search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சார கம்பிகள் உராய்வில் ஏற்பட்ட தீ விபத்தில்ரூ.75 லட்சம் மதிப்பிலான தேங்காய்கள் தீயில் எரிந்து நாசம்
    X

    தேங்காய் குடோனில் தீ எரிந்ததை தீயணைப்பு வீரர்கள் தீயைஅணைப்பதையும் எடுத்த படம்.

    மின்சார கம்பிகள் உராய்வில் ஏற்பட்ட தீ விபத்தில்ரூ.75 லட்சம் மதிப்பிலான தேங்காய்கள் தீயில் எரிந்து நாசம்

    • வடிவேல் (50). இவரது தேங்காய் குடோன் கபிலர்மலை-ஜேடர்பா ளையம் செல்லும் சாலையில் உள்ள செம்மடைபாளையம் அருகே உள்ளது.
    • தேங்காய்கள் குவிக்கப்பட்டருந்த பகுதிக்கு மேலே மின் கம்பிகள் சென்று கொண்டி ருந்தபோது. காற்றின் காரணமாக மின்சார கம்பி களில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பொறிகள் தேங்காய் மட்டையில் விழுந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கபிலக்குறிச்சி ஊராட்சி தலைவராக இருப்பவர் வடிவேல் (50). இவரது தேங்காய் குடோன் கபிலர்மலை-ஜேடர்பா ளையம் செல்லும் சாலை யில் உள்ள செம்மடை பாளையம் அருகே உள்ளது.

    இதில் சுமார் ரூ. 8 லட்சம் தேங்காய்கள் குவிக்கப்பட்டு இருந்தது. தேங்காய் விலை குறைவாக இருப்பதால் தேங்காயை உரிக்காமல் குவிக்கப்பட்டு மேல் தேங்காய் மஞ்சு களை(நார்) போட்டு தேங்காய்களை மூடி வைத்தி ருந்தனர். அதற்கு மேல் தேங்காய்கள் உலராமல் இருக்க தேங்காய் மட்டை களை போட்டிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் தேங்காய்கள் குவிக்கப்பட்டருந்த பகுதிக்கு மேலே மின் கம்பிகள் சென்று கொண்டி ருந்தபோது. காற்றின் காரணமாக மின்சார கம்பி களில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பொறிகள் தேங்காய் மட்டையில் விழுந்தது. இதனால் தேங்காய் மட்டை மற்றும் தேங்காய் மஞ்சு களில்திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தேங்காய் குடோனில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர் .இருப்பினும் காற்றின் காரணமாக தீ வேகமாக பரவி எரிய ஆரம்பித்தது.

    இதுகுறித்து வடிவேல் நாமக்கல் தீயணைப்பு துறை யினருக்கும், வேலாயுதம்பா ளையம் தீயணைப்பு துறையினருக்கும் , ஜேடர்பாளையத்தில் உள்ள தீயணைப்பு வாகனத்திற்கும் தகவல் தெரிவித்தார்.

    தகவலின் அடிப்படையில் நாமக்கல் தீயணைப்பு துறை உதவி மாவட்டஅலுவலர் வெங்கடாசலம் தலைமை யிலான தீயணைப்பு வீரர்கள், வேலாயுதம்பா ளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள், ஜேடர்பாளை யத்தில் உள்ள தீயணைப்பு வாகனம் ஆகிய மூன்று வாகனங்களும் விரைந்து சென்று தேங்காய்களில் வேகமாக எரிந்து கொண்டி ருந்த தீயை சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அனைத்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுதனர்.

    இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் ரூ.75 லட்சம் மதிப்பிலான சுமார் 8 லட்சம் தேங்காய்கள் தீயில் எரிந்து நாசமாயின.

    Next Story
    ×