என் மலர்
நீங்கள் தேடியது "accient"
- ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பாசார் கிராமம் புதிய மாரியம்மன் கோவில் தெருவை திலீப்குமார் மகன் சதீஷ்குமார் (வயது 20). புதிய காலனியை சேர்ந்த கலியபெருமாள் மகன் பழனி (20) புது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நடேசன் மகன் வெங்கடேசன்( 20).
இவர்கள் 3 பேரும் நண்பர்கள் தனது நண்பரின் இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு சொந்த வேலை காரணமாக பாசார் கிராமத்திலிருந்து ராமநத்தம் வந்துவிட்டு மீண்டும் சொந்த ஊரான பாசார் கிராமத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாசார் நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஆவட்டி கூட்டு ரோடு பாரத் பெட்ரோலியம் பங்க் எதிரே வந்த போது அவ்வழியே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு 2 பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள். படுகாயம் அடைந்த மற்றொருவர் மீட்கப்பட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவரும் இறந்தார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்துள்ள நித்யா விளையாட்டு போட்டியிலும் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.
- கடந்த 2016ம் ஆண்டு தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் பெற்றுள்ளார்.
வேடசந்தூர்:
சென்னை மாதவரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்தவர் நித்யா (வயது 35). இதே போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த மதுரையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (38) என்பவருடன் நேற்று மதுராந்தகம் அருகே ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது சாலையில் தறிகெட்டு ஓடிய கார் இவர்கள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து விபத்தில் பலியான நித்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கொசவபட்டிக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. அங்கு மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.
விபத்தில் பலியான நித்யாவின் தந்தை சவுந்தர்ராஜன் இறந்து விட்டார். தாய் சரஸ்வதி (63) வேடசந்தூரில் உள்ள புகையிலை ஆராய்ச்சி மையத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நித்யாவுக்கு 2 மூத்த சகோதரிகளும், ஒரு அண்ணனும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். சிறு வயது முதலே போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்பது நித்யாவின் ஆசையாக இருந்துள்ளது. திண்டுக்கல்லில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்துள்ள நித்யா விளையாட்டு போட்டியிலும் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.
கராத்தே, குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வாங்கி குவித்துள்ளார். 16 ஆண்டுகளாக காவல் துறையில் பணியாற்றி வந்த அவர் கடந்த 2016ம் ஆண்டு தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் பெற்றுள்ளார்.
திருமணமாகாமல் காவல் துறையில் தொடர்ந்து துடிப்பாக பணியாற்றி வந்த நித்யா விபத்தில் பலியான சம்பவம் அந்த கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.






