search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Cup Soccer"

    • கடந்த உலக கோப்பையை விட 16 நாடுகள் கூடுதலாகும்.
    • உலக கோப்பையில் விளையாடும் 48 அணிகளும் 12 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன.

    கிசாலி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்று உலக கோப்பை கால்பந்து போட்டியாகும்.

    ஒலிம்பிக் போட்டியை போலவே உலக கோப்பை கால்பந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.

    கடைசியாக உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த ஆண்டு கத்தாரில் நடந்தது. கத்தாரில் நடந்த 22-வது உலக கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா சாம்பியன் பட்டம் பெற்றது. மெஸ்சி தலைமையிலான அந்த அணி இறுதிப் போட்டியில் பிரான்சை வீழ்த்தியது.

    23-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. 2026-ம் ஆண்டு ஜுன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

    இந்த உலக கோப்பை போட்டியில் மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கின்றன. கடந்த உலக கோப்பையை விட 16 நாடுகள் கூடுதலாகும். கத்தார் உலக கோப்பை 32 அணிகள் பங்கேற்றன.

    உலக கோப்பையில் விளையாடும் 48 அணிகளும் 12 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம் பெற்று இருக்கும். முதலில் 16 பிரிவாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது ஒரு பிரிவில் 3 நாடுகள் இடம் பெறுவது என்று திட்டமிடப்பட்டது.

    தற்போது சர்வதேச கால்பந்து சம்மேளனம் அதை மாற்றி 12 பிரிவாக பிரிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மொத்தம் 104 ஆட்டங்கள் நடைபெறும். கத்தார் உலக கோப்பையைவிட 40 போட்டிகள் கூடுதலாகும்.கடந்த உலக கோப்பையில் மொத்தம் 64 ஆட்டங்கள் நடத்தப்பட்டது.

    • வழி நெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • சாலைகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    பியூனஸ் அயர்ஸ்:

    கத்தாரில் நடந்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது.

    தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரம் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை உச்சி முகர்ந்தது.


    இந்த நிலையில் உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியினர் தாயகம் திரும்பினார்.அந்த வகையில் நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்சில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வழி நெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலைகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தேசிய வரலாற்று நினைவு சின்ன வளாகத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வெற்றியை கொண்டாடினர். மேலே இருந்து பார்க்கும் போது இது மக்கள் கூட்டம் தானா என சந்தேகம் படும் அளவில் இருந்தது.


    கிட்டத்தட்ட 40 லட்சம் மக்கள் வரவேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அது சம்பந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • வழி நெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • சாலைகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    பியூனஸ் அயர்ஸ்:

    கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் பெற்றது. மிகவும் பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி பிரான்சை வீழ்த்தியது.

    அர்ஜென்டினா உலக கோப்பையை வெல்ல கேப்டனும், நட்சத்திர வீரரு மான லியோனல் மெஸ்சி முக்கிய பங்கு வகித்தார். அவர் 7 கோல்கள் அடித்து முத்திரை பதித்தார். அதோடு 3 கோல்கள் அடிக்க உதவி புரிந்து உள்ளார்.

    உலக கோப்பையை வென்றதன் மூலம் 35 வயதான மெஸ்சியின் கனவு நனவாகியுள்ளது. 5-வது உலக கோப்பையில் தான் அவரால் இதை சாதிக்க முடிந்தது. இதற்கு முன்பு 2014-ல் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி யுடன் தோற்று கோப்பையை இழந்தார். தற்போது இறுதி போட்டியில் பிரான்சை தோற்கடித்து மெஸ்சி தனது உலக கோப்பை கனவை நனவாக்கி கொண்டார்.

    அர்ஜென்டினா 3-வது முறையாக உலக கோப் பையை வென்றது. இதற்கு முன்பு 1978, 1986-ம் ஆண்டு களில் அந்த அணி சாம்பி யன் பட்டம் பெற்று இருந்தது. மரடோனா வழி யில் மெஸ்சி தன்னை இணைத்துக் கொண்டார். உலக கோப்பையை வென்ற தன் மூலம் கால்பந்தின் அனைத்துக் கால கட்டத் துக்கும் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதை மெஸ்சி நிரூபித்து விட்டார்.

