search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tindivanama"

    திண்டிவனம் அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அச்சிறுமி விழுப்புரம் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே பாமூண்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது 28). இவர் புதுவையில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் ஊரல் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் வருகிற 25-ந் தேதி திண்டிவனம்-செஞ்சி ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் தீவிரமாக செய்து வந்தனர்.

    இந்நிலையில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக திண்டிவனம் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, ரோசனை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் மற்றும் போலீசார், வருவாய் ஆய்வாளர் விஜயபாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் உமாராணி, சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் கமலாட்சி ஆகியோர் 17 வயது சிறுமியின் வீட்டுக்கு சென்று, அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது 18 வயதுக்குட்பட்ட சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதையடுத்து, சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. 17 வயது சிறுமி விழுப்புரம் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
    ×