search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நிறுத்திவைப்பு  - கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவிப்பு
    X

    கோப்பு படம்.

    மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நிறுத்திவைப்பு - கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவிப்பு

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அக்டோபா் 6 முதல் நவம்பா் 1 ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.
    • பிரதிவாரம் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும்

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் நவம்பா் 1 ஆம் தேதி வரை நிறுத்திவைக்கப்படுகிறது.

    இதுகுறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை ஆகியன சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அக்டோபா் 6 முதல் நவம்பா் 1 ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.

    இதனால், பிரதிவாரம் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் நவம்பா் 1 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நவம்பா் 3 ஆம் தேதி முதல் மீண்டும் அடையாள அட்டை வழங்கும் முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×