search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maithripala Sirisena"

    • ஈஸ்டர் தின தற்கொலைப்படை தாக்குதலில் 270-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
    • இலங்கை சுப்ரீம் கோர்ட்டு, சிறிசேனா இலங்கை மதிப்பில் ரூ.10 கோடி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    கொழும்பு :

    கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு தாக்குதலில் 270-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களில் 11 இந்தியர்களும் அடங்குவர்.

    அந்த தாக்குதலை தடுக்க தவறிவிட்டதாக அப்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனா மீதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீதும் குற்றம்சாட்டப்பட்டது.

    இதுதொடர்பான வழக்கில் கடந்த 12-ந்தேதி இலங்கை சுப்ரீம் கோர்ட்டு, குண்டுவெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக சிறிசேனா இலங்கை மதிப்பில் ரூ.10 கோடி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இல்லாவிட்டால் அவர் சிறை செல்ல நேரிடும் என்றும் எச்சரித்தது.

    தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துவந்த சிறிசேனா, பாதுகாப்பு துறையின் கவனக்குறைவுதான் குண்டு தாக்குதலுக்கு காரணம் என்று கூறிவந்தார்.

    இந்நிலையில் கொழும்பில் நேற்று தனது சுதந்திரா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய சிறிசேனா, 'மற்றவர்கள் செய்த ஒன்றுக்காக (குண்டு தாக்குதல்) நான் நாட்டின் கிறிஸ்தவ சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.

    கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை இலங்கை அதிபராக இருந்த மைத்ரிபால சிறிசேனா, அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    • தன் மீதான குற்றச்சாட்டுகளை சிறிசேனா திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.
    • இந்த இழப்பீட்டை 6 மாதகாலத்துக்குள் செலுத்த வேண்டும்.

    கொழும்பு :

    இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி ஈஸ்டர் தினத்தில் 3 கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் 3 சொகுசு ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

    இலங்கை மட்டும் இன்றி ஒட்டுமொத்த உலகையும் அதிரவைத்த இந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் பலர் உள்பட 270 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதல் குறித்து இந்தியா முன்கூட்டியே உளவுத் தகவல் அளித்தும், அதை தடுக்க தவறியதாக இலங்கையின் அப்போதைய அதிபர் சிறிசேனா மற்றும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    அதுமட்டும் இன்றி ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு குறித்து விசாரிப்பதற்காக சிறிசேனாவால் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற விசாரணைக்குழுவும் பயங்கரவாத தாக்குதலை தடுக்க சிறிசேனா தவறிவிட்டதாக குற்றம் சாட்டியது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை சிறிசேனா திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

    எனினும் இந்த விவகாரத்தில் சிறிசேனா மற்றும் அவரது அரசில் பணியாற்றிய மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் மீது குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிலர் அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட்டின் 7 நீதிபதிகளை கொண்ட அமர்வு நேற்று முன்தினம் தனது தீர்ப்பை வழங்கியது.

    அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பயங்கரவாத தாக்குதல் குறித்து இந்தியாவிடம் இருந்து நம்பகமான தகவல் கிடைத்தும், நாட்டின் மீதான தாக்குதலை தடுப்பதில் அலட்சியமாக இருந்ததற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் அதிபர் சிறிசேனா இலங்கை பணத்தில் ரூ.10 கோடியை தனது சொந்த நிதியில் இருந்து இழப்பீடாக வழங்க வேண்டும்.

    அதேபோல் முன்னாள் தலைமை போலீஸ் அதிகாரி பூஜித் ஜெயசுந்தரா, உளவுத்துறை முன்னாள் தலைவர் நிலந்தா ஜெயவர்த்தனே ஆகியோர் தலா ரூ.7.5 கோடியும், பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் ஹெமாசிறி பெர்ணாண்டோ ரூ.5 கோடியும் இழப்பீடாக வழங்க வேண்டும்.

