என் மலர்
நீங்கள் தேடியது "Alzarri Joseph"
- 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
- அல்ஜாரி ஜோசப் ரன் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டி20 போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மேக்ஸ்வெல்லின் அதிரடி சதத்தின் மூலம் 20 ஓவர்களில் 241 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 242 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 34 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அந்த இன்னிங்சின் 19-வது ஓவரை ஆஸ்திரேலியாவின் ஸ்பென்சர் ஜான்சன் வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தை எதிர்கொண்ட அல்ஜாரி ஜோசப் பந்தை கவர்ஸ் திசையில் அடித்து விட்டு ரன் எடுக்க ஓடினார்.
அப்போது அந்த திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த பீல்டர் பந்தை எடுத்து வேகமாக ஜான்சனிடம் வீசினார். அவரும் பந்தை பிடித்து ஸ்டெம்பில் அடித்தார். ஆனால், பந்துவீச்சாளர் உட்பட ஆஸ்திரேலிய வீரர்கள் யாரும் அதற்கு மேல்முறையீடு செய்யவில்லை. இதையடுத்து இந்த காட்சி மைதானத்தில் உள்ள பெரிய திரையில் காண்பிக்கப்பட்டது.
அப்போது ஜான்சன் பந்தை பிடித்து ஸ்டெம்பில் அடிக்கும் போது ஜோசப் கிரிஸிற்குள் வரவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் அவர் ரன் அவுட் என நினைத்து மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் கள நடுவர் ஜோசப்பிற்கு அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த ரன் அவுட்டிற்கு மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் கிரிக்கெட் விதிமுறைகளின் படி அல்ஜாரி ஜோசப்பிற்கு ரன் அவுட் கொடுக்கவில்லை என நடுவர் தெரித்தார். இதையடுத்து தொடர்ந்து பேட்டிங் ஆடிய அல்ஜாரி ஜோசப் 5 பந்தில் 2 ரன்கள் அடித்தார்.
கிரிக்கெட் விதிமுறைகளின் படி ஒரு பீல்டரால் மேல்முறையீடு செய்யப்படும் வரை, எதிரணி வீரர் சட்டத்தின் கீழ் அவுட்டாக இருந்தாலும், எந்த நடுவரும் பேட்ஸ்மேனையும் நடுவர்கள் அவுட் கொடுக்க மாட்டார்கள்.
- அல்ஜாரி ஜோசப், கோபத்தில் வெளியேறியதால் 10 வீரர்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் செய்தது.
- 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
பார்படாஸ்:
இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட்ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளின் முடிவில் தலா ஒரு வெற்றியுடன் தொடர் சமனில் இருந்தது.
இந்நிலையில், தொடரை வெல்லும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் இன்று பார்படாசில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை எடுத்துள்ளது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 267 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
முன்னதாக, இங்கிலாந்து பேட்டிங் செய்த போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் மற்றும் கேப்டன் ஹோப் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. அல்ஜாரி ஜோசப் பந்து வீசும் போது அவருக்கு தேவையான இடத்தில் பீல்டரை வைக்குமாறு கூறினார். இதற்கு கேப்டன் ஹோப் மறுப்பு தெரிவித்தார்.
அந்த ஓவரின் கடைசி பந்தில் ஜோசப்புக்கு விக்கெட் கிடைத்தது. ஆனால் அதை கொண்டாடமல் கேப்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து ஜோசப் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி 10 வீரர்களுடன் பீல்டிங் செய்தனர். சிறிது நேரம் கழித்து ஜோசப் மைதானதிற்குள் நுழைந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- அபராதம் குறித்த அறிவிப்பானது 2-வது ஒருநாள் போட்டி தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன்னரே வெளியானது.
- இதனால் இன்றைய போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் ஜோசப்பின் பெயர் இடம்பெறவில்லை.
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியின் போது கள நடுவர்களிடம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் அநாகரிமாக நடந்து கொண்டதாகவும் அவர்களிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஐசிசி நடத்தை விதிகள் படி வீரர்கள் போட்டி நடுவர்களிடம் மோதல் போக்கை கொண்டிருப்பது குற்றமாகும். அதனடிப்படையில் தற்போது அல்சாரி ஜோசப்பிற்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீத கட்டணம் அபராதமாக விதிக்கப்படுகிறது என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அல்சாரி ஜோசப்பும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக அவர் மேற்கொண்டு விசாரனைக்கு உட்படுத்த தேவையில்லை என்றும் ஐசிசி கூறியுள்ளது.
அதேசமயம் அல்சாரி ஜோசப்பின் இந்த அபராதம் குறித்த அறிவிப்பானது 2-வது ஒருநாள் போட்டி தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன்னரே வெளியானது. இதனையடுத்து இன்றைய போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் அல்சாரி ஜோசப்பின் பெயரானது இடம்பெறவில்லை. மேலும் அவருக்கு பதிலாக அறிமுக வீரர் மார்க்வினோ மைண்ட்லிக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை தோற்கடித்தது. இதில் மும்பை அணி நிர்ணயித்த 137 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணி 17.4 ஓவர்களில் 96 ரன்களில் சுருண்டது. ஐ.பி.எல்.-ல் ஐதராபாத் அணி 100 ரன்னுக்குள் முடங்குவது இதுவே முதல் நிகழ்வாகும்.
மும்பை வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் 3.4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 12 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் வார்னர் (15 ரன்) கிளன் போல்டு ஆனதும் அடங்கும். ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு பவுலரின் அற்புதமான பந்து வீச்சாக இது பதிவானது. இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு நடந்த முதலாவது ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர் சோகைல் தன்விர் 14 ரன் கொடுத்து 6 விக்கெட் எடுத்ததே (சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக) சிறந்த பந்து வீச்சாக இருந்தது. அந்த 11 ஆண்டு கால சாதனையை ஜோசப் முறியடித்தார்.
வெஸ்ட் இண்டீசை சேர்ந்த 22 வயதான ஜோசப்புக்கு இது தான் முதல் ஐ.பி.எல். ஆட்டமாகும். மலிங்கா தாயகம் திரும்பியதால் களம் காணும் வாய்ப்பை பெற்ற ஜோசப் தனது அறிமுக ஆட்டத்திலேயே பிரமாதப்படுத்தி விட்டார்.
ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட அல்ஜாரி ஜோசப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஐ.பி.எல்.-ல் எனது முதல் ஆட்டத்திலேயே 6 விக்கெட் வீழ்த்தியதை என்னால் நம்ப முடியவில்லை. கனவு போன்று உள்ளது. இதை விட பெரிதாக நான் எதையும் எதிர்பார்க்க முடியாது. நிச்சயம் இது மறக்க முடியாத நினைவாக இருக்கும்.
6 விக்கெட்டுகளில் எதை சிறந்ததாக கருதுகிறீர்கள் என்று அவரிடம் கேட்ட போது, வெற்றியை உறுதி செய்த கடைசி விக்கெட் தான் என்று பதில் அளித்தார். ஜோசப்புக்கு டுவிட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ‘இன்னொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் எங்களை பெருமைப்படுத்தி விட்டார்’ என்று ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார்.






