search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alone party"

    ராசிபுரத்தில் திருமண விழாவிற்கு வந்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியிடம் தனிக்கட்சி தொடங்க திட்டமா? என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். #DMK #MKAzhagiri #MKStalin #Karunanidhi
    ராசிபுரம்:

    ராசிபுரத்தில் தி.மு.க. முன்னாள் எம்.பி.யும், தி.மு.க. விவசாய அணி செயலாளருமான கே.பி.ராமலிங்கத்தின் இல்லத் திருமண விழாவிற்கு வந்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

    கேள்வி:- சென்னையில் நடைபெறும் பேரணி எந்த அளவிற்கு வெற்றி தரும்?

    பதில்:- இந்த பேரணி வருங்காலத்தில் நிச்சயமாக எங்களுக்கு வெற்றியை தரும்.

    கே:- தி.மு.க தலைவராக மு.க ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளாரே அது குறித்து உங்கள் கருத்து என்ன?

    ப:- தி.மு.க.வை பற்றி தன்னிடம் கேட்காதீர்கள், தற்போது தி.மு.க.வில் நான் இல்லை.

    கே.:- உங்களின் அடுத்தக் கட்ட முயற்சி என்ன?

    ப:- நான் ஏற்கனவே சொன்னதை போல எனது ஆதரவாளர்கள் மற்றும் கருணாநிதியின் உண்மை விசுவாசிகளிடம் கலந்து பேசி மேற்கொண்டு என்ன செய்வது என முடிவு எடுப்போம்.

    கே.:- தனிக்கட்சி தொடங்குவீர்களா?

    ப:- அது பற்றி இப்போது சொல்ல முடியாது.

    கே:- உங்களின் ஆதங்கத்தை எப்போது சொல்வீர்கள்?

    ப:- அதற்கெல்லாம் காலம் வரும். அப்போது பதில் சொல்வேன்.


    கே:- கருணாநிதி தலைவராக இருந்த இடத்தில் மற்றொருவரை நீங்கள் ஏற்று கொள்வீர்களா?

    ப:- பிறகு பேசி கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKAzhagiri #MKStalin #Karunanidhi
    எம்.ஜி.ஆர். ஆட்சி அமைக்க விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன் என்று பொள்ளாச்சியில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    இதில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசியலில் ஊழல் அதிகரித்துவிட்டது. எம்.ஜி.ஆரை போல யாராலும் ஆட்சியை வழங்க முடியாது. ஆகவே எம்.ஜி.ஆர். ஆட்சி அமைக்க விரைவில் தனிக்கட்சி தொடங்க உள்ளேன்.

    இதற்காக தமிழகம் முழுவதும் சென்று ஆதரவாளர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறேன். ஆதரவாளர்கள் கருத்துப்படி விரைவில் கட்சி தொடங்குவேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #Tamilnews
    ×