    36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா உலக கோப்பையை வென்றதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தலைநகர் பியுனஸ் அயர்சில் ரசிகர்கள் திரண்டு வந்து தங்கள் நாட்டு கால்பந்து அணியின் வெற்றியை மிகவும் உற்சாகத்துடன் தொடர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.

    அங்குள்ள மைய சதுக்கத்தில் அர்ஜென்டினா ரசிகர்கள் ஒன்று கூடினார்கள். திரும்பிய பக்கம் எல்லாம் தலைகள் தெரியும் அளவுக்கு மக்கள் அலைகடலென திரண்டு இருந்தனர். தங்கள் நாட்டுக்குரிய பாடலை பாடியவாறு உற்சாகம் அடைந்தனர். மெஸ்சி, மெஸ்சி என்று கோஷம் விண்ணை பிளக்கும் வகையில் இருந்தது. வெற்றி கொண்டாட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியினர் இன்று தாயகம் திரும்பினார்.அந்த வகையில் நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்சில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழி நெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலைகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி 2-வது இடத்தை பிடித்த பிரான்ஸ் அணி தனது நாட்டுக்கு திரும்பியது. பாரீஸ் நகரில் கால்பந்து வீரர்களை அந்நாட்டு ரசி கர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இறுதி ஆட்டத்தில் ஹாட்ரிக் கும், அதிக கோல்களை (8) அடித்து தங்க ஷூ வென்ற வருமான எம்பாப்வேயை வாழ்த்தி ரசிகர்கள் கோஷ மிட்டனர்.

    • கேரளாவில்தான் அதிக அளவில் உலக கோப்பை கால்பந்து போட்டியை ரசித்தனர்.
    • கொச்சியைச் சேர்ந்த சச்சின்-அதிரா ஜோடிதான் கால்பந்து வீரர்களின் ஜெர்சியை அணிந்து திருமணம் செய்து கொண்டனர்.

    கொச்சி:

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த நவம்பர் மாதம் 20-ந்தேதி கத்தாரில் தொடங்கியது. நேற்று முன்தினம் இறுதிப் போட்டி நடைபெற்றது.

    இதில் தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள அர்ஜென்டினா அணி ஐரோப்பாவைச் சேர்ந்த பிரான்சை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது.

    உலக கோப்பை போட்டியையொட்டி உலகம் முழுவதும் கால்பந்து ஜுரம் கடந்த ஒரு மாதமாக பரவி இருந்தது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் உலக கோப்பை போட்டியை ரசித்தனர். தங்களுக்கு விருப்பமான அணி வீரர்களின் ஜெர்சியை அணிந்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    இந்தியாவை பொறுத்தவரை அர்ஜென்டினாவுக்கும், மெஸ்சிக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அர்ஜென்டினா வெற்றியை வெகுவாக கொண்டாடினார்கள்.

    கேரளாவில்தான் அதிக அளவில் உலக கோப்பை கால்பந்து போட்டியை ரசித்தனர். மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் பிரமாண்ட திரையில் உலக கால்பந்து போட்டியை பார்த்தனர்.

    இந்த நிலையில் உலக கோப்பை இறுதிப் போட்டி நடந்த தினத்தில் கேரள ஜோடி ஒன்று அர்ஜென்டினா, பிரான்ஸ் வீரர்களின் ஜெர்சியை அணிந்து திருமணம் செய்தது தெரிய வந்துள்ளது.

