search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadiperku"

    • அன்னதானம் ஒருவரை உச்ச நிலைக்கு நிச்சயம் கொண்டு செல்லும்.
    • ஆடிப்பெருக்கன்று காவிரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

    ஆடி 18-ம் நாள் புது சக்தி தரும் நாளாக மாறுவதாக கணித்துள்ளனர். அதாவது அன்று புத்துணர்ச்சி பன் மடங்கு பெருகும். எனவே எந்த செயலை செய்தாலும் அது பெருகும் என்பது ஐதீகம்.

    புண்ணியத்தை அதிகரிக்க செய்யும் ஆடி பெருக்கு தினத்தன்று அன்னதானம் செய்வது குடும்பத்தை மேம்படுத்தி செழிக்க வைக்கும். பொதுவாகவே எந்த ஒரு தானத்துக்கும் உரிய பலன் கிடைக்கும்.

    அதிலும் அன்னதானத்துக்கு ஈடு, இணையே கிடையாது. காக்காவுக்கு சாதம் வைப்பதில் இருந்து வயிறு நிறைய உணவு வழங்குவது வரை அன்னதானம் ஒருவரை உச்ச நிலைக்கு நிச்சயம் கொண்டு செல்லும்.

    இத்தகைய அன்னதானத்தை, இரட்டிப்பு பலன் தரும் ஆடி பெருக்கு தினத்தன்று செய்தால் வாழ்வு மங்களகரமாக மாறும். ஆடிப்பெருக்கு தினத்தன்று எந்த நட்சத்திரம், திதி அமைகிறதோ, அதற்கு ஏற்பவும் நமக்கு பலன்கள் கிடைக்கும்.

    சதயம் நட்சத்திரம் என்பது முழுமையான ராகு பகவான் நட்சத்திரமாகும். 7 மணிக்கு பிறகு தொடங்கும் பூரட்டாதி நட்சத்திரம் குருவுக்குரிய நட்சத்திரமாகும்.

    தனி ஆலயத்தில் காவிரி தாய்

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் திருச்சேறை என்ற ஊர் உள்ளது. இங்கு சாரப்புட்கரணி என்ற குளத்தின் தென்மேற்கு கரையில் காவிரி தாய்க்கு தனிக்கோவில் உள்ளது. இங்கு காவிரி தாய் தனது மடியில் கிருஷ்ணனை வைத்தபடி காட்சி தருகிறாள். ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு தினத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    கும்பகோணம் அருகே திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் மங்களாம்பிகை கோவில் உள்ளது. இங்கு உள் பிரகாரத்தில் காவிரி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. ஆடிப்பெருக்கன்று காவிரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். திருமணம் ஆன புதுமண தம்பதிகள் தாலிச்சரடை வைத்து பூஜை செய்து அணிந்து கொள்வர். வெற்றிலை, பாக்கு, பூ மாலை ஆகியவற்றை தண்ணீரில் விடுவார்கள்.

    • பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் அம்மன் நிறம் மாறுகிறது.
    • காவிரி தாயாருக்கு, திருமால் மாலை சமர்ப்பிக்கும் வைபவம் சிறப்பு.

    கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த பனையத்தூர் கிராமத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட மீனாட்சி அம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சுப்ரமணிய சுவாமியின் முகத்தில் ஆடிப்பெருக்குக்கு ஒரு வாரம் முன்பும், ஆடிப்பெருக்குக்கு ஒருவாரம் பின்பும், தினமும் காலை 8 முதல் 8.05 மணி வரை சூரிய ஒளி விழுகிறது. இந்த அதிசய நிகழ்வை பக்தர்கள் கண்டுகளிக்கிறார்கள்.

    பூக்கள் நிரப்பும் விழா

    சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி. இங்குள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு அன்று அம்பாள் சன்னதி முழுவதும் பூக்களால் நிரப்பி, பூச்சொரிதல் விழா நடத்தப்படுகிறது. இங்கு தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் காளியம்மன் மீதும் சூரியஒளி விழுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

    தலைப்பாகை அணியும் அகத்தியர்

    ஈரோடு மாவட்டம் காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு அன்று சிவனுக்கு காவிரி நீர் அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அகத்தியர் இங்கு வந்து காவிரி உருவாகக் காரணமானார் என்பது நம்பிக்கை. அதனால் ஆடிப்பெருக்கு அன்று, ஒரு நாள் மட்டும் அகத்தியருக்கு இங்கு தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்து மரியாதை செய்யப்படுகிறது.

    கல்லுமடை மீனாட்சியம்மன்

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கல்லுமடை இங்கு 1300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான திருநாகேசுவர முடையார் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் அற்புதமானது. அமாவாசை, பவுணர்மி நாட்களில் அம்மன் விக்கிரகத்தின் கண்களில் பளிங்கு போன்று ஒளி வீசுகிறது. இரண்டு மாதத்துக்கு ஒரு முறை, அம்மன் விக்கிரகம் தானாக நிறம் மாறுகிறது.

    பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் அம்மன் நிறம் மாறுகிறது. இங்கு ஆடி மாத விழாக்களில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இந்தக் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

    காவிரி தாயாருக்கு சீர்வரிசை!

    ஸ்ரீ ரங்கத்தில் ஆடி பதினெட்டாம் பெருக்கு நன்னாளில், காவிரி நதி நுங்கும் துரையுமாக பெருக்கெடுத்து ஓடும். இதனை காண அரங்கள், காவிரிக்கரைக்கு எழுந்தருள்வார்!

