search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bears"

    • கரடிகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் புதருக்குள் பதுங்கி கொண்டு போக்கு காட்டி வருகின்றன.
    • கோரிக்கையை ஏற்று அங்கு கூண்டு வைக்கப்பட்டு கரடியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த பென்காம் எஸ்ட்டேட் அடர்ந்த வனப்பகுதி அருகே அமைந்து உள்ளது.

    இதனால் அவ்வப்போது இந்த பகுதியில் வனவிலங்குகள் உலா வருகின்றன. மேலும் அவை அங்கு வசிக்கும் பலரையும் தாக்கி விட்டு தப்பி செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    கடந்த 6 மாதங்களாக பென்காம் எஸ்ட்டேட் பகுதியில் 3-க்கும் மேற்பட்ட கரடிகள் தினமும் பகல் நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    அந்த நேரத்தில் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று விடுவதால், கரடிகள் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து சமையலறையில் உள்ள குக்கரை திறந்து சாதத்தையும் சாப்பிடுகின்றன.

    மேலும் கடைகளை உடைத்து அங்குள்ள எண்ணெய் மற்றும் உணவு பொருட்களை தின்றுவிட்டு சென்று விடுகின்றன. அதிலும் குறிப்பாக ஒருசில கரடிகள் இரவு நேரங்களிலும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிகின்றன.


    இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் அவர்கள் தூக்கத்தை தொலைத்து இரவும் பகலுமாக தவியாய் தவித்து வருகின்றனர்.

    இரவும் பகலும் கரடிகள் நடமாட்டம் உள்ளதால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கும் நிலை உள்ளது.

    பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அவ்வப்போது தீப்பந்தங்கள் காட்டி விரட்டினாலும், கரடிகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் புதருக்குள் பதுங்கி கொண்டு போக்கு காட்டி வருகின்றன.

    எனவே பென்காம் எஸ்ட்டேட் பகுதியில் சுற்றி திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்று அங்கு கூண்டு வைக்கப்பட்டு கரடியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    • ஜோடி கரடிகள் அட்டகாசம் செய்து வருகிறது.
    • மரங்களில் ஏறி பழங்களை சாப்பிட்டுக்கொண்டு ஹாயாக உலா வருகிறது.

    நெல்லை:

    பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு யானை, கரடி, சிறுத்தை, மிளா உள்பட பல்வேறு வகை வனவிலங்குகள் உள்ளது.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள கிராம பகுதியில் புகுந்து அச்சுறுத்துவதும், விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாக வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பாபநாசம் அருகே உள்ள கோட்டை விளைப்பட்டி கிராமத்திற்குள் புகுந்து ஜோடி கரடிகள் அட்டகாசம் செய்து வருகிறது.

    அந்த பகுதிகளில் உள்ள மரங்களில் ஏறி பழங்களை சாப்பிட்டுக்கொண்டு ஹாயாக உலா வருகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலையில் கோட்டை விளைப்பட்டி நடுத்தெருவில் வசித்துவரும் குமார் என்பவரின் வீட்டை சுற்றி 2 கரடிகள் ஜோடியாக சுற்றி திரிந்தது.

    இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைத்துள்ளனர். வனத்துறை உடனடியாக கூண்டுவைத்து கரடிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கரடி மரத்தை விட்டு இறங்காமல் மேலேயே இருந்தது.
    • இரவு முழுவதும் அங்கேயே வலையை விரித்து வைத்து காத்திருந்த நிலையில், கரடி இறங்க வில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் ஆயுதப்படை பட்டாலியன் மையம் உள்ளது.

    இதையொட்டிய பகுதிக்குள் நேற்று மதியம் ஒரு கரடி சுற்றித்திரிந்தது. அதனை கண்ட சுற்றுலா பயணிகள், பொது மக்கள் அச்சம் அடைந்து ஓடினர்.

    தொடர்ந்து கரடி தமிழ்நாடு 9-ம் அணி பட்டாலியன் தளவாய் விடுதியில் உள்ள மரத்தில் ஏறியது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அம்பை கோட்ட துணை இயக்குனர் இளைய ராஜா உத்தரவின்பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.

    அதனை விரட்ட வனத்துறையினர் சில நடவடிக்கைகள் எடுத்த போதிலும், கரடி மரத்தை விட்டு இறங்காமல் மேலேயே இருந்தது. இதனால் வனத்துறையினர் மரத்தின் அடியில் வலையை கட்டிவைத்தனர்.

