search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poochorithal"

    • பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் அம்மன் நிறம் மாறுகிறது.
    • காவிரி தாயாருக்கு, திருமால் மாலை சமர்ப்பிக்கும் வைபவம் சிறப்பு.

    கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த பனையத்தூர் கிராமத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட மீனாட்சி அம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சுப்ரமணிய சுவாமியின் முகத்தில் ஆடிப்பெருக்குக்கு ஒரு வாரம் முன்பும், ஆடிப்பெருக்குக்கு ஒருவாரம் பின்பும், தினமும் காலை 8 முதல் 8.05 மணி வரை சூரிய ஒளி விழுகிறது. இந்த அதிசய நிகழ்வை பக்தர்கள் கண்டுகளிக்கிறார்கள்.

    பூக்கள் நிரப்பும் விழா

    சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி. இங்குள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு அன்று அம்பாள் சன்னதி முழுவதும் பூக்களால் நிரப்பி, பூச்சொரிதல் விழா நடத்தப்படுகிறது. இங்கு தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் காளியம்மன் மீதும் சூரியஒளி விழுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

    தலைப்பாகை அணியும் அகத்தியர்

    ஈரோடு மாவட்டம் காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு அன்று சிவனுக்கு காவிரி நீர் அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அகத்தியர் இங்கு வந்து காவிரி உருவாகக் காரணமானார் என்பது நம்பிக்கை. அதனால் ஆடிப்பெருக்கு அன்று, ஒரு நாள் மட்டும் அகத்தியருக்கு இங்கு தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்து மரியாதை செய்யப்படுகிறது.

    கல்லுமடை மீனாட்சியம்மன்

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கல்லுமடை இங்கு 1300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான திருநாகேசுவர முடையார் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் அற்புதமானது. அமாவாசை, பவுணர்மி நாட்களில் அம்மன் விக்கிரகத்தின் கண்களில் பளிங்கு போன்று ஒளி வீசுகிறது. இரண்டு மாதத்துக்கு ஒரு முறை, அம்மன் விக்கிரகம் தானாக நிறம் மாறுகிறது.

    பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் அம்மன் நிறம் மாறுகிறது. இங்கு ஆடி மாத விழாக்களில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இந்தக் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

    காவிரி தாயாருக்கு சீர்வரிசை!

    ஸ்ரீ ரங்கத்தில் ஆடி பதினெட்டாம் பெருக்கு நன்னாளில், காவிரி நதி நுங்கும் துரையுமாக பெருக்கெடுத்து ஓடும். இதனை காண அரங்கள், காவிரிக்கரைக்கு எழுந்தருள்வார்!

    ஆலயத்தில் இருந்து அம்மா மண்டபத்துக்கு தங்கப்பல்லக்கில் பெருமாள் வரும் அழகே அழகு! அங்கே திருவாராதனம் முடிந்து, மாலை வேளைகளில், காவிரி தாயாருக்கு மாலை, தாலி, பொட்டு முதலான சீர்வரிசைகள், யானையின் மேல் வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்படும். காவிரித் தாயாருக்கு, திருமால் மாலை சமர்ப்பிக்கும் வைபவத்தை காண, எண்ணற்ற பக்தர்கள் திரளாக கூடி பெருமாளையும் காவிரித்தாயையும் வணங்கி மகிழ்வர்!

    தஞ்சை பெரியகோவிலில் தனி சன்னதியில் பெரியநாயகி அம்மனுக்கு இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தஞ்சை பெரியகோவிலில் தனி சன்னதியில் பெரியநாயகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் உலக நன்மைக்காக பெரியநாயகி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடத்தப்படும்.

    இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா வைகாசி விசாகமான நேற்று மாலை நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் பூக்களை அன்பளிப்பாக அளித்தனர். இந்த பூக்களை கூடைகளில் வைத்து பெரியகோவில் வளாகத்தில் உள்ள நால்வர் மண்டபத்தில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள், கோவில் வளாகத்தை சுற்றி வந்து பெரியநாயகி அம்மன் சன்னதியை சென்றடைந்தனர்.

    பின்னர் பக்தர்களால் வழங்கப்பட்ட ரோஜா, மகிழம், தும்பை உள்ளிட்ட 36 வகையான மலர்களால் பெரியநாயகி அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வழங்கிய மலர்களின் எடை 1,000 கிலோ ஆகும்.
    பங்குனி மாதத்தில் அம்பிகையின் ஆலயங்களில், நடக்கும் பூச்சொரிதல் விழாவில் கலந்து கொண்டு, அம்பிகையை வழிபாடு செய்வதால், நமக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கின்றன.
    பங்குனி மாதத்தில் ஊர் தோறும் அம்பிகையின் ஆலயங்களில், பூச்சொரிதல் விழா நடைபெறும். வாசமுள்ள மலர்களையும், வண்ண வண்ண பூக்களையும் கூடைகளில் கொண்டு வந்து, அம்பிகையின் மீது தூவி பக்தர்கள் வழிபாடு செய்வார்கள்.

    அம்பிகையின் மீது தூவி வழிபடப் படுவதால் இதற்கு ‘பூச்சொரிதல்’ என்று பெயர். இந்த பூச்சொரிதல் விழாவில் கலந்து கொண்டு, அம்பிகையை வழிபாடு செய்வதால், நமக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கின்றன. தேனைச் சுமக்கும் பூக்களை அம்பிகைக்கு அர்ப்பணிக்கும் பொழுது, தேனான வாழ்க்கை நமக்கு அமையும்.

    அதைச் சுமந்து கொண்டு பாதயாத்திரையாக செல்லும் பொழுது, ‘ஓம்சக்தி’ என்று உச்சரிப்பதால், நாம் சிறப்பான பலன்களைப் பெறுகிறோம். அம்பிகையின் மனதைக் குளிர்வித்தால் இந்த உலகம் குளிர்ச்சி அடையும். மழை வளம் பெருகும். “மாரியல்லால் ஒரு காரியமில்லை” என்ற பழமொழிப்படி, மாரியம்மனை வழிபட்டு காரியங்களைத் தொடங்கினால், மகத்தான பலன் நமக்குக் கிடைக்கும். சீரும், சிறப்பும், செல்வாக்கும் பெருக வைக்கும் மாரியம்மனை, பங்குனி மாதத்தில் மலர் தூவி வழிபடுவோம். புகழ் குவிய வழி காண்போம்.
    ×