search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assistant Engineer"

    • மின்மாற்றி பயன்பாட்டை கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினார்.
    • உதவி பொறியாளர் சுகவனம் , போர் மேன் கண்ணன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணி உத்தரவிட்டார்

    சேலம்:

    சேலம் தெற்கு மின் கோட்டம் வெண்ணந்தூர் பிரிவு அலுவலகத்தில் கடந்த 4 மாதமாக உதவி பொறியாளராக பணிபுரிந்தவர் சுகவனம் (வயது 52). இவர் வெண்ணந்தூர் பிரிவு அலுவலகத்தில் உட்பட்ட வெட்டுக்காட்டில் ஏற்கனவே புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றியை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இழுத்தடித்து வந்ததாக புகார் இருந்தது.

    இது தொடர்பான புகாருக்கு இவருக்கு முன் பணியில் இருந்த உதவி பொறியாளர் பவ்யா மீது குற்றம் சாட்டி காலம் கடத்தி வந்தார் . கடந்த 23-ந் தேதி நடந்த குறைதீர் கூட்டத்தில் இனியும் தாமதிக்காமல் மின்மாற்றி பயன்பாட்டை கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினார்.

    இதை அடுத்து பணியை விரைந்து முடிக்க ஆட்டையாம்பட்டி உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் பிரேமாவுக்கு உத்தரவிடப்பட்டது. அவரது நடவடிக்கைக்கும் கீழ்படியாமல் பணியை நிறைவு செய்யவும் ஒத்துழைக்காமல் சுகவனம் மறுத்துவிட்டார். இதனால் இதர பிரிவு உதவி பொறியாளரை வைத்து மின்மாற்றி பணியை நிறைவு செய்து பயன்பாட்டு கொண்டுவரப்பட்டது .

    இதன் அறிக்கை சேலம் மின் வட்டம் மேற்பார்வை பொறியாளருக்கு அனுப்பப்பட்டது. இதை அடுத்து உதவி பொறியாளர் சுகவனம் , போர் மேன் கண்ணன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணி உத்தரவிட்டார்.

    • ராமநாதபுரம், கமுதி பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகா் மின்பகிா்மான உதவிச் செயற்பொறியாளா் பாலமுருகன் கூறியதாவது:-

    பட்டினம்காத்தான் துணை மின் நிலையத்தி லிருந்து மின்விநியோகம் பெறும் ராமநாதபுரம் பட்டினம்காத்தான் சேதுபதி நகா், ஓம்சக்தி நகா், தனியாா் பள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், வசந்த நகா், கேணிக்கரை செட்டி தெரு, தாயுமானசுவாமி கோவில் தெரு, இந்திரா நகா், சிவன் கோவில், ரோஸ் நகா், கான்சாகிப் தெரு, டிடிவிநாயகா் பள்ளி சாலை, வைகை நகா், அம்மா பூங்கா, விளையாட்டு மைதானம், தங்கப்பாபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    கமுதி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் விஜயன் கூறியதாவது:-

    கமுதி துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கமுதி நகா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான கண்ணாா்பட்டி, கோட்டைமேடு, தலைவ நாயக்கன்பட்டி, கீழராமநதி, மேலராமநதி, காவடிபட்டி உள்ளிட்ட இடங்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

    ×