என் மலர்
நீங்கள் தேடியது "death student"
ஆலந்தூர்:
மடிப்பாக்கம், மேடவாக்கம் மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருபவர் சங்கர். இவரது மகன் திருக்கார்த்திக்கேயன்(வயது 12) நங்கநல்லூரியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த திருக்கார்த்திகேயன் அறையில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது தாயின் துப்பட்டாவை துணிகள் தொங்கவிடும் கம்பியில் போட்டு விட்டு மறுமுனையை தனது கழுத்தில் சுற்றி விளையாடினான்.
இதனை அவனது தாய் கவனிக்கவில்லை. சிறிது நேரத்தில் விளையாட்டாக சுற்றிய துப்பட்டா திருக்கார்த்திகேயனின் கழுத்தை இறுக்கியது. இதில் அவன் மயங்கி விழுந்தான்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் கூச்சலிட்டார். திருக்கார்த்திகேயனை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.டாக்டர்கள் பரிசோதித்த போது திருக்கார்த்திகேயன் ஏற்கனவே இறந்து விட்டது. தெரிந்தது. அவனது உடலை கண்டு பெற்றோர் கதறி அழுந்தது பரிதாபமாக இருந்தது.
அவனுக்கு இன்று அரையாண்டு தேர்வு தொடங்க இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மடிப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கோவை:
திருப்பூர் காங்கேயம் ரோடு, சின்ன செம்மேடு பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் வசந்த குமார்(வயது 14). பெற்றோரை இழந்த இவர் கோவையை அடுத்த கோவில் பாளையத்தில் உள்ள அரசு விடுதியில் தங்கி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார்.
நேற்று விடுதியில் இருந்து வெளியே சென்ற வசந்தகுமார் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் அவரது நண்பர்கள் அப்ப குதியில் தேடிப் பார்த்தனர். அப்போது கவுசிகா நதியையொட்டிய குட்டையில் மூழ்கிய நிலையில் வசந்த குமார் மிதந்தார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள் சத்தம் போட்டனர். அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து வசந்தகுமாரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
தகவலின்பேரில் கோவில் பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசரணை நடத்தினர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நதியில் தண்ணீர் அதிகமாக ஓடியது. மேலும் அப்பகுதியில் சகதியும் அதிகமாக இருந்துள்ளது.
மாணவர் வசந்தகுமார் குட்டையில் இறங்கிய போது எதிர்பாராதவிதமாக சகதியில் சிக்கி இறந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