    கொச்சியைச் சேர்ந்த சச்சின்-அதிரா ஜோடிதான் கால்பந்து வீரர்களின் ஜெர்சியை அணிந்து திருமணம் செய்து கொண்டனர். சச்சின் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சியின் தீவிர ரசிகர். அதிரா பிரான்ஸ் வீரர் எம்பாப்வேயின் தீவிர ஆதரவாளர். இதனால் இருவரும் திருமணத்துக்கான புதிய ஆடைகளின் மேல் கால்பந்து வீரர்களின் ஜெர்சியை அணிந்து மணம் புரிந்து கொண்டனர்.

    அவர்களது திருமண தேதி டிசம்பர் 18 என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் உலக கோப்பை இறுதிப் போட்டி நடந்ததால் மணமக்கள் மெஸ்சி, எம்பாப்வே டி ஷர்டுடன் திருமண கோலத்தில் இருந்தனர்.

    மெஸ்சிக்கு கேரளாவில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அர்ஜென்டினா உலக கோப்பையை வென்றால் 1000 பேருக்கு இலவச பிரியாணி வழங்கப்படும் என்று திருச்சூரில் ஓட்டல் உரிமையாளர் ஒருவர் வாக்குறுதி அளித்தார். அதன்படி அவர் முதலில் வந்த ஆயிரம் பேருக்கு பிரியாணியை இலவசமாக வழங்கினார்.

    *** மெஸ்சி (அர்ஜென்டினா), எம்பாப்வே (பிரான்ஸ்) ஜெர்சியுடன் திருமணம் செய்த கேரள ஜோடியை படத்தில் காணலாம்.

    • தோல்வியால் ஒரு சில இடங்களில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
    • தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை கைப்பற்ற முடியாமல் போனதால் பிரான்ஸ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    உலக கோப்பை இறுதி போட்டியில் பிரான்ஸ் தோற்றதால் அந்நாட்டில் சோகம் நிலவியது. தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை கைப்பற்ற முடியாமல் போனதால் பிரான்ஸ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்த தோல்வியால் ஒரு சில இடங்களில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

    அதே நேரத்தில் தங்கள் நாட்டு வீரர்கள் ஆட்டம் சிறப்பாக இருந்ததாக பிரான்ஸ் ரசிகர்கள் பலர் தெரிவித்தனர்.

    • ஒரே இடத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு
    • கால்பந்து ரசிகர்கள் ஆரவாரம்

    அரக்கோணம்:

    உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி கத்தாரில் அர்ஜென்டினா பிரான்ஸ் கிடையே மிகவும் பரபரப்பாக நடைபெற்றது.

    இந்தப் போட்டியை காண அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் கால்பந்து ரசிகர்களுக்காக பெரிய திரை அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    இந்த ஒளிபரப்பின் போது இரு அணிகளும் சம பலமுடன் விளையாடி 3.3 என்ற கோள் கணக்கில் ஆட்டம் நிறைவுற்ற நிலையில் கூடுதல் நேரத்திலும் இரு அணியினரும் கோல் அடித்து சமநிலை அடைந்தனர். அதனை தொடர்ந்து பெனால்டி ஷூட்அவுட் முறையில் அர்ஜென்டினா வீரர்கள் கோல் அடித்து வெற்றி பெற்றனர்.

    அர்ஜென்டினாவின் வெற்றியை அரக்கோணம் கால்பந்து ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடினர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கால்பந்து போட்டி நேரடி ஒளிபரப்பை பெரிய திரையில் கண்டு மகிழ்ந்து ஆரவாரம் செய்தனர்.

    • அரைஇறுதியில் 0-2 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் பணிந்தது.
    • குரோஷியா அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் மொராக்கோவுடன் கோலின்றி டிரா கண்டது.

    தோகா:

    கத்தாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நாளை இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினாவை சந்திக்கிறது. முன்னதாக இன்று (சனிக்கிழமை) கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரைஇறுதியில் தோல்வி கண்ட குரோஷியா-மொராக்கோ அணிகள் சந்திக்கின்றன.

