search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "culprit arrested"

    மதுரவாயல் ஏடிஎம் பணம் கொள்ளையில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    மதுரவாயலை அடுத்த நூம்பல் மூவேந்தர் நகரில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். மையத்தில் கடந்த மாதம் 7-ந்தேதி பணம் நிரப்ப தனியார் நிறுவன ஊழியர்களான தேவராஜ், முரளி ஆகியோர் வந்தனர்.

    அப்போது அவர்களை மோட்டார் சைக்கிளில் வந்த 2 கொள்ளையர்கள் தாக்கி ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

    40 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் இரவு இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய நைஜீரியாவைச் சேர்ந்த அக்யோ மாயே. ஆமு மற்றும் சென்னை மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கிரேயா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் அளித்த தகவலின்படி மைசூர் சென்ற தனிப்படை போலீசார் அங்கு பதுங்கி இருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பெரல் என்பவரை இன்று காலை கைது செய்தனர்.

    இதில் அக்யோ மாயே மற்றும் பெரல் இருவரும் சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து பின்னர் பாதியிலேயே வெளியேறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

    கடலாடியில் கடைக்குள் புகுந்து வியாபாரியை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். இதை கண்டித்து இன்று வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

    கடலாடி:

    ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அதே பகுதியில் இரும்புக்கடை வைத்துள்ளார். நேற்று குருப்பெயர்ச்சி என்பதால் சீனிவாசன் மாரியூரில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டார். இதன் காரணமாக சீனிவாசனின் உறவினர் முதுகுளத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி (வயது 54) கடையில் இருந்தார்.

    இரவு 8 மணியளவில் மோட்டார் சைக்கிளில் கடைக்கு வந்த மர்ம கும்பல் திடீரென்று கண் இமைக்கும் நேரத்தில் ராமமூர்த்தியை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது.

    ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமானதால் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ராமமூர்த்தி அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சீனிவாசனை கொலை செய்யும் முயற்சியில் வந்த கும்பல் ஆள் மாறி ராமமூர்த்தியை அரிவாளால் வெட்டிவிட்டுச் சென்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    கடைக்குள் புகுந்து வியாபாரியை அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குற்றவாளிகளை கைது செய்யக்கோரி இன்று கடலாடியைச் சேர்ந்த வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

    களக்காட்டில் வைரக்கற்கள் கடத்தலில் ஈடுபட்டு 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசார் நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
    களக்காடு:

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வைரக்கற்கள் உள்ளது. இதை கொள்ளையடித்து செல்ல பலரும் முயற்சி செய்தனர். இதையடுத்து கடந்த 1999-ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த ஒரு கும்பல் களக்காடு மலைப்பகுதியில் உள்ள வைரக்கற்களை திருடிச்செல்ல முயன்றனர். இதையறிந்த வனத்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றனர். இதில் அவர்களுக்குள் கடும் சண்டை ஏற்பட்டது. அப்போது வனத்துறையினர் மீது அந்த கும்பல் வெடிகுண்டுகளை வீசி தாக்கினர்.

    இதையடுத்து வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதில் சிலர் கைது செய்யப்பட்டனர்.

    இது தொடர்பான வழக்கு நாங்குநேரி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கேரள மாநிலம் நெடுமங்காட்டை சேர்ந்த சுரேந்திரன் (வயது72) என்பவர் வழக்கில் ஆஜராகாமல் கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.

    இதையடுத்து தலைமறைவான சுரேந்திரனை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். களக்காடு இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு சுரேந்திரனை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    இந்நிலையில் இன்று கேரளாவில் பதுங்கி இருந்த சுரேந்திரனை தனிப்படை போலீசார் கைது செய்து நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    சென்னை விமான நிலையத்தில் டெல்லி போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    ஹாங்காங்கில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று நள்ளிரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரி சோதித்தனர்.

    சென்னையை சேர்ந்த கோபி என்பவரது ஆவணங்களை சரிபார்த்த போது அவர் போலி பாஸ்போர்ட் வழக்கில் டெல்லி போலீசாரால் கடந்த 2 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி என்பது தெரிந்தது. இதையடுத்து கோபியை கைது செய்தனர். இதுபற்றி விமான நிலைய போலீசார் டெல்லி போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். #tamilnews
    ×