search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Community BabyShower"

    • மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி 100 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, புடவை, வளையல், பூ, இனிப்பு வகைகள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை வழங்கினார்
    • மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

    தூத்துக்குடி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவிற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி தலைமை தாங்கி 100 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, புடவை, வளையல், பூ, மஞ்சள், குங்குமம், தேங்காய், பழம், இனிப்பு வகைகள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை வழங்கினார். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராஜன், பானு, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி பாலமுருகன், வெள்ளூர் பஞ்சாயத்து தலைவர் குமார் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சாத்தான்குளம் யூனியனில் ஊட்டச்சத்து மாதத்தையொட்டி சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரம்மசக்தி பங்கேற்று 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் யூனியனில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாதத்தையொட்டி சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. சாத்தான்குளம் யூனியன் தலைவர் ஜெயபதி தலைமை தாங்கினார். சாத்தான்குளம் பேரூராட்சி தலைவர் ரெஜினி ஸ்டெல்லா மேரி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜோசப், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் வசந்தா வரவேற்றார். வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்திரி திட்டத்தை விளக்கி பேசினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரம்மசக்தி பங்கேற்று 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி சீர் வரிசை பொருட்களை வழங்கினார்.

    இதில் ஒன்றிய ஆணையாளர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கருப்பசாமி, வட்டார மருத்துவ அலுவலர் ஐலின்சுமதி, பேரூராட்சி செயல் அலுவலர் உஷா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் ஊட்டச்சத்து பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குழந்தை வளர்ச்சி திட்ட வட்டார மேற்பார்வையாளர் புஷ்பா நன்றி கூறினார்.

    • ஆழ்வார்திருநகரி யூனியன் அலுவலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • கர்ப்பிணி பெண்களுக்கு புடவை, வளையல், பூ, இனிப்பு வகைகள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் ஆழ்வார் திருநகரி யூனியன் அலுவல கத்தில் கர்ப்பிணி பெண்க ளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    விழாவிற்கு ஆழ்வார் திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை தாங்கி னார். வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெகோலியா வரவேற்று பேசினார். மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி திட்ட விளக்க உரையாற்றினார்.

    விழாவில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, புடவை, வளையல், பூ, மஞ்சள், குங்குமம், தேங்காய், பழம், இனிப்பு வகைகள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை வழங்கினார். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது. விழாவில், திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்ச ந்திரன், ஏரல் தாசில்தார் கைலாச குமார சாமி, ஆழ்வார் திரு நகரி யூனியன் ஆணை யாளர் பாக்கியம் லீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் ராம ஜெயம், ஆழ்வை ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், நவீன்குமார், தென்திருப்பேரை பேரூ ராட்சி தலைவர் மணி மேகலை ஆனந்த், கவுன்சிலர் ஆனந்த், ஆழ்வை மத்திய ஒன்றிய அவைத் தலைவர் மகர பூசணம், நகர செயலா ளர் முத்து வீரபெருமாள், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் விஜ யன், வட்டார மருத்துவ அலு வலர் பார்த்தீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவில் கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.
    • அங்கன்வாடி பணியாளர்கள் ஒயிலாட்டம், கும்மியாட்டம் நடனமாடி கர்ப்பிணிகளை மகிழ்வித்தனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பல்நோக்கு திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்சி திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலங்குளம் வட்டார குழந்தை வளர்ச்சி அலுவலர் மங்கள நாயகி தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணி கண்டன், துணை சேர்மன் செல்வக் கொடி ராஜாமணி, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் முத்துலெட்சுமி அன்பழகன், பள்ளி சிறார் மருத்துவர் சித்ரா, நெட்டூர் வட்டார சுகாதார மேற்பார் வை யாளர் கங்காதரன், புள்ளி யல் ஆய்வாளர் சண்முக சுந்தரம், உணவு பாதுகாப்பு அலுவலர் மகாராஜன் ஆகி யோர் சிறப்பு அழைப்பா ளர்களாக கலந்து கொண்டனர். விழாவில் கர்ப்பிணி களுக்கு வளையல் அணி வித்து வளைகாப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடை பெற்றது. சேலை, பழ ங்கள்,சத்துமாவு அடங்கிய சீர் வரிசைகள் வழங்க ப்பட்டது. 5 வகை யான உணவுகள் வழங்க ப்பட்டது.

    இதில் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 120 கர்ப்பிணிகள் பங்கேற்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் ஒயிலாட்டம், கும்மியாட்டம் நடனமாடி கர்ப்பிணிகளை மகிழ் வித்தனர். விழாவில் பங்கேற்றவர்கள் அர்சதை தூவி கர்ப்பிணிகளுக்கு ஆசி வழங்கினர்.

    ×