என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திட்டக்குடி அருகே வாகனம் மோதி 3 வாலிபர்கள் பலி
- ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பாசார் கிராமம் புதிய மாரியம்மன் கோவில் தெருவை திலீப்குமார் மகன் சதீஷ்குமார் (வயது 20). புதிய காலனியை சேர்ந்த கலியபெருமாள் மகன் பழனி (20) புது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நடேசன் மகன் வெங்கடேசன்( 20).
இவர்கள் 3 பேரும் நண்பர்கள் தனது நண்பரின் இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு சொந்த வேலை காரணமாக பாசார் கிராமத்திலிருந்து ராமநத்தம் வந்துவிட்டு மீண்டும் சொந்த ஊரான பாசார் கிராமத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாசார் நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஆவட்டி கூட்டு ரோடு பாரத் பெட்ரோலியம் பங்க் எதிரே வந்த போது அவ்வழியே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு 2 பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள். படுகாயம் அடைந்த மற்றொருவர் மீட்கப்பட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவரும் இறந்தார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்