    இரவு முழுவதும் அங்கேயே வலையை விரித்து வைத்து காத்திருந்த நிலையில், கரடி இறங்க வில்லை. அதனை அம்பை வனக்கோட்ட துணை இயக்குனர் இளையராஜா பார்வையிட்டார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் வனத்துறையினர் சற்று கண் அயர்ந்திருந்த நேரத்தில் கரடி தானாகவே மரத்தில் இருந்து இறங்கி வனப்பகுதிக்குள் சென்றது.

    இதையடுத்து வனத்துறையினர் வலையை சுருக்கி எடுத்துச்சென்றனர்.

    • வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்துள்ளது.
    • வீடியோவை பார்த்த வன ஆர்வலர்கள் மற்றும் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன்கஸ்வான் சமூக வலைதளங்களில் வன விலங்குகள் தொடர்பாக ஏராளமான வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்.

    அந்த வகையில், கரடியும், குட்டியும் மரத்தில் ஏறி, இறங்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். பொதுவாக கரடிகளால் மரத்தில் ஏற முடியாது என ஒரு கதையை கூறுவார்கள். ஆனால் அது தவறு என கூறும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.


    வீடியோவுடன் அவரது பதிவில், ஒரு நண்பர் கரடியிடம் இருந்து தனது உயிரை காப்பாற்றிய கதையை நீங்கள் அனைவரும் கேள்விபட்டிருப்பீர்கள். இங்கே ஒரு இமாலயன் கரடியும், அதன் குட்டியும் அந்த கதையை பொய் என காட்டுகிறது என கூறி உள்ளார்.

    இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்த நிலையில், வன ஆர்வலர்கள் மற்றும் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து டேபிள் சாய்த்து போட்டது.
    • குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மனிதர்களை அச்சுறுத்தும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 60 சதவீதம் வனப்பகுதிகள் என்பதால் அங்கு காட்டு யானைகள், கரடி, காட்டு மாடுகள், சிறுத்தை போன்ற வனவிலங்குகள் உள்ளன.

    அவற்றின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதால் கரடி, யானை, புலி, மான் உள்ளிட்டவை அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி மலை அடிவார பகுதிகளில் சுற்றிதிரிந்து வருகின்றன. மேலும் ஒருசில விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து அங்குள்ள வீடுகளை உடைத்து சமையலறையில் உள்ள பொருட்களை தின்றும், விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும் வருகின்றன.

    அதிலும் குறிப்பாக கரடிகள் அடிக்கடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வந்து கடைகளை உடைத்து உணவுப்பொருட்களை சூறையாடி செல்வது தொடர் கதையாக உள்ளது.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு கரடி நேற்று நள்ளிரவு ஊட்டி நகருக்குள் புகுந்தது. பின்னர் அங்குள்ள ஸ்டேட் வங்கி பகுதியில் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது. தொடர்ந்து அங்கிருந்த ஊட்டி போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து டேபிள்-சேரை சாய்த்து போட்டது. ஊட்டி போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் ரோந்து பணிக்கு சென்றிருந்ததால் அங்கு அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    இதற்கிடையே ரோந்துப்பணி முடிந்து போலீசார் மீண்டும் காவல் நிலையம் திரும்பினர். அப்போது போலீஸ் நிலையத்துக்குள் ஒரு கரடி சுற்றி திரிவது தெரியவந்தது. இதனை பார்த்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

    அப்போது எதேச்சையாக போலீசாரை கண்டதும் போலீஸ் நிலையத்தில் இருந்த கரடி திடீரென தப்பியோடியது. பின்னர் வந்தவழியாக திரும்பி வனப்பகுதிக்குள் சென்று விட்டது. போலீஸ் நிலையத்துக்குள் கரடி புகுந்து உலாவரும் காட்சிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது சமூகவலை தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    ஊட்டி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மனிதர்களை அச்சுறுத்தும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும், அல்லது அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வேண்டுமென பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.
    • கரடியின் கால்தடங்கள் உள்ளிட்டவற்றையும் வயல்வெளிகளில் சேகரித்து வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம், அப்பர்குளம், பெருமாள்குளம், தேவநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள இந்த கிராமங்களுக்கு அடிக்கடி மலையில் இருந்து வனவிலங்குகள் புகுந்துவிடுகின்றன. அவ்வாறு புகும் வனவிலங்குகள் விளை நிலங்களை சேதப்படுத்தவதோடு, கிராமங்களில் குடியிருப்புகளுக்குள்ளும் அவ்வப்போது புகுந்து விடுகிறது.