    இந்த இழப்பீட்டை 6 மாதகாலத்துக்குள் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    பெரும்பாலான சதிகாரர்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்றும் பயங்கரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம் கொண்டு வருவோம் என்றும் இலங்கை குண்டுவெடிப்பு குறித்து அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அறிக்கை வெளியிட்டுள்ளார். #srilankablasts #RanilWickremesinghe
    கொழும்பு :

    இலங்கை குண்டுவெடிப்பு குறித்து அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சிறிய அமைப்பாக இருந்தாலும், நன்கு பயிற்சி பெற்ற அமைப்புதான் இலங்கை குண்டுவெடிப்பை நடத்தி உள்ளது. அதனுடன் தொடர்புடைய பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டு விட்டனர். தற்போது, நாடு இயல்புநிலைக்கு திரும்ப தயாராகிவிட்டது. இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அனைவரும் உதவ வேண்டும்.



    கிழக்கு மாகாணத்தில், மனித வெடிகுண்டாக தயாராக இருந்தவர்கள், போலீசாரை எதிர்கொண்டபோது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதற்காக புதிய, கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும். விசா வாங்காமல் இலங்கையில் மத பிரசங்கம் செய்பவர்கள், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #srilankablasts #RanilWickremesinghe 
    இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, தலைமை போலீஸ் அதிகாரி புஜித் ஜெயசுந்தரா ஆகியோரை பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். #SrilankanBlasts #Sirisena
    கொழும்பு :

    * இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, தலைமை போலீஸ் அதிகாரி புஜித் ஜெயசுந்தரா ஆகியோரை பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். தொடர் குண்டுவெடிப்பு குறித்த உளவு தகவல் முன்கூட்டியே கிடைத்தும், செயல்பட தவறியதற்காக அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

    * இலங்கையில் மாடம்பி என்ற இடத்தில் உள்ள சர்வதேச பள்ளியில் ஒரு வெளிநாட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர். அவர் ஒரு மனித வெடிகுண்டு போன்ற தோற்றத்தில் உள்ளார். அவரிடம் பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் இல்லை.

    பயங்கரவாதிகளுக்கு அவர் பயிற்சி அளித்தவரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.



    * தொடர் குண்டுவெடிப்பு குறித்த உளவு தகவலை இலங்கைக்கு நாங்கள் அளிக்கவில்லை என்று அமெரிக்கா மறுத்துள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் உளவு தகவல் அளித்ததாக இலங்கை மந்திரி ஹர்ஷா டி சில்வா கூறியதற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா டெப்லிட்ஸ் இந்த மறுப்பை அளித்துள்ளார். தாக்குதல் பற்றி அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தெரியாது என்றும் அவர் கூறினார்.

    * நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பழிவாங்க இலங்கையில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதாக இலங்கை மந்திரி ருபன் விஜேவர்த்தனே கூறி இருந்தார். அதை இலங்கை முஸ்லிம் கவுன்சில் துணைத்தலைவர் ஹில்மி அகமது நிராகரித்துள்ளார்.

    “இரண்டு தாக்குதல்களுக்கும் இடைப்பட்ட கால அளவு மிகவும் குறுகலானது. இந்த அவகாசத்தில், இவ்வளவு பெரிய தாக்குதலை திட்டமிட முடியாது. எனவே, இரண்டுக்கும் முடிச்சு போடுவது அபத்தமானது” என்று அவர் கூறினார். #SrilankanBlasts #Sirisena 
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இலங்கை அதிபர் சிறிசேனா நாளை திருப்பதி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #SriLanka #MaithripalaSirisena #TirumalaTemple
    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலங்கை அதிபர் சிறிசேனா 17-ந் தேதி சாமி தரிசனம் செய்கிறார். இதற்காக, தன் மனைவி ஜெயந்தி புஷ்பகுமரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள், அதிகாரிகளுடன் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் அவர் விமானம் மூலம் ஐதராபாத்துக்கு வந்து சேருகிறார். அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் ரேணிகுண்டாவுக்கு வருகிறார்.

    அங்கிருந்து கார் மூலம் திருமலைக்கு செல்கிறார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார். 17-ந் தேதி அதிகாலையில் நடைபெறும் சுப்ரபாத பூஜையில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், சிறிசேனா பெங்களூரு புறப்பட்டு செல்கிறார்.

    இலங்கை அதிபர் ஆன பிறகு அவர் திருப்பதி கோவிலுக்கு வருவது, இது 3-வது தடவை ஆகும்.   #SriLanka #MaithripalaSirisena #TirumalaTemple 
    ஹிட்லர் போல நடந்து கொள்ளாதீர்கள் என இலங்கை அதிபர் சிறிசேனாவை ரனில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். #RanilWickremesinghe #Sirisena #Hitler
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி விட்டு புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்தார். ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் நடத்தவும் சிறிசேனா உத்தரவிட்டார்.

