search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "child marriage stop"

    • குழந்தை திருமண சட்டத்தின்படி 18 வயதுக்குள் பெண்ணுக்கும், 21 வயதுக்குள் ஆணுக்கும் திருமணம் செய்ய கூடாது.
    • திருமணத்திற்கு உடந்தையாக இருக்கும் பூசாரி முதல் அனைத்து உறவினர்கள், பங்கேற்பவர்கள், திருமணத்திற்கு இடம் அளிப்பவர்கள் என அனைவரும் தண்டனைக்கு உரியவர்கள்.

    அன்னூர்:

    அன்னூர் வட்டாரத்தில் குழந்தை திருமணம் நடப்பதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து அன்னூர் வட்டார சமூக நல பிரிவு அலுவலர் வள்ளி, கிராம சேவகர்கள் லட்சுமி, ராஜாமணி, சைல்டு லைன் நிர்வாகி கல்பனா ஆகியோர் புகார் வந்த காரே கவுண்டன்பாளையம், அச்சம்பாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம், செந்தாம்பாளையம், கஞ்சப்பள்ளி, அல்லிகுளம் என 4 இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது இந்த 4 கிராமங்களிலும் 14, 15, 16, 17 வயது குழந்தைகளுக்கு திருமணம் நடக்க இருப்பதை அறிந்தனர். உடனடியாக சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, குழந்தைகளின் பெற்றோரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். மேலும் அவர்களிடம் இதுபோன்று செய்யக்கூடாது என எச்சரித்தனர்.

    மேலும் தங்கள் பெண் குழந்தைகளுக்கு 18 வயது முடியும் வரை திருமணம் செய்து வைக்க மாட்டோம் என உறுதி மொழி எழுதி வாங்கி விட்டு வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சமூக நலத்துறை அலுவலர்கள் கூறியதாவது:-

    குழந்தை திருமண சட்டத்தின்படி 18 வயதுக்குள் பெண்ணுக்கும், 21 வயதுக்குள் ஆணுக்கும் திருமணம் செய்ய கூடாது. திருமணத்திற்கு உடந்தையாக இருக்கும் பூசாரி முதல் அனைத்து உறவினர்கள், பங்கேற்பவர்கள், திருமணத்திற்கு இடம் அளிப்பவர்கள் என அனைவரும் தண்டனைக்கு உரியவர்கள். மணமகன் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்படும்.

    தற்போது நடக்க இருந்த 4 திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களது பெற்றோரை எச்சரித்து உரிய அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி உள்ளோம். தொடர்ந்து அவர்களை கண்காணித்து வருகிறோம்.

    18 வயது பூர்த்தியடையாத பெண் குழந்தைக்கு திருமணம் நடந்தால் அந்த பெண் தோழிகள், அண்டை வீட்டார் என யாராக இருந்தாலும் உடனடியாக 1098 என்ற எண்ணுக்கு 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம்.

    தொலைபேசியில் தகவல் தெரிவிப்பவர்களின் பெயர், முகவரி ரகசியம் பாதுகாக்கப்படும். இத்துடன் 1091, 181 ஆகிய எண்களிலும் தகவல் தெரிவிக்கலம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தேன்கனிக்கோட்டை அருகே 2 இளம்வயது திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உட்பட்ட உட்பட்ட தட்டகரை பகுதியை சேர்ந்த, 24 வயது வாலிபருக்கும், 17 வயது 11 மாதம் மட்டும் பூர்த்தியான சிறுமிக்கும், திருமண ஏற்பாடுகள் நடந்தது. இது குறித்து, வருவாய்த்துறை அலுவலர்களுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தாசில்தார் முத்துபாண்டி உத்தரவின் பேரில், பெட்டமுகிலாளம் கிராம நிர்வாக அலுவலர் ராமன் தலைமையிலான அதிகாரிகள், கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    இதில், திருமண ஏற்பாடுகள் நடந்த சிறுமிக்கு, 17 வயது, 11 மாதம் மட்டுமே பூர்த்தியானது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமிக்கு நடக்க இருந்த இளம்வயது திருமண ஏற்பாடுகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பெற்றோருக்கு அறிவுரை கூறினர். பின்னர் அதிகாரிகள், பெற்றோரை அழைத்து சிறுமிக்கு தற்போது திருமணம் செய்ய கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.

    இதேபோல தேன்கனிக்கோட்டையை அடுத்த இருதுகோட்டை திருமாநகரில் 12 வயது சிறுமிக்கு இளம்வயது திருமணம் இன்று (புதன் கிழமை) நடைபெற இருந்தது. தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று சிறுமிக்கு நடக்க இருந்த இளம்வயது திருமணத்தை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் இருவீட்டு பெற்றோர் மற்றும் மணமகனை அதிகாரிகள் எச்சரித்தனர்.
    பேரணாம்பட்டு அருகே 17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் ரங்கம்பேட்டையை சேர்ந்த சின்னத்தம்பி (வயது 25) என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவரின் பெற்றோரும் முடிவு செய்திருந்தனர். இவர்களது திருமணம் மார்ச் 10-ந் தேதி நடக்க இருந்தது. ஆனால் பெண்ணுக்கு 18 வயது ஆவதற்குள் திருமணம் செய்வது குற்றமாகும்.

    இது குறித்து தகவல் அறிந்த பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய சமூக நல அலுவலர் மகாராணி, எருக்கம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் பைரவி ஆகியோர் நேற்று மாலை எருக்கம்பட்டு கிராமத்திற்கு சென்று சிறுமியின் வீட்டில் விசாரணை நடத்தினர். அதில் சிறுமிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது உண்மை என தெரியவந்தது. இதனையடுத்து திருமண ஏற்பாடுகளை அவர்கள் தடுத்து நிறுத்தி பெற்றோரை எச்சரித்தனர். அதனை தொடர்ந்து சிறுமியை மீட்டு வேலூரில் உள்ள அரசினர் பிற்காப்பு மகளிர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.
    திண்டிவனம் அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அச்சிறுமி விழுப்புரம் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே பாமூண்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது 28). இவர் புதுவையில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் ஊரல் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் வருகிற 25-ந் தேதி திண்டிவனம்-செஞ்சி ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் தீவிரமாக செய்து வந்தனர்.

    இந்நிலையில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக திண்டிவனம் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, ரோசனை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் மற்றும் போலீசார், வருவாய் ஆய்வாளர் விஜயபாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் உமாராணி, சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் கமலாட்சி ஆகியோர் 17 வயது சிறுமியின் வீட்டுக்கு சென்று, அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது 18 வயதுக்குட்பட்ட சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதையடுத்து, சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. 17 வயது சிறுமி விழுப்புரம் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
    ×