search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crime incidents"

    • அமைச்சர் துரைமுருகன் பேச்சு
    • தொடர் குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் அருகே ரூ15 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை மற்றும் செங்கோட்டையில் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ரேசன் கடையை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்,

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் ரேசன் கடைகளில் வழங்கப்பட்ட பொருட்கள் தரமானதாக இருந்ததில்லை என பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது தமிழ்நாட்டில் அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்கப்படும் பொருட்கள் தரமான பொருட்களாக இருக்க வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் காரணமாக அனைத்து ரேசன் கடைகளிலும் தரமான பொருட்கள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    காட்பாடியில் 200 படுக்கை கொண்ட பல்நோக்கு மருத்துவமனை இந்தாண்டு தொடங்கப்படும்.காட்பாடியில் கூடுதலாக ெரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    காட்பாடி பகுதியில் செயின் பறிப்பு உள்ளிட்ட ஏராளமான குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதலாக போலீஸ் நிலையம் கொண்டு வரப்படும்.இந்த ஆண்டு காட்பாடியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். அங்கு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    கதிர்ஆனந்த் எம்.பி., மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், 1-வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தினமும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலை, கல்வி, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
    • நிறைய பேர் வீண் அலைச்சல் என்று போலீசில் புகார் செய்வதில்லை.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக பல்லடம் உள்ளது. விசைத்தறி, மற்றும் கறிக்கோழி உற்பத்தி தொழில்கள் வளர்ச்சி காரணமாக, மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு இணையான கட்டமைப்பு வசதிகள், அடிப்படை தேவைகள் அதிகரித்துள்ளன.இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை,திருச்சி, உடுமலை,பொள்ளாச்சி, மதுரை,போன்ற ஊர்களுக்கு செல்ல தினமும் சுமார் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லும். தினமும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலை, கல்வி, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்து வருவதால் இங்கு அடிக்கடி குற்றச் சம்பவங்கள் நடைபெறுகிறது. வழிப்பறி மற்றும் திருட்டு உள்ளிட்டவைகள் தினமும் நடைபெறுவதால், பல்லடம் பஸ் நிலையம் என்றாலே வெளியூர் பயணிகள் அச்சத்துடன் வரும் நிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று உடுமலையைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவர் சத்தியமங்கலத்தில் இருந்து உடுமலை செல்வதற்காக பல்லடம் பஸ் நிலையம் வந்துள்ளார். உடுமலை பஸ் ஏறுவதற்கு முயன்ற போது இவரது சட்டை பையில் வைத்திருந்த செல்போனை மர்ம நபர் திருடிவிட்டார். இவர் சட்டைபையை தொட்டுப் பார்த்தபோது செல்போன் இல்லை.

    இதைத்தொடர்ந்து படிக்கட்டில் நின்றிருந்த ஒருவர் வேகமாக பஸ்சை விட்டு இறங்கினார். உடனே இவரும் இறங்கி அவரைப் பிடித்து எனது செல்போனை கொடு என கேட்டபோது, அவர் நான் எடுக்கவில்லை எனக் கூறிவிட்டார். இதையடுத்து இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அக்கம்-பக்கம் உள்ளவர்கள் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடம் வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-பல்லடம் பஸ் நிலையத்தில் தினமும், இது போன்ற செல்போன் திருட்டு, பணம் திருட்டு சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. நிறைய பேர் வீண் அலைச்சல் என்று போலீசில் புகார் செய்வதில்லை. இதனால் திருடர்களுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது. இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்எனஅவர்கள் தெரிவித்தனர்.

    • அருப்புகோட்டையில் பூட்டிய வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • தொடரும் குற்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    அருப்புகோட்டை

    அருப்புகோட்டையில் மீண்டும் பூட்டிய வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது

    பத்திரம் சவுண்டு செட்டியார் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார். கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி முருகேஸ்வரி நேற்று அதிகாலை சிவகாசியில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றார்.

    சரவண குமார் வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு வெளியே உள்ள ஜன்னலில் சாவியை வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார். மதியம் வந்து வீட்டை திறந்து உள்ளே சென்று தூங்கி உள்ளார். மாலையில் அவரது மனைவி முருகேஸ்வரி வீட்டிற்கு வந்தார். வீட்டில் உள்ள பீரோவை திறந்து உள்ளார். அப்போது மிளகாய் பொடி வாடை அடித்துள்ளது.

    மேலும் சேலைகளுக்குள் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து வருவதால் அருப்புக்கோட்டை பகுதி மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர் .

    தமிழக அரசு உடனடியாக காவல்துறையை முடுக்கிவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அருப்புகோட்டையில் சில மாதங்களாக தொடர் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. எம்.டி.ஆர். நகரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியினர் இரட்டை கொலை, கோபாலபுரத்தில் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம், காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் சந்தேக மரணம், பூட்டிய வீட்டில் அடுத்தடுத்து கொள்ளை, இப்படி தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    • சிவகாசியில் கூடுதல் எஸ்பியாக பணியாற்ற தொடங்கியவர் அதன்பின்னர் சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றியுள்ளார்.
    • எந்நேரமும் எந்தவித தகவல் என்றாலும் தொடர்பு கொள்ள தனது செல் நம்பரை வெளியிட்டுள்ளார் 94899 46674. குற்றங்களை தடுக்க தனிப்படை அமைக்கப்படும் என்றார்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டாக இருந்த நிஷாபார்த்திபன் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டதால் புதுக்கோட்டைக்கு வந்திதா பாண்டே நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டாக பதவியேற்றுக் கொண்டார்.

    அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- நான் உத்தரபிரசேத மாநிலம் அலகாபாத்தை சேர்ந்தவர். 2011 ஆண்டு பேட்ஜில் படித்து முடித்தவர். சிவகாசியில் கூடுதல் எஸ்பியாக பணியாற்ற தொடங்கியவர் அதன்பின்னர் சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றியுள்ளார்.

    அதன்பின்னர் கரூர் மாவட்ட எஸ்பியாக பணியாற்றியுள்ளார். அதன்பின்னர் பட்டாலியன் படையில் பணியாற்றிவிட்டு தற்போது மீண்டும் எஸ்பியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியில் சேர்ந்துள்ளேன் என்றார்.

    சட்டம் ஒழுங்கை திறம்பட கையாளுவேன். அதைவிட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்களை முழுமையாக குறைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார். எந்நேரமும் எந்தவித தகவல் என்றாலும் தொடர்பு கொள்ள தனது செல் நம்பரை வெளியிட்டுள்ளார் 94899 46674. குற்றங்களை தடுக்க தனிப்படை அமைக்கப்படும் என்றார்.

    ×