என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bears"

    • வால்பாறைக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
    • இருள் சூழ்ந்தவேளையில் கரடிகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவி வருகின்றன.

    வால்பாறை

    வால்பாறை நகரசபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சித் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். ஆணையர் பாலு, துணைத் தலைவர் செந் தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், வால்பாறைக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு போதிய அளவில் கழிப்பறை வசதிகள் இல்லை. எனவே நகராட்சி மூலம் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். மேலும், எஸ்டேட் பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    இதனால், இருள் சூழ்ந்தவேளையில் அவை குடியிருப்புப் பகுதிகளில் உலவி வருகின்றன. எனவே, குடியிருப்புப் பகுதிகளில் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வார்டு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி மேலாளர் ஜலாலுதீன், பொறியாளர் வெங்கடாசலம் உள்பட வார்டு உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர். 

    எஸ்.கைகாட்டியில் கூண்டில் சிக்காத கரடிகள் குடியிருப்புக்குள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ள எஸ்.கைகாட்டியில் கடந்த சில மாதங்களாக 3 கரடிகள் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிகின்றன. மேலும், அந்த பகுதியில் உள்ள பேக்கரி கதவை 3 முறை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை தின்றுவிட்டு பொருட்களை சேதப்படுத்திவிட்டு சென்றன.

    வனத்துறையினர் கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இருப்பினும் தொடர்ந்து அந்த கரடிகள் குடியிருப்புக்குள் நடமாடி வந்தன. கடந்த வாரம் கக்குளா மாரியம்மன் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்து கரடிகள் அட்டகாசம் செய்தன.

    இதையடுத்து கரடிகளை பிடிக்க கோவில் வளாகத்தில் வனத்துறையினர் கடந்த 19-ந் தேதி கூண்டு வைத்தனர். அதில் ஒரு கரடி மட்டும் சிக்கியது. மற்ற 2 கரடிகளும் கூண்டில் சிக்காமல் அந்த கூண்டை சுற்றி சுற்றி வந்ததுடன் ஆக்ரோஷத்துடன் சத்தம் போட்டன. இதை அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து 2 கரடிகளை விரட்டினர். பின்னர் கூண்டில் சிக்கிய கரடியை அவலாஞ்சி வனப்பகுதியில் விட்டனர்.

    இந்த நிலையில் கூண்டில் சிக்காத மற்ற 2 கரடிகளும் குடியிருப்பு பகுதியிலேயே சுற்றித்திரிகின்றன. இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடிகள் சண்டையிட்டு கொள்கின்றன. கரடிகளின் தொடர் அட்டகாசத்தால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    எனவே வனத்துறையினர் விரைந்து அந்த கரடிகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    ஆண்டிப்பட்டி அருகே தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை கரடிகள் நாசம் செய்து வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு, மயிலாடும்பாறை, பொன்னம்படுகை, அரசரடி, கொங்கரவு, பழையகோட்டை, வண்டியூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி, கத்தரிக்காய், முருங்கை உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் தோட்டப்பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.

    மேலும் இப்பகுதியிலேயே வீடுகட்டி விவசாயிகள் காவலுக்கு இருந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கிலி மலைப்பகுதியில் உணவுதேடி வந்த கரடிகள் தோட்டப்பயிர்களை நாசம் செய்தன. இதனால் தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

    தற்போது பழையகோட்டை வண்டியூர் பகுதியில் கரடிகள் தோட்டப்பயிர்களை நாசம் செய்து சென்றுள்ளது. இதுகுறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே மாவட்ட நிர்வாகம் கரடிகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். #tamilnews
    ×