    ஆனால் அதிபரின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் ரனில் விக்ரமசிங்கேயை மீண்டும் பிரதமர் பதவியில் நியமிக்க முடியாது என்று சிறிசேனா பிடிவாதமாக கூறி வருகிறார்.



    இதுபற்றி விக்ரமசிங்கே கூறுகையில், “அரசாங்கத்தில் உள்ள நாம் அனைவரும் அரசியல் சட்டத்தை காப்போம். அரசியலமைப்புடன் யாரும் விளையாட வேண்டாம். நீங்கள்(சிறிசேனா) சர்வாதிகாரி ஹிட்லர் போல நடந்து கொள்ளக் கூடாது. நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும் என்றால் அதை சட்டப்பூர்வ அரசுதான் முடிவு செய்யவேண்டும். தேர்தலுக்கு நாங்கள் பயந்தவர்கள் அல்ல. எந்த தேர்தலையும் சந்திக்கத் தயார். அதேநேரம் சிறிசேனா கோர்ட்டு உத்தரவுப்படி நடந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டி வரும்” என்றார். #RanilWickremesinghe #Sirisena #Hitler

    ராஜபக்சே அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இரு நம்பிக்கையில்லா தீர்மானங்களும் வெற்றிபெற்ற நிலையில் மூன்றாவது முறையும் வாக்கெடுப்பு நடத்த அதிபர் சிறிசேனா வலியுறுத்தியுள்ளார். #SriLankanparliament #MaithripalaSirisena #RanilWickremesinghe
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா பிரதமராக நியமித்தார்.

    ஆனால், அவருக்கு போதிய மெஜாரிட்டி எம்.பி.க்கள் இல்லை. எனவே பாராளுமன்றத்தையே அதிபர் சிறிசேனா  கலைப்பதாக அறிவித்தார். மேலும் பாராளுமன்ற தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    அதைத்தொடர்ந்து, பாராளுமன்ற கூட்டத்தை சபாநாயகர் கருஜெயசூர்யா கூட்டினார். அதில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த ஓட்டெடுப்பில் ராஜபக்சே தோல்வி அடைந்தார். இதனால் அவர் பிரதமர் பதவியை இழக்க வேண்டிய நிலை உருவானது.

    இந்த நம்பிக்கை ஓட்டெடுப்பை ஏற்க அதிபர் சிறிசேனா மறுத்து விட்டார். இதனால் அரசியல் குழப்பம் உருவானது. நான்தான் தொடர்ந்து பிரதமராக இருக்கிறேன் என்று ராஜபக்சே கூறினார். நேற்று மீண்டும் பாராளுமன்ற கூட்டம் நடந்தபோது எம்.பி.க்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

    ஏற்கனவே நடந்த ஓட்டெடுப்பு பாராளுமன்ற விதிகளின்படி நடத்தப்படவில்லை. அதை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கிறேன். எனவே புதிய ஓட்டெடுப்பை பாராளுமன்ற விதிகளை பின்பற்றி நடத்துங்கள் என்று அதிபர் சிறிசேனா கேட்டுக்கொண்டார்.

    ஏற்கனவே கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சபையில் கொண்டு வந்து விவாதிக்கலாம். அதில் உள்ள முதலாவது ஷரத்தை நீக்கிவிட வேண்டும். ஓட்டெடுப்பின் போது ஒவ்வொரு எம்.பி.யையும் பெயர் சொல்லி அழைத்து அவர் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்? என்று கேட்டு பதிவு செய்து அதன்படி ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்றும் சிறிசேனா கூறினார்.

    கடந்த 16-ம் தேதி சபாநாயகர் கருஜெயசூர்யா வரலாறு காணாத அளவில் நூற்றுக்கணக்கான போலீசாரின் பாதுகாப்புடன் பாராளுமன்றத்துக்கு வந்தார். இன்றும் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆதரவு எம்.பி.க்களுக்கு இடையே கடும் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது.