    அந்த வகையில் நேற்று களக்காடு அருகே உள்ள தேவநல்லூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.

    இந்தநிலையில், நேற்று தேவநல்லூர் பாறை பகுதியில் சிலர் சென்றபோது, அந்த வழியாக கரடி ஓடியது. உடனே அவர்கள் அந்த கரடியை தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். தொடர்ந்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தில் கடந்த ஆண்டு இதேபோல் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. பின்னர் வனத்துறையினர் அதனை கூண்டு வைத்து பிடித்து சென்றனர். இதேபோல் கடந்த ஆண்டு பெருமாள்குளம் பகுதியில் புதருக்குள் புகுந்த கரடியை கூண்டு வைத்து பிடித்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் தேவநல்லூர் பகுதியில் கரடி நடமாட்டம் இருக்கிறது. இதனால் விவசாயிகள் வயலுக்கு செல்ல அச்சப்படுகின்றனர். எனவே ஊருக்குள் புகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதற்கிடையே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வனத்துறையினர் அங்கு சென்று கரடி நடமாட்டம் இருக்கிறதா என்பதை அறிவதற்காக முகாமிட்டுள்ளனர். மேலும் கரடியின் கால்தடங்கள் உள்ளிட்டவற்றையும் வயல்வெளிகளில் சேகரித்து வருகின்றனர். கரடி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதனை பிடிக்க கூண்டு வைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    • கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    கோத்தகிரி, 

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வருகிறது.

    இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து அரவேணு செல்லும் மஞ்சமலை சாலையில் பகல் நேரத்தில் சாலையில் ஒய்யாரமாக நடந்துச்சென்ற நான்கு கரடியால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.

    நீண்ட நேரம் சாலையில் சுற்றி திரிந்த நான்கு கரடிகளும் அருகில் இருந்த தேயிலை தோட்டத்துக்குள் சென்றன. அதன்பிறகே கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    வனத்துறையினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • இன்று காலை 10 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து 2 கரடிகள் வெளியே வந்தது.
    • 2 பெண்களையும் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே மாணிக்க எஸ்டேட் பகுதி உள்ளது. இங்குள்ள தேயிலை தோட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றனர்.

    இன்று காலை 10 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து 2 கரடிகள் வெளியே வந்தது. அந்த கரடிகள் தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்தது.

    அப்போது தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் சுமதி (வயது 25), ஹித்தினி குமாரி (26 ) ஆகியோரை கரடிகள் திடீரென தாக்கியது.

    இதில் வலி தாங்க முடியாமல் அவர்கள் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓடி வந்தனர். அவர்கள் பெண்களை தாக்கிய கரடிகளை விரட்டி காட்டுக்குள் அனுப்பினர்.

    கரடி தாக்கியதில் 2 பெண்களுக்கும் கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர்களை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    கரடி தாக்கியதில் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

    இதனையடுத்து டாக்டர்கள் 2 பெண்களையும் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு 2 பெண்களுக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த தகவல் கிடைத்ததும் மானாம்பள்ளி வனசரகர் மணிகண்டன் தலைமையில் மேல் சிகிச்சைக்காக ஒருவருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் 2 பெண்களுக்கும் ரூ. 20 ஆயிரம் வழங்கினார். தேயிலை தோட்டத்தில் சுற்றி வரும் கரடியை வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிசிடிவி காமிராவில் உணவு தேடி திரியும் காட்சிகள் பதிவாகி உள்ளது
    • கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது கரடி, சிறுத்தை, காட்டுமாடு ,யானை, பன்றி, குரங்கு ,போன்ற வனவி லங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவை உணவு மற்றும் தண்ணீரை தேடி அருகி லுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றன.

    இந்த நிலையில் ரோஸ் காட்டேஜ் பகுதிக்கு நேற்று இரவு ஒற்றை கரடி வந்தது. அங்கு அங்கு உள்ள பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தேடி சுற்றி திரிந்தது. இந்த காட்சிகள் அங்கு உள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகி உள்ளது. கோத்தகிரி குடியிருப்புக்குள் கரடி நுழையும் பதிவு வெளியாகி இருப்பதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இதற்கிடையே நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த உள்ள அணைஹட்டி கிராமத்தில் பகல் நேரத்தி லும் ஒரு கரடி குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அணைஹட்டி கிரா மத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது அங்கு வனவிலங்குகளின் தொல்லை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்த நிலையில் அனைஹட்டி கிராமத்துக்கு ஒரு கரடி பட்டப்பகலில் வந்தது. இதுவும் அங்கு உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது.

