என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சண்டிகர்: பாஜகவுக்கு தாவிய 2 கவுன்சிலர்கள் மீண்டும் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தனர்
- ஆம் ஆத்மி வேட்பாளருக்கு விழுந்த சில வாக்குகளை செல்லாத வாக்குகளாக அறிவித்ததை தேர்தல் அதிகாரி ஒப்புக்கொண்டார்.
- திடீரென கடந்த மாதம் 19-ந்தேதி ஆம் ஆத்மியின் மூன்று கவுன்சிலர்கள் பாஜகவுக்கு தாவினர்.
சண்டிகரில் மேயர் தேர்தலின்போது ஆம் ஆத்மி வேட்பாளர் 20 வாக்குகள் பெற்றிருந்தார். பாஜக வேட்பாளர் 16 வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால் தேர்தல் அதிகாரி ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த 8 வாக்குகள் செல்லாது என தெரிவித்ததுடன், பாஜக மேயர் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
ஆம்ஆத்மி- காங்கிரஸ் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கு அதிக வாக்குகள் விழுந்த நிலையில் தேர்தல் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது, ஆம் ஆத்மி வேட்பாளருக்கு விழுந்த சில வாக்குகளை செல்லாத வாக்குகளாக அறிவித்ததை தேர்தல் அதிகாரி ஒப்புக்கொண்டார்.
அதன்பின் மேயர் தேர்தல் மீண்டும் எண்ணப்பட்டது. அப்போது பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் தோற்கடிக்கப்பட்டார். ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே திடீரென கடந்த மாதம் 19-ந்தேதி ஆம் ஆத்மியின் மூன்று கவுன்சிலர்கள் பாஜகவுக்கு தாவினர்.
இதனையடுத்து சண்டிகர் சீனியர் துணை மேயர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. 35 உறுப்பினர்களை கொண்ட மாநராட்சியில் பாஜக வேட்பாளர் குல்ஜீத் சிங் சந்து 19 வாக்குகள் வெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் குர்ப்ரீத் காபி 16 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதில், ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் கட்சி தாவியதால் தான் பாஜக வேட்பாளர் வெற்றி பெற முடிந்தது.
சண்டிகர் மேயர் பதவியில் ஆம் ஆத்மி உள்ள நிலையில், சீனியர் துணை மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளில் பாஜக உள்ளது.
இந்நிலையில், சண்டிகரில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவிய 2 கவுன்சிலர்கள் மீண்டும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். பாஜகவில் இணைந்த 3 கவுன்சிலர்களில் பூனம் தேவி மற்றும் நேஹா முசாவத் ஆகிய இரு பெண் கவுன்சிலர்கள் ஆம் ஆத்மியில் இணைந்தனர்.
அதே சமயம் கட்சி தாவிய ஆம் ஆத்மி கவுன்சிலர் குர்சரண் கலா இன்னமும் பாஜகவில் தான் இருக்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்