search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "abled persons"

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அக்டோபா் 6 முதல் நவம்பா் 1 ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.
    • பிரதிவாரம் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும்

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் நவம்பா் 1 ஆம் தேதி வரை நிறுத்திவைக்கப்படுகிறது.

    இதுகுறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை ஆகியன சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அக்டோபா் 6 முதல் நவம்பா் 1 ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.

    இதனால், பிரதிவாரம் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் நவம்பா் 1 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நவம்பா் 3 ஆம் தேதி முதல் மீண்டும் அடையாள அட்டை வழங்கும் முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
    • மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் UDID மாற்றுத்திறனாளி அட்டை பதிவு செய்யும் முகாமும் நடைபெற உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ெரயில்வே பீடர் ரோட்டில் அமைந்து ள்ள காமராஜர் திருமண மண்டபத்தில் நாளை (19-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஐ.ஓ.சி.எல். & அலிம்கோ மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இணைந்து ரூ.1 கோடி மதிப்பில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயற்கை உறுப்புகள், உபகரணங்கள் வழங்குவதற்கு ஏதுவாக அவர்களின் தேவையை மதிப்பீடு செய்ய மருத்துவர்கள், அலிம்கோ நிறுவன அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கும் முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் தகுதியுடைய, தேவையுள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அசல் மற்றும் நகல் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 5, மாத வருமானம் ரூ.22 ஆயிரத்து 500-க்குள் உள்ள வருமான சான்று ஆகியவற்றுடன் பங்கேற்று பயன்பெறலாம்.

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி 3 சக்கர வாகனம், நடைக்குச்சி, காதொலி கருவி, கண் கண்ணாடிகள், செயற்கை கை, கால்கள் போன்ற எண்ணற்ற உபகரணங்களும் உதவிகளும் பெற்று பயன்பெறலாம்.

    மேலும் இந்த முகாமில் புதிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் UDID மாற்றுத்திறனாளி அட்டை பதிவு செய்யும் முகாமும் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×