search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coconut shells"

    • சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி நடந்தது.
    • பொதுமக்களுக்கு டெங்கு கொசு பற்றியும், அது பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் தெரிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் பல்வேறு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    மரைக்கான்சாவடி, தைக்கால் தெரு, ஆற்றங்கரை தெரு, இந்திராநகர், ஆலங்கு டிச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவுறுத்தலின் பேரில் டெங்கு கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது.

    இந்த பணிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா, செயல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், அலுவலக உதவியாளர் மாதவன் மற்றும் டெங்கு ஒழிப்பு களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று அங்குள்ள குப்பைகள், தேங்காய் மட்டைகள், டயர்கள், உடைந்த கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் கழிவுப் பொருட்களை அகற்றி கொசு மருந்துகளை தெளித்து பொதுமக்களுக்கு டெங்கு கொசு பற்றியும் அது பரவாமல் தடுக்கும் வழிமுறைகளையும் தெரிவித்தனர்.

    • தேங்காய் சிரட்டை முழுவதும் சாலையில் கொட்டியது.
    • மிகப்பெரிய விபத்து அந்த இடத்தில் தவிர்க்கப்பட்டது.

    பல்லடம் :

    காங்கேயம் பகுதியில் இருந்து பல்லடம் நோக்கி தேங்காய் சிரட்டை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதிகாலை 4 மணியளவில் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது திடீரென சாலையில் கவிழ்ந்து விழுந்தது.

    இதில் தேங்காய் சிரட்டை முழுவதும் சாலையில் கொட்டியது. இதனால் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த இடத்தில் கோவை மற்றும் பல்லடம் பகுதிக்கு செல்வதற்கான பேருந்து நிறுத்தம் என்பதால் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். அதிகாலை நேரம் என்பதால் அங்கு யாரும் இல்லை. இதனால் மிகப்பெரிய விபத்து அந்த இடத்தில் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீசார் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    ×