என் மலர்
நீங்கள் தேடியது "bears"
- உணவு, மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் உலா வருகிறது.
- கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வருகிறது.
இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கேசலாடா கிராமத்தில் இரவு நேரத்தில் 2 குட்டிகளுடன் கரடிகள் கிராமத்துக்குள் உலா வந்தன. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த கரடிகள் கிராம மக்கள் யாரையாவது தாக்குமுன் வனத்துறையினர் இரவு நேரங்களில் கிராமத்துக்குள் சுற்றித்திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோத்தகிரியில் இருந்து பன்னீர் செல்லும் சாலையில் இரவில் குட்டியுடன் கரடி உலா வந்தது.
- வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதி களில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
கோத்தகிரியில் இருந்து பன்னீர் செல்லும் சாலையில் இரவில் குட்டியுடன் கரடி உலா வந்தது. இதனை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் பார்த்து அச்சம் அடைந்தனர். மேலும் அதனை வீடியோவும் எடுத்துள்ளனர். இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே வாகனத்தை இயக்கி வருகிறார்கள். எனவே வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு சாலைகளில் சுற்றித்திரியும் வனவிலங்குகளை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வால்பாறைக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
- இருள் சூழ்ந்தவேளையில் கரடிகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவி வருகின்றன.
வால்பாறை
வால்பாறை நகரசபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சித் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். ஆணையர் பாலு, துணைத் தலைவர் செந் தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், வால்பாறைக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு போதிய அளவில் கழிப்பறை வசதிகள் இல்லை. எனவே நகராட்சி மூலம் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். மேலும், எஸ்டேட் பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதனால், இருள் சூழ்ந்தவேளையில் அவை குடியிருப்புப் பகுதிகளில் உலவி வருகின்றன. எனவே, குடியிருப்புப் பகுதிகளில் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வார்டு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி மேலாளர் ஜலாலுதீன், பொறியாளர் வெங்கடாசலம் உள்பட வார்டு உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர்.
ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு, மயிலாடும்பாறை, பொன்னம்படுகை, அரசரடி, கொங்கரவு, பழையகோட்டை, வண்டியூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி, கத்தரிக்காய், முருங்கை உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் தோட்டப்பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.
மேலும் இப்பகுதியிலேயே வீடுகட்டி விவசாயிகள் காவலுக்கு இருந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கிலி மலைப்பகுதியில் உணவுதேடி வந்த கரடிகள் தோட்டப்பயிர்களை நாசம் செய்தன. இதனால் தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
தற்போது பழையகோட்டை வண்டியூர் பகுதியில் கரடிகள் தோட்டப்பயிர்களை நாசம் செய்து சென்றுள்ளது. இதுகுறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் கரடிகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். #tamilnews