search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "additional water"

    • வைகை அணை நீர் மட்டம் 66.34 அடியாக உள்ளது
    • இன்று காலை முதல் கூடுதலாக 300 கன அடி என 1769 கன அடி வெளியேற்றப்படுகிறது.

    கூடலூர்:

    மாண்டஸ் புயல் தாக்கத்துக்கு பின்பு தமிழகத்தில் மழை அடியோடு குறைந்தது. தற்போது பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.

    இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு குறைந்த அளவு தண்ணீர் வருகிறது. அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டும் என எதிர்பார்த்து தண்ணீர் திறப்பை குறைத்த போதிலும் அந்த உயரத்தை எட்ட முடியவில்லை.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 141.65 அடியாக உள்ளது. வரத்து 454 கன அடி. திறப்பு 250 கன அடி. இருப்பு 7572 மி.கன அடி.

    வைகை அணை நீர் மட்டம் 66.34 அடியாக உள்ளது. வரத்து 600 கன அடி. நேற்று 1469 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் கூடுதலாக 300 கன அடி என 1769 கன அடி வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4991 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.90 அடி. வரத்து 80 கன அடி. திறப்பு 30 கன அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 126.34 அடி. வரத்து 31 கன அடி. திறப்பு 27 கன அடி.

    கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. #MaduraiChithiraiFestival #VaigaiDam
    கூடலூர்:

    மதுரையில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நாளை மறுநாள் (19-ந் தேதி) நடைபெற உள்ளது.

    இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் மூல வைகையாறு முற்றிலும் வறண்டு போய் உள்ளது.

    மேலும் முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியிலும் மழை குறைந்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் தேனி மாவட்ட குடிநீருக்கு கூட போதவில்லை. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து இல்லை.

    சித்திரை திருவிழாவிற்காக கூடுதல் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மாலை 5 மணி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சிறிய மதகுகள் வழியாக வினாடிக்கு 1500 கன அடி, குடிநீருக்கு 60 என மொத்தம் 1560 கன அடி வீதம் வைகை ஆற்றில் செல்கிறது.

    தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு 19-ந் தேதி மாலை நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் 19-ந் தேதி காலை மதுரையை சென்றடையும். இதன்மூலம் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக தண்ணீர் வரத்து அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை 6 மணி நிலவரப்படி 40.45 அடியாக குறைந்துள்ளது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 112.10 அடியாக உள்ளது. வருகிற 100 கன அடி அப்படியே திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 33.35 அடியாக உள்ளது. வரத்து இல்லை 10 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 84.46 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கடந்த 2 மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் சாரல் மழை பெய்ததால் பூமி குளிர்ந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பெரியாறு 14.4, கூடலூர் 1.2, வைகை அணை 6.2, சோத்துப்பாறை 7, கொடைக்கானல் 5 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. #MaduraiChithiraiFestival #VaigaiDam

    வைகை அணை நீர் மட்டம் 50 அடிக்கு கீழ் குறைந்த நிலையில் பாசனத்துக்காக இன்று முதல் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் பெரியாறு, வைகை அணைகளின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது. பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர் மட்டமும் குறைந்து கொண்டே வந்தது. அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் அது நீர் மட்டத்தை உயர்த்தவில்லை.

    இந்நிலையில் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 49.98 அடியாக குறைந்தது. அணைக்கு 6 கன அடி மட்டுமே தண்ணீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் கூடுதலாக 700 கன அடி சேர்த்து மொத்தம் 760 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த தண்ணீர் கள்ளந்திரி பாசனத்துக்கு திறந்து விடப்படுவதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 50 அடிக்கு கீழ் நீர் மட்டம் குறைந்து விட்ட நிலையில் தற்போது கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுவதால் மேலும் நீர் மட்டம் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பெரியாறு அணையின் நீர் மட்டம் 115.60 அடியாக உள்ளது. நீர் வரத்து முற்றிலும் நின்று விட்டது. அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இருப்பு 1835 மல்லியன் கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 39.15 அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 88.39 அடி.