    அரைஇறுதிக்கு முன்னேறிய ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த முதல் அணி என்ற பெருமையை பெற்ற மொராக்கோ அணி தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ளது. முதலாவது லீக் ஆட்டத்தில் குரோஷியாவுடன் கோலின்றி டிரா செய்த மொராக்கோ அணி பெல்ஜியம், கனடா அணிகளை தோற்கடித்து தனது பிரிவில் (எப்) முதலிடத்தை பிடித்து நாக்-அவுட் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.

    2-வது சுற்றில் ஸ்பெயினுடன் கூடுதல் நேரம் முடிவில் கோலின்றி டிரா செய்த மொராக்கோ அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதுடன், கால்இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை சாய்த்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. அரைஇறுதியில் 0-2 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் பணிந்தது. குரோஷியா அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் மொராக்கோவுடன் கோலின்றி டிரா கண்டது.

    அடுத்த ஆட்டத்தில் கனடாவை வென்றது. அதற்கு அடுத்த ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் கோலின்றி டிரா செய்து தனது பிரிவில் 2-வது இடத்துடன் நாக்-அவுட் சுற்றுக்குள் கால்பதித்தது. 2-வது சுற்றில் ஜப்பானுடன் கூடுதல் நேரத்தில் டிரா (1-1) செய்த குரோஷியா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-1 என்ற கோல் கணக்கில் சாய்த்தது. கால்இறுதியில் பிரேசிலுடன் கூடுதல் நேரம் முடிவில் டிரா (1-1) செய்து பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தது. அரைஇறுதியில் 0-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் சரண் அடைந்தது.

    வலுவான அணிகளை முந்தைய சுற்று ஆட்டங்களில் வீழ்த்தி இருக்கும் இவ்விரு அணிகளும் அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி குறித்து மொராக்கோ அணியின் பயிற்சியாளர் வாலிட் ரெக்ரஜி கூறுகையில், 'இந்த ஆட்டத்தில் மனரீதியாக வலுவாக செயல்படுவது கடினமானதாக இருக்கும். இதுவரை களம் இறங்காத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். 3-வது இடத்தை பிடிக்க கடுமையாக முயற்சிப்போம். இதில் வென்று வெண்கலப்பதக்கத்துடன் தாயகம் திரும்ப விரும்புகிறோம்' என்றார்.

    • பிரான்ஸ் அணி 4-வது முறையாக இறுதி போட்டியில் ஆடுகிறது. 2006-ல் இத்தாலியிடம் தோற்று கோப்பையை பறி கொடுத்தது.
    • அர்ஜென்டினா 36 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது.

    லுசைல்:

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி கத்தாரில் தொடங்கி யது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன.

    கடந்த 2-ந்தேதி லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் நெதர்லாந்து, செனகல் ( குரூப் ஏ ), இங்கி லாந்து , அமெரிக்கா (பி), அர்ஜென்டினா போலந்து (சி), பிரான்ஸ் ஆஸ்திரேலியா ( டி ) , ஜப்பான் , ஸ்பெயின், (இ), மொராக்கோ, குரோஷியா (எப்), பிரேசில், சுவிட்சர்லாந்து (ஜி), போர்ச்சுக்கல், தென் கொரியா ( எச் ) ஆகிய 16 நாடுகள் நாக்அவுட்டான 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

    ஈக்வடார், கத்தார், ஈரான், வேல்ஸ், மெக்சிகோ, சவுதி அரேபியா, துனிசியா, டென்மார்க், ஜெர்மனி, கோஸ்டாரிகா , பெல்ஜியம், கனடா , கேமரூன், செர்பியா, உருகுவே , கானா ஆகிய நாடுகள் முதல் சுற்றி லேயே வெளியேற்றப் பட்டன.

    2-வது சுற்று ஆட்டங்கள் கடந்த 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடந்தது. இதன் முடிவில் நெதர் லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோஷியா, பிரேசில், மொராக்கோ, போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, போலந்து, செனகல், ஜப்பான், தென் கொரியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகியவை 2-வது சுற்றில் வெளி யேறின.

