என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Argentine Football Association"

    • மெஸ்சி தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.
    • மெஸ்சி நவம்பர் 17-ந் தேதி கொச்சிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் லியோனல் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.

    மெஸ்சியின் அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா இடையே காட்சி கால்பந்து போட்டி நவம்பர் 17-ந் தேதி கொச்சியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் அதன் நட்சத்திர வீரர் மெஸ்சியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த அறிவிப்பை போட்டியை ஸ்பான்சர் செய்யும் தனியார் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    • ஒப்பந்தத்தை கேரள அரசு மீறியதாக குற்றம்சாட்டிய அர்ஜென்டினா கால்பந்து சங்கம், வருகையை ரத்து செய்தது.
    • இடது சாரி கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது.

    இந்த நிலையில், மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி இந்த ஆண்டு அக்டோபர்- நவம்பர் மாதத்தில் கேரளா வருகை தந்து விளையாட இருந்தது.

    ஆனால், ஒப்பந்தத்தை கேரள அரசு மீறியதாக குற்றம்சாட்டிய அர்ஜென்டினா கால்பந்து சங்கம், வருகையை ரத்து செய்தது.

    இது தொடர்பாக இடது சாரி கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

    இந்நிலையில், மெஸ்சியின் இந்திய சுற்றுப்பயணத்தை அர்ஜென்டினா கால்பந்து சங்கம் உறுதி செய்துள்ளது.

    அதன்படி, வரும் நவம்பரில் அர்ஜென்டினா கால்பந்து அணி கேரளாவில் விளையாட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் சம்போலி ராஜினாமா செய்ததால் தற்போது புது பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
    ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா காலிறுதியில் பிரான்ஸிடம் தோல்வியடைந்து வெளியேறியது.

    இதனால் அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ஜார்ஜ் சம்போலி தனது பதவியை ராஜினாமா செய்தார். உலகக்கோப்பைக்குப் பிறகு அர்ஜென்டினா செப்டம்பர் 3-ந்தேதி கொலிம்பியாவையும், செப்டம்பர் 7-ந்தேதி கவுதமாலாவையும் எதிர்கொள்கிறது.



    இந்நிலையில் பப்லோ எய்மர், லியோனல் ஸ்காலோனி ஆகியோரை பயிற்சியாளராக நியமித்துள்ளது. மேலும் ‘‘பின்னர் அர்ஜென்டினா அணிக்கு நிலையான பயிற்சியாளரை நியமிப்போம்’’ என்று அர்ஜென்டினா கால்பந்து அசோசியேசன்ஸ் தெரிவித்துள்ளது.
    ×