிலையில் நேற்று வைக்கோல் போரில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே நல்ல குமாரன்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் குப்பாயி (வயது 70). கூலித் தொழிலாளி. இவர் கால்நடைகளுக்கு தீவனமாக போடுவதற்காக வைக்கோல் போர் அவரது வீட்டின் அருகே வைத்திருந்தார்.

    இந்நிலையில் நேற்று வைக்கோல் போரில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்து கட்டுப்படுத்தி, தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

    இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பி–னும் ரூ.50 ஆயிரம் மதிப்பி–லான வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசமாயின.

    • குடிசை வீடு எரிந்து நாசமானது
    • 70 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலிக் கருப்பூர் வடக்கு காலனியை சேர்ந்த–வர் கிருஷ்ணன் மனைவி பார்வதி (70). கிருஷ்ணன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் பார்வதி மட்டும் தனியாக குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

    பார்வதி வெளியே சென்று விட்டு இரவு 7.30 மணி அளவில் வீட்டிற்கு வந்தார். அப்போதுதிடீரென அவரது குடிசை வீடு தீப்பி–டித்து எரிந்தது.

    இதைத் தொடர்ந்து அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வீட்டில் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் தீ பரவி வீடு முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதில் வீட்டில் வைத்திருந்த 5 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் 70 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

    மேலும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் தீயில் கருகி–யது. இச்சம்பவம் குறித்து தா.பழூர் காவல்துறை–யினர் வழக்குப்பதிந்து விசார–ணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடலூர் அருகே 3 கூரை வீடுகள் எரிந்து நாசமானது.
    • கடலூர் முதுநகர் அருகே வடுகப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வருகின்றார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் அருகே வடுகப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வருகின்றார். இன்று காலை திடீரென்று ராஜேந்திரன் கூரை வீட்டிலிருந்து புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர் புகைமண்டலம் தீயாக மாறியது. இந்த தீ அருகாமையிலிருந்த சுப்பராயலு என்பவரின் இரண்டு கூரை வீட்டிலும் பரவி எரியத் தொடங்கியது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவென பரவி எரிந்தததை தொடர்ந்து, தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவில் வந்து போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் 3 கூரை வீடும் முழுவதும் எரிந்து சாம்பலானது. மேலும் வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து தீக்கிரையானது. இதுகுறித்து கடலூர் முதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காட்சி அளித்தது.

    ×