    இருதரப்பினரும் மிளகாய் தூள் தூவி புதுவித போர் பாணியில் சண்டையிட்டனர். நிலைமையை சமாளிக்க இயலாமல் அவை காவலர்களும், போலீசாரும் திணறினர். போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

    கடுமையான கூச்சல், குழப்பத்துக்கு இடையே பாராளுமன்றத்தை 19-ம் தேதி பிற்பகல் ஒருமணி வரை தள்ளிவைப்பதாக அறிவித்த சபாநாயகர் ஜெயசூரியா,  அன்று நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாகவும் அறிவித்தார்.

    இந்நிலையில், நேற்று மாலை அனைத்து கட்சி தலைவர்கள் அதிபர் சிறிசேனாவை மீண்டும் சந்தித்தனர். பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், இன்று அதிபரின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ராஜபக்சே அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது மூன்றாவது முறையாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சிறிசேனா வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாக்களிக்கும் எம்.பி.க்கள் தங்களது பெயர்களை கூறி ஆதரவையோ, எதிர்ப்பையோ பதிவு செய்ய வேண்டும். அல்லது, சர்வதேச அளவுக்கோலின்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் அவர்களின் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகுதான் நான் இதுதொடர்பாக தீர்மானிப்பேன் என அதிபர் தெரிவித்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. #SriLankanparliament #MaithripalaSirisena #RanilWickremesinghe

    இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பதவி நீக்கம் செய்ததை கண்டித்து தலைநகர் கொழும்புவில் இன்று அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #MaithripalaSirisena
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பதவி நீக்கம் செய்த பிறகுபுதிய பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்று பணிகளை தொடங்கிவிட்ட போதிலும் அரசியல் குழப்பம் இன்னமும் தீரவில்லை.
     
    “அரசியல் சாசனப்படி நான்தான் பிரதமர்” என்று ரணில் விக்ரமசிங்கே கூறி வருவதால் சிக்கல் நீடிக்கிறது.

    பாராளுமன்றத்தை கூட்டுங்கள், நான் எனக்கு இருக்கும் மெஜாரிட்டியை நிரூபித்துக் காட்டுகிறேன் என்று விக்ரமசிங்கே சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு கடிதமும் எழுதி உள்ளார்.

    இதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தை கூட்ட சபாநாயகர் முயற்சி செய்தார். ஆனால் அதிபர் சிறிசேனா தலையிட்டு பாராளுமன்றத்தை நவம்பர் 16-ந்தேதி வரை ஒத்திவைத்துள்ளார்.

    இந்த நிலையில் இலங்கை பிரதமர் யார்? என்ற சர்ச்சை நீடிப்பதால், பாராளுமன்றத்தை கூட்டி முடிவு செய்யுமாறு பல்வேறு நாடுகளும் அதிபர் சிறிசேனாவிடம் வலியுறுத்தியுள்ளன.

    இது தொடர்பாக சபாநாயகர் ஜெயசூர்யா இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த கூட்டத்தில் இலங்கை பாராளுமன்றம் கூட்டப்படும் தேதி முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்றம் விரைவில் கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ராஜபக்சேயும், விக்ரமசிங்கேயும் எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். எம்.பி.க்களை பிடிப்பதற்காக அங்கு குதிரை பேரம் நடந்து வருகிறது.

    இலங்கை பாராளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க 113 எம்.பி.க்களின் ஆதரவு வேண்டும். ராஜபக்சே- ரணில் விக்ரமசிங்கே இருவரும் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறி வருகிறார்கள்.

    ராஜபக்சே-சிறிசேனா அணியினருக்கு 95 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களுக்கு மெஜாரிட்டியை பெற இன்னமும் 18 எம்.பி.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. ரனில் விக்ரமசிங்கே கட்சியில் உள்ள சுமார் 20 எம்.பி.க்களை ராஜபக்சே பேரம் பேசி வளைத்து இருப்பதாக கூறப்படுகிறது.



    ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக 106 எம்.பி.க்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு மேலும் 7 எம்.பி.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில் 16 எம்.பி.க்களை வைத்துள்ள சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 எம்.பி.க்கள் ஆதரவு கிடைத்தால் மிக எளிதாக வெற்றி பெற முடியும் என்று ரனில் விக்ரமசிங்கே- ராஜபக்சே இருவரும் கருதுகிறார்கள். எனவே இரு தரப்பினரும் சம்பந்தனுடன் போட்டி போட்டு பேசி வருகிறார்கள்.

    இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பதவி நீக்கம் செய்ததை கண்டித்து தலைநகர் கொழும்புவில் இன்று அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிபரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டி, ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் முழக்கமிட்டவாறு ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் கொழும்பு நகரின் முக்கிய சாலையில் பேரணியாக சென்றனர். #LankaPMsacking #RanilWickremesinghe #MaithripalaSirisena
    இலங்கையில் சபாநாயகருடன் கலந்து ஆலோசித்து நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு அதிபர் சிறிசேனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது. #MaithripalaSirisena #Parliament #SriLanka
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே அதிகார மோதல் முற்றிய நிலையில், கடந்த 26-ந் தேதி பிரதமர் பதவியில் இருந்து திடீரென ரனில் விக்ரமசிங்கேயை நீக்கினார், சிறிசேனா. அத்துடன் நில்லாமல், முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராகவும் நியமித்தார்.



    மேலும் பிரதமர் இல்லத்தில் உடனடியாக வெளியேற விக்ரமசிங்கேவுக்கு உத்தரவிடப்பட்டதுடன், அவரது பாதுகாப்பும் அதிரடியாக குறைக்கப்பட்டது. இதனால் இலங்கை அரசியலில் திடீர் நெருக்கடி ஏற்பட்டது.

    ஆனால் பிரதமர் பதவியில் தானே தொடர்வதாகவும், அதிபரின் முடிவு சட்டவிரோதமானது என்றும் அறிவித்த ரனில் விக்ரமசிங்கே, பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேற மறுத்து விட்டார். மேலும் நாடாளுமன்றத்தை கூட்டி தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அதிபரை அவர் கேட்டுக்கொண்டார்.

    ஆனால் இதை தவிர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி வரை அதிபர் சிறிசேனா முடக்கினார்.

    இதை ஏற்க மறுத்த சபாநாயகர் கரு ஜெயசூர்யா, அதிபரின் நடவடிக்கையால் நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படும் என கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக சிறிசேனாவுக்கு கடிதம் எழுதிய அவர், தன்னிடம் ஆலோசனை செய்யாமல் நாடாளுமன்றத்தை முடக்குவது மிகப்பெரும் தவறு என அதில் குறிப்பிட்டு இருந்தார்.

    மேலும் அரசின் தலைவராக ரனில் விக்ரமசிங்கேவை மீண்டும் நியமிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட கரு ஜெயசூர்யா, அவருக்கு எதிராக வேறொருவர் தனக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை ரனில் விக்ரமசிங்கேயின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    இந்த பரபரப்பான சூழலில் அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேற தொடங்கி இருக்கின்றன. குறிப்பாக விக்ரமசிங்கேயின் ஆதரவாளரும், மந்திரியுமான அர்ஜுனா ரணதுங்காவை கொழும்பு நகரில் முற்றுகையிட்ட ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் சுடப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.

    இலங்கையில் நிலவும் இந்த அரசியல் குழப்பம் சர்வதேச நாடுகளை கவலை கொள்ள செய்திருக்கிறது. அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

    இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹீதர் நவுரெட் கூறுகையில், ‘இலங்கையில் யார் தலைமையில் அரசு அமைப்பது? என்பதை மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் உறுதி செய்யும் பொருட்டு, சபாநாயகருடன் கலந்தாலோசித்து நாடாளுமன்றத்தை அதிபர் உடனடியாக கூட்ட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

    இலங்கையில் அடுத்தடுத்து அரங்கேறும் அரசியல் நிகழ்வுகளை அமெரிக்கா தொடர்ந்து கவனிப்பதாக கூறிய நவுரெட், அங்கு வன்முறை மற்றும் அடக்குமுறையில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு அனைத்து தரப்பையும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

    இதைப்போல இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு அமைதியாக தீர்வு காண வேண்டும் எனவும், அனைத்து கட்சிகளும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளுமாறும் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெசும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனநாயக மதிப்பீடுகள் மற்றும் அரசியல் சாசன வழிமுறைகளை மதித்து சட்டத்தின் ஆட்சியையும், அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

    இதற்கிடையே புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே நேற்று பிரதமர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

    இந்த நிலையில் வெளிநாட்டு பத்திரிகையாளர் சங்கத்தில் நேற்று உரையாற்றிய ரனில் விக்ரமசிங்கே, நாடாளுமன்ற விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது எனக்கூறினார். நாடாளுமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறிய அவர், சபை கூடும்போது அதை நிரூபிப்போம் என்றும் தெரிவித்தார்.

    நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகருக்கே அதிகாரம் இருப்பதாகவும், இது தொடர்பாக நாளை (இன்று) அவர் முடிவு எடுப்பார் என்றும் ரனில் விக்ரமசிங்கே கூறினார்.

    இதைப்போல இலங்கையின் தற்போதைய அரசியல் குழப்பம் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே தீர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள சபாநாயகர் கரு ஜெயசூர்யா, சிலர் இதை வெளியில் தீர்க்க முயல்வதாகவும், இது ரத்தம் சிந்தவே வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
    இலங்கை அரசியல் களத்தில் ஸ்திரமற்ற நிலை தோன்றியுள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சிக்குள் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. #MaithripalaSirisena #RanilWickremesinghe #MahindaRajapakse

    கொழும்பு:

    இலங்கை அரசியல் களத்தில் ஸ்திரமற்ற நிலை தோன்றியுள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சிக்குள் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    கட்சி தலைவரான ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அவரது கட்சிக்குள் முரண்பாடு ஏற்படுள்ளது.

    இந்தநிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசாவை தலைவராக நியமிக்க உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டி பெரும் பான்மையை நிரூபித்துக் காட்ட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன்மூலம் சஜித்தை பிரதமராக்க முடிவு செய்துள்ளனர்.


    இந்த யோசனையினால் தான் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் சஜித் குழுக்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக அதிபர் சிறிசேனாவுக்கு, ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு தீவிரம் அடைந்துள்ளது.

    இக்காலகட்டத்தில் மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்கும் பட்சத்தில் சுமூகமாக செயல்படுவதில் சிக்கல் உள்ளது. எனவே சஜித் பிரேமதாசா தலைமையில் பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் அரசு அமைக்க முடியும். ஐக்கிய தேசிய கட்சி எம்.பி.க்கள் நம்புகின்றனர்.

    அதேநேரத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கும் சிறிய கட்சிகள் அதுவரை சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கவில்லை. கட்சி தலைவராக ரணில் விக்கிரமசிங்கே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என கருதுகின்றனர். #MaithripalaSirisena #RanilWickremesinghe #MahindaRajapakse

    தமிழ்தேசிய கூட்டணி ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் ராஜபக்சேவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. #MaithripalaSirisena #RanilWickremesinghe #MahindaRajapakse

    கொழும்பு:

    தமிழகம் அருகே நான்கு புறமும் கடலால் சூழப்பட்டுள்ள இலங்கையில் இந்தியா போல் அல்லாமல் அதிபர் ஆட்சி முறை கடை பிடிக்கப்படுகிறது.

    பொதுத்தேர்தலில் அதிபர் (ஜனாதிபதி) நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். பின்னர் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெஜாரிட்டி எம்.பி.க்கள் அடிப்படையில் பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார்.

    கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சேயை எதிர்த்து இலங்கை சுதந்திரா கட்சியைச் சேர்ந்த சிறிசேனா போட்டியிட்டு வெற்றி பெற்றார். சிறிசேனாவுக்கு ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு அளித்தது.

    அதன்பிறகு அதே ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரம சிங்கே கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றதால் சிறிசேனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் ஆனார். அவர் கூட்டணி மந்திரிசபை அமைத்தார்.

    சமீபகாலமாக அதிபர் சிறிசேனா-பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சே கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. மேலும் ரணில் விக்கிரமசிங்கே மீது பல்வேறு முறைகேடுகள் கூறப்பட்டன.

     


     

    இதனால் ரணில் விக்கிரமசிங்கே மீது இலங்கை பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாதீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் ரணில் விக்கிரமசிங்கேயை எதிர்த்து சிறிசேனா கட்சி எம்.பி.க்களும், ராஜபக்சே கட்சி எம்.பி.க்களும் வாக்களித்தனர் என்றாலும் ரணில் விக்கிரமசிங்கே மெஜாரிட்டி எம்.பி.க்கள் ஆதரவுடன் வெற்றிபெற்றார். இந்த வெற்றி காரணமாக சிறிசேனா- ரணில் இடையேயான மோதல் மேலும் வெடித்தது. ரணில் தன்னிச்சையாக நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்தார். அதற்கு சிறிசேனா முட்டுக்கட்டை போட்டார்.