    கால்இறுதி போட்டிகள் கடந்த 9 மற்றும் 10-ந்தேதி நடைபெற்றது. இதன் முடிவில் குரோஷியா, அர்ஜென்டினா, மொராக்கோ , பிரான்ஸ் ஆகிய நாடுகள் அரை இறுதிக்கு முன்னேறின. பிரேசில் , நெதர்லாந்து , போர்ச்சுக்கல் , இங்கிலாந்து ஆகியவை கால்இறுதியில் வெளியேற்றப்பட்டன.

    13-ந்தேதி நடந்த முதல் அரை இறுதியில் அர்ஜென்டினா 3-0 என்ற கணக்கில் குரோஷியாவை யும், 14-ந்தேதி நடந்த 2-வது அரை இறுதியில் பிரான்ஸ் 2-0 என்ற கணக்கில் குரோஷியாவை யும் வீழ்த்தின.

    2 நாள் ஓய்வுக்கு பிறகு 3-வது இடத்துக்கான ஆட்டம் இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. இதில் மொராக்கோ- குரோஷியா அணிகள் மோதுகின்றன.

    உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை ) இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. லுசைல் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா-நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன.

    உலக கோப்பையை 3-வது முறையாக வெல்லப் போவது யார் ? என்று உலகம் முழுவதும் ஆவலு டன் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அர்ஜென்டி னாவும், பிரான்சும் இரண்டு தடவை சாம்பியன் பட்டம் பெற்று இருந்தன.

    அர்ஜென்டினா 1978, 1986 ஆகிய ஆண்டுகளிலும், பிரான்ஸ் 1998, 2018 ஆகிய ஆண்டுகளிலும் உலக கோப்பையை வென்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். சாம்பியன் பட்டம் பெற இரு அணிகளும் கடுமையாக போராடும்.

    அர்ஜென்டினா 36 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. கடைசியாக மரடோனா தலைமையில் 1986-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றது.

    அர்ஜென்டினா அணி 6-வது முறையாக இறுதி போட்டியில் ஆடுகிறது. இதில் 3 முறை தோல்வியை தழுவியது. 1930, 1990, 2014 ஆண்டுகளில் அந்த அணி இறுதி போட்டியில் தோற்று கோப்பையை பறி கொடுத்தது. கடைசியாக 2014-ல் மெஸ்சி தலைமை யிலான அணி ஜெர்மனி யிடம் தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தது.

    அர்ஜென்டினாவின் பலமே மெஸ்சிதான். இந்த போட்டி தொடரில் அவரது ஆட்டம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இன்னும் ஒரே ஒரு ஆட்டத் தில் தனது திறமையை வெளிப்படுத்தினால் உலக கோப்பை கிடைத்துவிடும்.

    35 வயதான மெஸ்சி இந்த உலக கோப்பையில் 5 கோல்கள் அடித்து எம்பாப் வேயுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார். மேலும் அணியின் மற்ற வீரர்கள் கோல் அடிக்க உதவி புரிந்துள்ளார். இதுவரை 3 கோல்கள் அடிக்க உதவி புரிந்துள்ளார்.

    வீரர்களை ஒருங்கிணைத்து செல்வதிலும் மெஸ்சி முக்கிய பங்கு வகித்து வருகிறார். இதே போல அல்வாரெஸ் (4 கோல்கள்), என்சோ பெர்னாண்டஸ், அலெக்சிஸ் மேக் அலிஸ்டர், மொலினா போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

    இது தவிர கோன்சாலோ மான்டியல், அகுனா, டிபால், ஒட்டமன்டி போன்ற சிறந்த வீரர்களும் இருக்கிறார்கள். பிரான்சின் மின்னல் வேக ஆட்டத்தை எதிர் கொள்வது அர்ஜென்டினாவுக்கு சவாலானது. அந்த அணி பின்களத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

    பிரான்ஸ் அணி பின்களம், நடுகளம், முன் களம் என அனைத்து துறையிலும் அபாரமாக இருக்கிறது. மின்னல் வேகத்தில் ஆடுவது அந்த அணியின் கூடுதல் பலமாகும். ஒவ்வொரு பகுதியில் இருக்கும் வீரர்களும் தலை சிறந்தவர்கள்.

