search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடத்தப்பட்ட 4 பாதுகாப்பு அதிகாரிகள் மீட்பு
    X

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடத்தப்பட்ட 4 பாதுகாப்பு அதிகாரிகள் மீட்பு

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக எம்.பி கரிய முண்டாவின் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது கடத்தப்பட்ட 4 போலீஸ் அதிகாரிகள் மீட்கப்பட்டனர். #Policemenrescued
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக பா.ஜ.க. எம்.பி. கரியமுண்டா வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த 4 அதிகாரிகள் கடத்தப்பட்டதாக வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கினர்.

    இந்நிலையில், டிலிங் பாரா பகுதியில் உள்ள வனப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், கடத்தப்பட்ட 4 காவல் அதிகாரிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பேசிய காவல்துறை இயக்குனர் பாண்டே, உள்ளூர் மக்களின் உதவியுடன் அதிகாரிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மீட்கப்பட்ட அதிகாரி கூறுகையில், பாதல்கர்கி இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் தாங்கள் கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    முன்னதாக 3 காவல் அதிகாரிகள் மட்டுமே கடத்தப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பதிலளித்த காவல்துறை இயக்குனர், 4-ம் அதிகாரி விடுமுறையில் இருப்பதாக எண்ணியிருந்ததாகவும், மீட்கப்பட்ட பின்னரே 4 பேர் என உறுதியானதாகவும் தெரிவித்துள்ளார். #PolicemenRescued
    Next Story
    ×