search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seervarisi Things"

    • மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி 100 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, புடவை, வளையல், பூ, இனிப்பு வகைகள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை வழங்கினார்
    • மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

    தூத்துக்குடி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவிற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி தலைமை தாங்கி 100 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, புடவை, வளையல், பூ, மஞ்சள், குங்குமம், தேங்காய், பழம், இனிப்பு வகைகள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை வழங்கினார். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராஜன், பானு, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி பாலமுருகன், வெள்ளூர் பஞ்சாயத்து தலைவர் குமார் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×