    அணைஹட்டி கிராமத்தில் கரடிகள் இரவு நேரத்தில் சுற்றி திரிவது வழக்கம். ஆனால் பட்டப்பகல் நேரத்திலும் கரடிகளின் நடமாட்டம் தென்படுவது, அங்கு வசிக்கும் பொது மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் அவர்கள் பகல் நேரத்திலும் குழந்தைகளை வெளியில் சென்று விளையாட அனுமதிப்பது இல்லை. மேலும் வெளியே சென்று வரும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளும் அச்சத்துடன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

    எனவே கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வனத்துறையினர் காடுகளின் பரப்பளவை அதிகப்படுத்தி விலங்குகளுக்கு தேவையான உணவுகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் தற்போது சுற்றி திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடவேண்டும் என கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    • வனப்பகுதியில் 3 கூண்டுகளை வைத்து சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.
    • திருப்பதி மலைபாதையில் சிறுத்தை ஒன்று 6 வயது சிறுமியை கடித்துக் கொன்றது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் மலையில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. சிவன் கோவில் அமைந்துள்ள மலை முழுவதும் அடர்ந்த வனப்பகுதி ஆகும்.

    மலையின் கீழ் இருந்து பல கிலோமீட்டர் சென்றால் தான் கோவிலை சென்றடைய முடியம். அங்குள்ள வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன.

    இதனால் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை மலைபாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் கோவில் அருகே உள்ள வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரடி ஒன்று சுற்றி திரிந்தது. இதனைக் கண்ட பக்தர்கள் இதுகுறித்து ஸ்ரீசைலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறையினர் கரடியை பிடிக்க கோவில் அருகே வனப்பகுதியில் 3 கூண்டுகளை வைத்து சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு வனத்துறையினர் வைத்த கூண்டில் கரடி ஒன்று சிக்கியது.

    இதையடுத்து வனத்துறையினர் கரடியை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். ஏற்கனவே திருப்பதி மலைபாதையில் சிறுத்தை ஒன்று 6 வயது சிறுமியை கடித்துக் கொன்றது.

    இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கேசலாடா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் குட்டிகளுடன் கரடி சுற்றி வந்தது.
    • பொதுமக்கள் கூறுகையில், கோத்தகிரியில் கரடிகள் இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலும் சுற்றி திரிகிறது.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டார பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அவை உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு வருவது தொடர்கதையாக உள்ளது.

    இந்தநிலையில் கோத்தகிரி அடுத்த கேசலாடா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் குட்டிகளுடன் கரடி சுற்றி வந்தது.

    இதனை பார்த்த தேயிலை தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். இதனால் அவர்கள் சத்தம் போடவே, அந்த கரடிகள் தேயிலை தோட்டம் வழியாக காட்டுக்குள் சென்று விட்டன. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கோத்தகிரியில் கரடிகள் இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலும் சுற்றி திரிகிறது.

    அதிலும் ஒருசில கரடிகள் குட்டிகளுடன் நடமாடி வருகின்றன. இதனை விரட்ட முயன்றால் கடிக்க வருகிறது. ஒருசில நேரங்களில் விளைநிலங்களில் புகுந்து நாசப்படுத்துகிறது. வீடுகளை சுற்றி வந்து உணவு தேடி நோட்டம் பார்த்து நிற்கிறது.

    இதனால் நாங்கள் கூலி வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்க வேண்டி உள்ளது. எனவே கேசலாடா குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வரும் கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டில் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.

    • உணவு, மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் உலா வருகிறது.
    • கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வருகிறது.

    இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கேசலாடா கிராமத்தில் இரவு நேரத்தில் 2 குட்டிகளுடன் கரடிகள் கிராமத்துக்குள் உலா வந்தன. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த கரடிகள் கிராம மக்கள் யாரையாவது தாக்குமுன் வனத்துறையினர் இரவு நேரங்களில் கிராமத்துக்குள் சுற்றித்திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×