search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirucherai"

    • அன்னதானம் ஒருவரை உச்ச நிலைக்கு நிச்சயம் கொண்டு செல்லும்.
    • ஆடிப்பெருக்கன்று காவிரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

    ஆடி 18-ம் நாள் புது சக்தி தரும் நாளாக மாறுவதாக கணித்துள்ளனர். அதாவது அன்று புத்துணர்ச்சி பன் மடங்கு பெருகும். எனவே எந்த செயலை செய்தாலும் அது பெருகும் என்பது ஐதீகம்.

    புண்ணியத்தை அதிகரிக்க செய்யும் ஆடி பெருக்கு தினத்தன்று அன்னதானம் செய்வது குடும்பத்தை மேம்படுத்தி செழிக்க வைக்கும். பொதுவாகவே எந்த ஒரு தானத்துக்கும் உரிய பலன் கிடைக்கும்.

    அதிலும் அன்னதானத்துக்கு ஈடு, இணையே கிடையாது. காக்காவுக்கு சாதம் வைப்பதில் இருந்து வயிறு நிறைய உணவு வழங்குவது வரை அன்னதானம் ஒருவரை உச்ச நிலைக்கு நிச்சயம் கொண்டு செல்லும்.

    இத்தகைய அன்னதானத்தை, இரட்டிப்பு பலன் தரும் ஆடி பெருக்கு தினத்தன்று செய்தால் வாழ்வு மங்களகரமாக மாறும். ஆடிப்பெருக்கு தினத்தன்று எந்த நட்சத்திரம், திதி அமைகிறதோ, அதற்கு ஏற்பவும் நமக்கு பலன்கள் கிடைக்கும்.

    சதயம் நட்சத்திரம் என்பது முழுமையான ராகு பகவான் நட்சத்திரமாகும். 7 மணிக்கு பிறகு தொடங்கும் பூரட்டாதி நட்சத்திரம் குருவுக்குரிய நட்சத்திரமாகும்.

    தனி ஆலயத்தில் காவிரி தாய்

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் திருச்சேறை என்ற ஊர் உள்ளது. இங்கு சாரப்புட்கரணி என்ற குளத்தின் தென்மேற்கு கரையில் காவிரி தாய்க்கு தனிக்கோவில் உள்ளது. இங்கு காவிரி தாய் தனது மடியில் கிருஷ்ணனை வைத்தபடி காட்சி தருகிறாள். ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு தினத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    கும்பகோணம் அருகே திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் மங்களாம்பிகை கோவில் உள்ளது. இங்கு உள் பிரகாரத்தில் காவிரி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. ஆடிப்பெருக்கன்று காவிரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். திருமணம் ஆன புதுமண தம்பதிகள் தாலிச்சரடை வைத்து பூஜை செய்து அணிந்து கொள்வர். வெற்றிலை, பாக்கு, பூ மாலை ஆகியவற்றை தண்ணீரில் விடுவார்கள்.

    ×