search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
    • மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் UDID மாற்றுத்திறனாளி அட்டை பதிவு செய்யும் முகாமும் நடைபெற உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ெரயில்வே பீடர் ரோட்டில் அமைந்து ள்ள காமராஜர் திருமண மண்டபத்தில் நாளை (19-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஐ.ஓ.சி.எல். & அலிம்கோ மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இணைந்து ரூ.1 கோடி மதிப்பில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயற்கை உறுப்புகள், உபகரணங்கள் வழங்குவதற்கு ஏதுவாக அவர்களின் தேவையை மதிப்பீடு செய்ய மருத்துவர்கள், அலிம்கோ நிறுவன அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கும் முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் தகுதியுடைய, தேவையுள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அசல் மற்றும் நகல் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 5, மாத வருமானம் ரூ.22 ஆயிரத்து 500-க்குள் உள்ள வருமான சான்று ஆகியவற்றுடன் பங்கேற்று பயன்பெறலாம்.

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி 3 சக்கர வாகனம், நடைக்குச்சி, காதொலி கருவி, கண் கண்ணாடிகள், செயற்கை கை, கால்கள் போன்ற எண்ணற்ற உபகரணங்களும் உதவிகளும் பெற்று பயன்பெறலாம்.

    மேலும் இந்த முகாமில் புதிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் UDID மாற்றுத்திறனாளி அட்டை பதிவு செய்யும் முகாமும் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×