    வைகை அணையில் இருந்து கள்ளந்திரி பாசனத்திற்காக இன்று காலை முதல் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. #Vaigaidam
    கூடலூர்:

    பெரியாறு, வைகை அணைகளில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்காக முறைவைத்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    வடகிழக்கு பருவமழை ஏமாற்றிய நிலையில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் இம்முறை கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி வைகை அணையில் இருந்து ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் மதுரை கள்ளந்திரி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    கடந்த வாரம் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 60 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை 8 மணி முதல் கூடுதலாக 500 கன அடி சேர்த்து 560 கன அடியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு முற்றிலும் நின்று விட்டது. அணையின் நீர்மட்டம் 53.77 அடியாகவும் இருப்பு 2526 மி.கன அடியாகவும் உள்ளது.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 117.45 அடியாக உள்ளது. வரத்து 94 கன அடி. திறப்பு 300 கன அடி. இருப்பு 2168 மி.கன அடி. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 42.40 அடி. திறப்பு 60 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 92.28 அடி. திறப்பு 9 கன அடி.

    கூடலூரில் 1.7, வைகை அணையில் 2. மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. #Vaigaidam

    கள்ளந்திரி பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து இன்று காலை முதல் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
    கூடலூர்:

    பருவமழை ஏமாற்றியதால் பெரியாறு, வைகை அணைகளின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது. இருந்த போதும் வைகை அணையில் இருந்து முறைநீர் பாசன வழியில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 60 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    தற்போது கள்ளந்திரி பாசனத்துக்காக இன்று காலை முதல் 800 கன அடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டது. வைகை அணையின் நீர் மட்டம் 56.27 அடியாக உள்ளது. வரத்து 156 அடியாகவும், திறப்பு 860 கன அடியாகவும் உள்ளது. இருப்பு 2,927 மில்லியன் கன அடி.

    இதே போல் பெரியாறு அணையின் நீர் மட்டமும் தொடர்ந்து சரிந்து வருவதால் முறை நீர் பாசன வழியில் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 118.80 அடியாக உள்ளது. வரத்து 155 கன அடி. திறப்பு 467 கன அடி. இருப்பு 2,412 மில்லியன் கன அடி.

    மஞ்சளாறு அணை நீர் மட்டம் 44.55 அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 98.07 அடி. வரத்து 9 கன அடி. திறப்பு 24 கன அடி.

    முல்லைபெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து அணையின் நீர்மட்டம் மேலும் உயரவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
    கூடலூர்:

    கேரள எல்லைப் பகுதியில் உள்ள முல்லைபெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றது. கடந்த 4 ஆண்டுகளாகவே போதிய அளவு மழை பெய்யாத நிலையில் ஒருபோக நெல்சாகுபடி மட்டுமே நடைபெற்றது.

    இந்த ஆண்டு கோடை மழை ஓரளவு கை கொடுத்ததால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது. தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால் கனமழை பெய்து அணையின் நீர்மட்டம் மேலும் உயரவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இந்த வருடமாவது ஜூன் முதல் வாரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. மழையை நம்பி விவசாயப்பணிகளை தொடங்க விவசாயிகள் தயக்கம்காட்டி வருகின்றனர். தற்போது அணையின் நீர்மட்டம் 116 அடியாக உள்ளது. 260 கனஅடிநீர் வருகிறது. நேற்று வரை 50 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் 100 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 36.38 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 60 கனஅடிநீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறந்துவிடப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.40 அடியாக உள்ளது. 31 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.11 அடியாக உள்ளது. 3 கனஅடிநீர் திறந்துவிடப்படுகிறது. வரத்து இல்லை. பெரியாறு 10, தேக்கடி 2.4, கூடலூர் 1.4, சண்முகாநதிஅணை 1, சோத்துப்பாறை 2 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

    ×