search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Athletic competitions"

    • வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது.
    • ஒட்டுமொத்த பள்ளிகளுக்கான சாம்பியன் கோப்பை கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடங்குளம் ஹார்வேர்ட் மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாண வர்கள் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர்.

    சூப்பர் சீனியர் பிரிவில் குண்டு வீசுதல் மற்றும் தட்டு வீசுதல் போட்டிகளில் முதல் பரிசை பெற்றனர். ஈட்டி எறிதல் போட்டியில் ஆஷிக் முதல் பரிசையும், வின்சர் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

    400 மீட்டர் ஓட்டத்தில் நவீன் குமார் முதல் பரிசையும், 100 மீட்டர் ஓட்டத்தில் பவுல்ராஜ் இரண்டாம் இடமும் பெற்றனர். செல்வ ஜீவன் தட்டு வீசுதலில் இரண்டாம் இடம் பெற்றார். செல்வ சுபினேஷ் சாய் செல்வா ஆகியோரும் சிறப்பு பரிசுகளை பெற்றனர்.சூப்பர் சீனியர் மாணவிகள் பிரிவில் ஜார்ஜ் ரோமிஸ்ரீ ஈட்டி எறியும் போட்டியில் முதலிடமும், பிளஸ்சி குண்டு வீசுதலில் இரண்டாம் இடமும், பிரதிக்ஷா தட்டு எறிதல் போட்டியில் இரண் டாம் இடமும் பெற்றனர்.

    சூப்பர் சீனியர் தனிநபர் சாம்பியன்ஷிப் கோப்பையை ஜெப்ரின் வென்றார். ஒட்டுமொத்த பள்ளிகளுக் கான சாம்பியன் கோப்பை கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டது.

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் டாக்டர் தினேஷ், முதல்வர் முருகேசன், உடற்பயிற்சி இயக்குனர் சுந்தர், தடகள பயிற்சியாளர் மோதிலால் ஆகியோர் பாராட்டினர்.

    • விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது.
    • மாநில தடகள போட்டிக்கு எஸ்.பி.கே. பள்ளி மாணவிகள் தேர்வாகினர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 100 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த திரிசாள் (9-ம் வகுப்பு) மாணவி மோனிகா (9-ம் வகுப்பு) ஆகியோர் மாவட்ட அளவில் முதலிடமும், மாணவி கீர்த்தனா மாவட்ட அளவில் 2-ம் இடமும் பெற்று கேடயமும், சான்றிதழும் பரிசாக பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    இந்த 3 மாணவிகளும் மாநில அளவிலான தடகள போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தடகள போட்டியில் வெற்றி பெற்ற 3 மாணவிகளையும், உடற்பயிற்சி ஆசிரி யைக ளையும், அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை தலைவர் காமராஜன், உறவின்முறை செயலாளர் முத்துசாமி, பள்ளிச் செயலாளர் ராமச்சந்திரன், பள்ளித் தலைவர் ஜெய வேல்பாண்டியன் பள்ளி உதவி செயலாளர் காசிகோபிநாத், பள்ளி உதவி தலைவர் அஜய், தலைமையாசிரியை தங்கரதி மற்றும் உறவின்முறை பெரியோர்கள் ஆசிரியர்கள் மாணவ-மாணவி கள் பாராட்டினர்.

    • பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடந்தன.
    • பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தன. பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியை மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், மும்முறை தாண்டுதல் ஓட்டம், தட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.

    இந்த போட்டிகளில் ஏற்கனவே பெரம்பலூர், குன்னம் குறுவட்ட அளவிலான 14, 17, 19 வயதுகளுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தடகள விளையாட்டு போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டிகளில் முதலிடம் பிடித்த வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிக்கான ஏற்பாடுகளை லெப்பைக்குடிகாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜம்மாள், உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்

    • நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், மும்முறை தாண்டுதல் போட்டிகள் நடந்தது
    • 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டிகள் நடந்தது.

    தடகள போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் 14 வயது முதல் 20 வயது உடைய வீரர், வீராங்கனைகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டிகள் நடைபெற்றது.

    இதில் 14, 16, 18, 20 என வயதின் அடிப்படையில் 4 பிரிவுகளாக 60 மீட்டர், 100 மீட்டர், 600 மீட்டர், 800 மீட்டர், 2000 மீட்டர், 3000 மீட்டர் ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், மும்முறை தாண்டுதல் ஆகிய போட்டிகள் வீரர், வீராங்கனைகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. இதில் 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் தகுதியின் அடிப்படையில் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    இதற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத் தலைவர் எ.வ.வே.கம்பன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×