search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandigarh mayor post"

    • ஆம் ஆத்மி வேட்பாளருக்கு விழுந்த சில வாக்குகளை செல்லாத வாக்குகளாக அறிவித்ததை தேர்தல் அதிகாரி ஒப்புக்கொண்டார்.
    • திடீரென கடந்த மாதம் 19-ந்தேதி ஆம் ஆத்மியின் மூன்று கவுன்சிலர்கள் பாஜகவுக்கு தாவினர்.

    சண்டிகரில் மேயர் தேர்தலின்போது ஆம் ஆத்மி வேட்பாளர் 20 வாக்குகள் பெற்றிருந்தார். பாஜக வேட்பாளர் 16 வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால் தேர்தல் அதிகாரி ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த 8 வாக்குகள் செல்லாது என தெரிவித்ததுடன், பாஜக மேயர் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

    ஆம்ஆத்மி- காங்கிரஸ் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கு அதிக வாக்குகள் விழுந்த நிலையில் தேர்தல் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அப்போது, ஆம் ஆத்மி வேட்பாளருக்கு விழுந்த சில வாக்குகளை செல்லாத வாக்குகளாக அறிவித்ததை தேர்தல் அதிகாரி ஒப்புக்கொண்டார்.

    அதன்பின் மேயர் தேர்தல் மீண்டும் எண்ணப்பட்டது. அப்போது பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் தோற்கடிக்கப்பட்டார். ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

    இதனிடையே திடீரென கடந்த மாதம் 19-ந்தேதி ஆம் ஆத்மியின் மூன்று கவுன்சிலர்கள் பாஜகவுக்கு தாவினர்.

    இதனையடுத்து சண்டிகர் சீனியர் துணை மேயர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. 35 உறுப்பினர்களை கொண்ட மாநராட்சியில் பாஜக வேட்பாளர் குல்ஜீத் சிங் சந்து 19 வாக்குகள் வெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் குர்ப்ரீத் காபி 16 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதில், ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் கட்சி தாவியதால் தான் பாஜக வேட்பாளர் வெற்றி பெற முடிந்தது.

    சண்டிகர் மேயர் பதவியில் ஆம் ஆத்மி உள்ள நிலையில், சீனியர் துணை மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளில் பாஜக உள்ளது.

    இந்நிலையில், சண்டிகரில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவிய 2 கவுன்சிலர்கள் மீண்டும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். பாஜகவில் இணைந்த 3 கவுன்சிலர்களில் பூனம் தேவி மற்றும் நேஹா முசாவத் ஆகிய இரு பெண் கவுன்சிலர்கள் ஆம் ஆத்மியில் இணைந்தனர்.

    அதே சமயம் கட்சி தாவிய ஆம் ஆத்மி கவுன்சிலர் குர்சரண் கலா இன்னமும் பாஜகவில் தான் இருக்கிறார்.

    • பா.ஜனதாவுக்கு 17 கவுன்சிலர்கள் இருந்த நிலையில், 3 ஆம் ஆத்மி உறுப்பினர்கள் அக்கட்சிக்கு மாறினர்.
    • 19 வாக்குகள் பெற்று சீனியர் துணை மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியுள்ளது.

    சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். ஆனால் ஆம்ஆத்மி- காங்கிரஸ் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கு அதிக வாக்குகள் விழுந்த நிலையில் தேர்தல் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    அப்போது, ஆம் ஆத்மி வேட்பாளருக்கு விழுந்த சில வாக்குகளை செல்லாத வாக்குகளாக அறிவித்ததை தேர்தல் அதிகாரி ஒப்புக்கொண்டார்.

    அதன்பின் மேயர் தேர்தல் மீண்டும் நடத்தப்பட்டது. அப்போது ஆம் ஆத்மி சார்பில் நிறுத்தப்பட்ட பா.ஜனதா வேட்பாளர் மனோஜ் சோங்கர் தோற்கடிக்கப்பட்டார். குமார் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் இன்று சீனியர் துணை மேயர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. 35 உறுப்பினர்களை கொண்ட மாநராட்சியில் பா.ஜனதா வேட்பாளர் குல்ஜீத் சிங் சந்து 19 வாக்குகள் வெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் குர்ப்ரீத் காபி 16 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

    பாஜனதாவுக்கு 17 கவுன்சிலர்கள் இருந்தனர். கடந்த 19-ந்தேதி ஆம் ஆத்மியின் மூன்று கவுன்சிலர்கள் பா.ஜனதாவுக்கு தாவினர். இதனால் தற்போது ஆம் ஆத்மிக்கு 10 உறுப்பினர்களும், காங்கிரஸ்க்கு ஏழு உறுப்பினர்களும் உள்ளன. ஷிரோமணி அகாளி தளத்திற்கு ஒரு கவுன்சிலர் இடம் உள்ளது.

    பா.ஜனதா துணை மேயர் பதவிக்கு சர்மாவை நிறுத்தியுள்ளது. காஙகிரஸ் நிர்மலா தேவியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

    மேயர் தேர்தலின்போது ஆம் ஆத்மி வேட்பாளர் 20 வாக்குகள் பெற்றிருந்தார். பா.ஜனதா வேட்பாளர் 16 வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால் தேர்தல் அதிகாரி ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த 8 வாக்குகள் செல்லாது என தெரிவித்ததுடன், பா.ஜனதா மேயர் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

    ஆனால், வீடியோவில் தேர்தல் அதிகாரி வாக்குச்சீட்டை திருத்தியது தெரியவந்தது. இதனால் தேர்தல் அதிகாரி மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

    ×