    5 கோல்கள் அடித்துள்ள எம்பாப்வே, 4 கோல் எடுத்த ஆலிவர் ஜிரவுட், கிரீன்ஸ்மேன், டெம்ப்ளே, ரேபியாட், கோண்டே, பெர்னாண்டஸ் போன்ற அபாரமாக ஆடும் வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    பிரான்ஸ் அணி தொடர்ந்து 2-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணி இத்தாலி, பிரேசில் அணிகளுடன் இணையும் வேட்கையில் உள்ளது.

    இத்தாலி 1934, 1938 ஆகிய ஆண்டுகளிலும், பிரேசில் 1958, 1962 ஆகிய ஆண்டுகளிலும் உலக கோப்பையை தொடர்ச்சியாக கைப்பற்றியது.

    பிரான்ஸ் அணி 4-வது முறையாக இறுதி போட்டியில் ஆடுகிறது. 2006-ல் இத்தாலியிடம் தோற்று கோப்பையை பறி கொடுத்தது.

    தென் அமெரிக்க கண்டத்தின் வலுவான அணிகளில் ஒன்றான அர்ஜென்டினா தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கிறது. ஐரோப்பா கண்டத்தின் சிறந்த அணியில் ஒன்றான பிரான்ஸ் 4-வது வரிசையில் உள்ளது. இதனால் இறுதிப் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும்.

    • 2-வது சுற்றில் ஜப்பானையும், கால் இறுதியில் பிரேசிலையும் குரோஷியா வீழ்த்தியது.
    • மொராக்கோ 2-வது சுற்றில் ஸ்பெயினையும், கால் இறுதியில் போர்ச்சுக்கல்லையும் தோற்கடித்தன.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து கத்தார் நாட்டில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள உலக கோப்பையின் இறுதி போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது.

    இதில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முன்னதாக 3-வது இடத்துக்கான போட்டி நாளை நடக்கிறது.

    இதில் அரை இறுதியில் தோல்வி அடைந்த குரோஷியா-மொராக்கோ அணிகள் மோதுகின்றன. இப்போட்டி தோகாவில் உள்ள கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    அரை இறுதியில் குரோஷியா, அர்ஜென்டினாவிடமும், மொராக்கோ பிரான்சிடமும் தோல்வி அடைந்தன. லீக் போட்டியின் போது குரோஷியாவும், மொராக்கோவும் 'எப்' பிரிவில் இடம் பெற்று இருந்தன. இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிரா ஆனது.

    அந்த பிரிவில் பெல்ஜியம், கனடா அணிகளை வீழ்த்திய மொராக்கோ 7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. கனடாவை தோற்கடித்த குரோஷியா அணி பெல்ஜியத்துடன் டிரா செய்தது. குரோஷியா 5 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தது.

    2-வது சுற்றில் ஜப்பானையும், கால் இறுதியில் பிரேசிலையும் குரோஷியா வீழ்த்தியது. அதே போல் மொராக்கோ 2-வது சுற்றில் ஸ்பெயினையும், கால் இறுதியில் போர்ச்சுக்கல்லையும் தோற்கடித்தன.

    இரு அணிகளும் தங்களது முந்தைய ஆட்டங்களில் பலம் வாய்ந்த அணிகளை தோற்கடித்துள்ளதால் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இப்போட்டி நாளை இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.

    • இறுதிப்போட்டி 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
    • அர்ஜென்டினா-பிரான்ஸ் அணி 2 முறை உலக கோப்பையை வென்றுள்ளன.

    லுசைல்:

    உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது உச்ச கட்டத்தை எட்டி விட்டது. நேற்றுடன் அரை இறுதி ஆட்டங்கள் முடிந்து விட்டன.