    ஆலயத்தில் இருந்து அம்மா மண்டபத்துக்கு தங்கப்பல்லக்கில் பெருமாள் வரும் அழகே அழகு! அங்கே திருவாராதனம் முடிந்து, மாலை வேளைகளில், காவிரி தாயாருக்கு மாலை, தாலி, பொட்டு முதலான சீர்வரிசைகள், யானையின் மேல் வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்படும். காவிரித் தாயாருக்கு, திருமால் மாலை சமர்ப்பிக்கும் வைபவத்தை காண, எண்ணற்ற பக்தர்கள் திரளாக கூடி பெருமாளையும் காவிரித்தாயையும் வணங்கி மகிழ்வர்!

    • நம் முன்னோர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தார்கள்.
    • காவிரிப் பெண்ணுக்கு நடைபெறும் மண விழாவே ஆடிப்பெருக்கு

    நம் முன்னோர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தார்கள். இயற்கைக்கு ஊறு விளைவிக்கும் எதையும் செய்யவில்லை. மாறாக இயற்கையை போற்றினார்கள்.

    அதன் ஒரு பகுதியாகத்தான் நதிகளுக்கு விழா எடுத்து நன்றி தெரிவிக்கும் பழக்கத்தை ஆதி தமிழர்கள் கடைபிடித்தனர்.

    ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை பெருக்கு என்பார்கள்.

    அந்த ஆறு பாயும் கரையோர பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைத்திருப்பார்கள். அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும்.

    ஆடி மாதம் அன்று அந்த 18 படிகளும் மூழ்கி விடும் அளவுக்கு புது வெள்ளம் கரைபுரண்டு ஓடும். அந்த அளவுக்கு ஆடியில் பருவ மழை பெய்யோ பெய் என்று பெய்யும். அந்த காலத்தில் பருவ மழைகள் குறித்த காலத்தில் பெய்தது. (இந்த ஆண்டு இன்னும் வெயில் 100 டிகிரிக்கு முறையவில்லை).

    ஆடி மாத மழையால் ஏற்படும் புது வெள்ளத்தை வரவேற்று ஒரு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற பண்டைய தமிழரின் எண்ணத்தில் உருவானதே ஆடி பதினெட்டாம் பெருக்கு என்கிற ஆடிப் பெருக்கு.

    இந்த ஆடிப்பெருக்கை காவிரிக்கரையில் ஏன் கொண்டாட வேண்டும் என்கிறீர்களா? அதற்கும் ஒரு கதை உள்ளது.

    கைலாயத்தில் சிவன்-பார்வதி திருமணத்தின் போது வடபுலம் தாழ்ந்தது. தென் புலம் உயர்ந்தது. இதனால் அகத்திய முனிவரை, தென் திசைக்கு சென்று பூமியை சமநிலைப்படுத்துமாறு சிவபெருமான் கேட்டுக் கொண்டார்.

    சிவனை திருமணம் செய்வதற்காக பார்வதி ஒற்றைக் காலில் தவம் இருந்த போது கையில் ஒரு மாலையும் வைத்திருந்தாள். அந்த மாலையை ஒரு பெண்ணாக்கி, அகத்திய முனிவரிடம் வழங்கினார் அவள். அவரும் அந்த பெண்ணை தனது கமண்டலத்தில் அடக்கி வைத்திருந்தார்.

    அவர் தென்னகம் நோக்கி வரும் போது அவரது கமண்டலத்தில் இருந்து வழிந்த தண்ணீரே காவிரி ஆனது. கமண்டலத்தில் மீதம் இருந்த தண்ணீரை அகத்தியர் எடுத்துச் சென்று தான் வசித்தபொதிகை மலையில் கொண்டு விட... அது தாமிரபரணி ஆனது என்கிறது புராணக் கதை.

    ஆடிப் பெருக்கு அன்று காவிரி கரையோரங்களில் ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு, பல்வேறு விதமான வழிபாடுகள் செய்கிறார்கள். சுமங்கலி பூஜையும் நடக்கிறது.

    வாழை இலையை விரித்து அதில் விளக்கேற்றி, பூஜைக்குரியபொருட்களை வைத்து, புது மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், சட்டைத் துணி போன்ற மங்கலப்பொருட்களையும் வைத்து காவிரி அன்னையை பெண்கள் வழிபடுவார்கள்.

    வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண் ஒருவர் சுமங்கலிப் பூஜை நடத்துவார். அதன்பிறகு, அந்த பெண், தனது வீட்டு சுமங்கலிப் பெண்களுக்கு புதிய தாலிக் கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பார். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள்.

    திருமணம் ஆகாத பெண்களும் தாலி சரடு போன்ற மஞ்சள் கயிற்றை அப்போது காவிரி அன்னையை வணங்கி கட்டிக் கொள்வார்கள்.

    அப்படி செய்வதால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. பார்வதி தேவி தன் திருமணத்துக்கு முன்பு அகத்தியரிடம் கொடுத்த பெண்தான் காணியாக ஓடுவதால், அவளை வழிபட்டால் தங்களுக்கு தருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையும் ஐதீகமுமு ஏற்பட்டது.

    ஈரோடு மாவட்டம் பவானியில் காவிரியும், பவானி ஆறும் சங்கமிக்கும் கூடுதுறை முதல்... பூம்புகாரில் வங்கக் கடலுடன் காவிரி கலக்கும் இடம் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப் பெருக்கு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மொத்தத்தில், காவிரிப் பெண்ணுக்கு நடைபெறும் மண விழாவாகவே இந்த ஆடிப் பெருக்கு விழா அமைகிறது.

    ×