search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "abduct"

    • பஸ் நிலையத்தில் திரிந்த வடமாநில பெண்ணை கடத்த முயன்றனர்.
    • அந்த பெண் கூச்சலிட்டதால் அந்த பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் அந்த பெண்ணை மீட்டனர்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் கடந்த 2 நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றி திரிந்து வந்துள்ளார். அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். அவரை நேற்று இரவு சிலர் ஆட்டோவில் கடத்தி செல்ல முயன்றனர்.

    அப்போது அந்த பெண் கூச்சலிட்டதால் அந்த பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் அந்த பெண்ணை மீட்டனர். பின்னர் அவருக்கு உணவு, குடிநீர் கொடுத்து பழ மார்க்கெட் வணிக வளாகத்தில் பத்திரமாக தங்க வைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் எந்த அறக்கட்ட ளையினரும் அந்த பெண்ணை காப்ப கத்தில் சேர்க்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மதுரை மாநகர் மாவட்ட பா.ஜனதா தலைவர் வக்கீல் முத்துக்குமார், சாம் சரவணன், ரெட்கிராஸ் மூகாம்பிகை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் போலீசார் உதவியுடன் அந்த பெண்ணை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக எம்.பி கரிய முண்டாவின் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது கடத்தப்பட்ட 4 போலீஸ் அதிகாரிகள் மீட்கப்பட்டனர். #Policemenrescued
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக பா.ஜ.க. எம்.பி. கரியமுண்டா வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த 4 அதிகாரிகள் கடத்தப்பட்டதாக வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கினர்.

    இந்நிலையில், டிலிங் பாரா பகுதியில் உள்ள வனப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், கடத்தப்பட்ட 4 காவல் அதிகாரிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பேசிய காவல்துறை இயக்குனர் பாண்டே, உள்ளூர் மக்களின் உதவியுடன் அதிகாரிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மீட்கப்பட்ட அதிகாரி கூறுகையில், பாதல்கர்கி இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் தாங்கள் கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    முன்னதாக 3 காவல் அதிகாரிகள் மட்டுமே கடத்தப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பதிலளித்த காவல்துறை இயக்குனர், 4-ம் அதிகாரி விடுமுறையில் இருப்பதாக எண்ணியிருந்ததாகவும், மீட்கப்பட்ட பின்னரே 4 பேர் என உறுதியானதாகவும் தெரிவித்துள்ளார். #PolicemenRescued
    ×