search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ariyamangalam"

    • கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேபிள் சேகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
    • குற்றவாளிகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் தெரியவில்லை.

    திருச்சி:

    திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். இவர் முன்னாள் அ.தி.மு.க. பகுதி செயலாளராகவும், திருச்சி மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலராகவும் பதவி வகித்தவர். இவரது மனைவி கயல்விழி சேகர். இவர் முன்னாள் திருச்சி மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் ஆவார். கேபிள் தொழில் மட்டுமல்லாமல் பன்றி வளர்த்த வருகின்றனர்.

    கேபிள் சேகரின் மகன் முத்துக்குமார் (வயது 27). டிப்ளமோ என்ஜினியர். இந்த நிலையில் பன்றி வளர்ப்பதில் இவர்கள் குடும்பத்திற்கும் கேபிள் சேகரின் சகோதரர் பெரியசாமி குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் வந்தது. தொழில் போட்டியில் ஏற்பட்ட தகராறில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேபிள் சேகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரை இந்த முன்விரோதம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில் திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி பேருந்து நிறுத்தம் அருகே இன்று காலை சுமார் 11 மணியளவில் பட்டப் பகலில் கேபிள் சேகரின் மகன் முத்துக்குமார் சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கியுடன் வந்த சில மர்ம நபர்கள் அவருடைய முகத்தை வெட்டி சிதைத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்சி மாநகர அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் நடந்த இடத்தில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் தொழில் போட்டி மற்றும் முன்விரோதத்தில் இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் தெரியவில்லை. கொலை செய்யப்பட்ட முத்துக்குமார் மீதும் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது .திருச்சி அரியமங்கலத்தில் இன்று பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

    அரியமங்கலத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

    திருச்சி:

    திருச்சி அம்பிகாபுரம் துணை மின்நிலையத்தில் நாளை (6-ந் தேதி) மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான அரியமங்கலம், எஸ்.ஐ.டி., பொன்மலை ராணுவ காலனி, அம்பிகாபுரம், ரயில்நகர், நேருஜி நகர், ராஜப்பாநகர், காமராஜ் நகர், மலையப்பநகர், காட்டூர் பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர்,

    சக்திநகர், பாலாஜிநகர், மேலகல்கண்டார்கோட்டை, கீழகல்கண்டார்கோட்டை, ஆலத்தூர், வெங்கடேஸ்வரா நகர், எம்.ஜி.ஆர்.நகர், கொட்டபட்டு ஒரு பகுதி, திருநகர், அடைக்கலஅன்னை நகர், நத்த மாடிப் பட்டி, கீழக்குறிச்சி, சங்கிலியாண்டபுரம், செந்தண்ணீர் புரம் ஆகிய இடங்களில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை மன்னார்புரம் செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

    ×