என் மலர்
நீங்கள் தேடியது "அர்ஜென்டினா அணி"
- மெஸ்சி தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.
- மெஸ்சி நவம்பர் 17-ந் தேதி கொச்சிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் லியோனல் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.
மெஸ்சியின் அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா இடையே காட்சி கால்பந்து போட்டி நவம்பர் 17-ந் தேதி கொச்சியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் அதன் நட்சத்திர வீரர் மெஸ்சியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பை போட்டியை ஸ்பான்சர் செய்யும் தனியார் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
- ஒப்பந்தத்தை கேரள அரசு மீறியதாக குற்றம்சாட்டிய அர்ஜென்டினா கால்பந்து சங்கம், வருகையை ரத்து செய்தது.
- இடது சாரி கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது.
இந்த நிலையில், மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி இந்த ஆண்டு அக்டோபர்- நவம்பர் மாதத்தில் கேரளா வருகை தந்து விளையாட இருந்தது.
ஆனால், ஒப்பந்தத்தை கேரள அரசு மீறியதாக குற்றம்சாட்டிய அர்ஜென்டினா கால்பந்து சங்கம், வருகையை ரத்து செய்தது.
இது தொடர்பாக இடது சாரி கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.
இந்நிலையில், மெஸ்சியின் இந்திய சுற்றுப்பயணத்தை அர்ஜென்டினா கால்பந்து சங்கம் உறுதி செய்துள்ளது.
அதன்படி, வரும் நவம்பரில் அர்ஜென்டினா கால்பந்து அணி கேரளாவில் விளையாட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சியின் சிலையும் அவரது வீட்டை அலங்கரிக்கிறது.
- உலக கோப்பை கால்பந்து நடக்கும் இந்த தருணத்தில் அவர் தனது வீட்டையும், 30 ஆண்டாக நடத்தும் டீ கடையையும் நீலநிறமாக மாற்றி விட்டார்.
கொல்கத்தா:
உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் அர்ஜென்டினா அணிக்கு அந்த நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் நிறைய ரசிகர்கள் உண்டு. அப்படிப்பட்ட ஒரு தீவிர ரசிகர் தனது வீடு, டீ கடை முழுவதையும் அர்ஜென்டினா அணியின் தேசிய கொடிக்குரிய நிறத்தில் வர்ணம் தீட்டி கவனத்தை ஈர்த்துள்ளார். மேற்கு வங்காள மாநிலம் நார்த் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள இச்சாபுர் என்ற ஊரை சேர்ந்தவர் ஷிப் ஷங்கர் பத்ரா (வயது 54). கிளப் அளவிலான கால்பந்து போட்டிகளில் விளையாடியவர். 1986-ம் ஆண்டு அர்ஜென்டினா அணி உலக கோப்பையை வென்றதில் இருந்து அந்த அணியின் தீவிரமான ரசிகராக மாறி விட்டார்.
உலக கோப்பை கால்பந்து நடக்கும் இந்த தருணத்தில் அவர் தனது வீட்டையும், 30 ஆண்டாக நடத்தும் டீ கடையையும் நீலநிறமாக மாற்றி விட்டார். சுற்றி அர்ஜென்டினா கொடிகள் கட்டப்பட்டு உள்ளன. நீல, வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கும் அவரது வீட்டில் எங்கு பார்த்தாலும் அர்ஜென்டினா அணி வீரர்களின் புகைப்படங்களே தென்படுகின்றன. அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சியின் சிலையும் அவரது வீட்டை அலங்கரிக்கிறது.
இதை பார்க்கவே அவரது டீ கடைக்கு பலரும் படையெடுத்து வருகிறார்கள். 'அர்ஜென்டினா அணி என்றால் எனக்கு உயிர். மெஸ்சிக்கு இதுவே கடைசி உலக கோப்பை போட்டி. அவர் கோப்பையை வென்றால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அதற்காக தினமும் பிரார்த்திக்கிறேன். அவரது 35-வது பிறந்த நாளை கேக் வெட்டி பெரிய அளவில் கொண்டாட இருக்கிறோம்' என்று பத்ரா குறிப்பிட்டார்.