    நேற்று முன்தினம் நடந்த முதல் அரை இறுதியில் அர்ஜென்டினா அணி குரோஷியாவையும், நேற்று நடந்த 2-வது அரை இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி மொராக்கோவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

    இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். 3-வது இடத்துக்கான போட்டி நாளை மறுநாள் (17-ந்தேதி) தோகாவில் உள்ள கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் அரை இறுதியில் தோல்வியை தழுவிய மொராக்கோ-குரோஷியா அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் 'குரூப்' சுற்றில் 'எப்' பிரிவில் இடம் பெற்று இருந்தன. இரு அணிகளும் மோதிய 'லீக்' ஆட்டம் கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. 3-வது இடத்துக்கான ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடக்கிறது.

    இறுதிப்போட்டி 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு லுசைல் மைதானத்தில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா-பிரான்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இரு அணிகளும் 2 முறை உலக கோப்பையை வென்றுள்ளன. தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அர்ஜென்டினா 1978, 1986 ஆகிய ஆண்டுகளிலும், ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த பிரான்ஸ் 1998, 2018 ஆகிய ஆண்டுகளிலும் கோப்பையை வென்றன.

    இரு அணி நட்சத்திர வீரர்களும் நேரடியாக இறுதிப்போட்டியில் மோதுகிறார்கள். அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்சியும், எம்பாப்வேயும் இறுதி போட்டியில் வீர தீரத்துடன் விளையாடுவார்கள். இருவருமே பிரான்ஸ் நாட்டில் உள்ள பி.எஸ்.ஜி. கிளப் அணிக்காக ஆடி வருகிறார்கள்.

    இந்த உலக கோப்பையில் மெஸ்சியும், எம்பாப்வேயும் தலா 5 கோல்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளனர். இதே போல 2-வது இடத்தில் ஜுலியன் அல்வா ரெஸ் (அர்ஜென்டினா), ஆலிவர் ஜிரவுட் (பிரான்ஸ்) உள்ளனர். இருவரும் தலா 4 கோல்கள் அடித்துள்ளனர்.

    • இந்த தோல்வியை ஜீரணிக்க முடியாத மொராக்கோ ரசிகர்கள் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் வன்முறையில் இறங்கினார்கள்.
    • பெல்ஜியத்தில் போலீசார் மீது மொராக்கோ ரசிகர்கள் பட்டாசுகளை கொளுத்தி போட்டும் வாகனங்களுக்கு தீ வைத்தும் ரகளையில் ஈடுபட்டனர்.

    பாரீஸ்:

    கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து அரை இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியிடம் மொராக்கோ அணி தோல்வியை தழுவியது. இதனால் அந்நாட்டு ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். இந்த தோல்வியை ஜீரணிக்க முடியாத மொராக்கோ ரசிகர்கள் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் வன்முறையில் இறங்கினார்கள்.

    பிரான்சில் போலீசார் மீது அவர்கள் கற்களை வீசினார்கள். பெல்ஜியத்தில் போலீசார் மீது மொராக்கோ ரசிகர்கள் பட்டாசுகளை கொளுத்தி போட்டும் வாகனங்களுக்கு தீ வைத்தும் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. அந்த பகுதி முழுவதும் தீ பிழம்பாக காட்சி அளித்தது. இந்த வன்முறைகளை தடுத்த போது போலீசாருக்கும் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வன்முறையை அடக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • முதல் பாதியில் ஒரு கோல் அடித்து பிரான்ஸ் முன்னிலை பெற்றிருந்தது.
    • இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு நடைபெற்ற காலிறுதி சுற்று ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ட்சோயமெனி ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

    2வது பாதி ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சம நிலையில் இருந்தது. பின்னர் 78 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஒலிவர் கிரவுட் ஒரு கோல் அடித்து தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் ஆட்ட நேர முடிவிலும் வேறு எந்த கோலும் அடிக்கப்படவில்லை. இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

    ×