    இந்தநிலையில் அதிபர் சிறிசேனா தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கேயை அதிரடியாக நீக்கினார். அவருக்கு பதில் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இது இலங்கை அரசியலில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    சிறிசேனா தன்னை நீக்கியது செல்லாது என்றும் நான் இன்னும் பிரதமர் பதவியில் நீடிக்கிறேன் என்றும் ரனில் விக்கிரம சிங்கே தெரிவித்தார். இது தொடர்பாக சிறிசேனாவுக்கு கடிதமும் எழுதினார். மேலும் பாராளுமன்றத்துக்குள் ரணில் நுழைய முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கேக்கு மெஜாரிட்டி ஆதரவு இருப்பதால் அவர் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி வெற்றிபெற்று விடக் கூடாது என்பதற்காக அதிபர் சிறிசேனா தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை வருகிற 16-ந்தேதி வரை முடக்கி உத்தரவிட்டுள்ளார்.

    நவம்பர் 16-ந்தேதி வரை பாராளுமன்றம் முடக்கப்பட்டு இருப்பதால் அதன்பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியும். குதிரைபேரம் மூலம் எம்.பி.க் களை இழுப்பதற்கு வசதியாக சிறிசேனா 20 நாட்களுக்கு பாராளுமன்றத்தை முடக்கி வைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    இதனால் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி கூடுவதாக இருந்த பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும்பான்மை பலத்துடன் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேயை அதிபர் சிறிசேனா நீக்கியது அரசியல் சட்ட சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே பாராளுமன்றத்தை எப்போது கூட்டினாலும் ரணில் விக்கிரமசிங்கே வெற்றிபெறும் வாய்ப்பு இருப்பதாகவும் ராஜபக்சே வெற்றிபெறுவது கடினம் என்றும் தெரியவருகிறது.

     


     

    இலங்கை பாராளுமன்றத்தில் மொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 225. இதில் மெஜாரிட்டிக்கு 113 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.

    ரணில் விக்கிரமசிங்கே கட்சிக்கு 106 எம்.பி.க்கள் உள்ளனர். சிறிசேனா-ராஜபக்சே கூட்டணியில் 95 எம்.பி.க்களே உள்ளனர். ரணில் விக்கிரமசிங்கே வெற்றிபெற இன்னும் 7 எம்.பி.க்கள் ஆதரவே தேவைப்படுகிறது.

    தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 எம்.பி.க்கள் உள்ளனர். ராஜபக்சேவை கடுமையாக எதிர்க்கும் அவர்கள் இந்தியாவுடன் நல்ல நட்புடன் இருக்கும் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    மேலும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதவிர மனோகணேசன், பழனி திகம்பரம், ரி‌ஷத் பதியுதீன் ஆகிய தமிழர் மற்றும் முஸ்லிம் கட்சி எம்.பி.க்களும் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் ரணில் வெற்றிபெறும் நிலை உள்ளது. அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவாரா? அல்லது பாராளுமன்றம் கலைக்கப்படுமா? என்ற பரபரப்பு நிலவுகிறது.

    ராஜபக்சேவை பிரதமராக அங்கீகரிப்பதா? அல்லது ரணில் விக்கிரமசிங்கே தொடர்வதை அனுமதிப்பதா? என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் பாராளுமன்ற சபாநாயகர் ஜெய சூர்யாவிடம் உள்ளது. அவர் சிறிசேனா ஆதரவாளராக இருந்தார்.

    ஆனால் நேற்று அவர் ரணில் விக்கிரமசிங்கே கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத்தை கூட்ட முடிவுசெய்து இருந்தார். இதை அறிந்த சிறிசேனா பாராளுமன்றத்தை முடக்கி உத்தரவிட்டார். இதனால் சபாநாயகர் ரணில் விக்கிரமசிங்கே ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் வி‌ஷயத்தில் அவர் என்ன முடிவு எடுப்பார் என்பதை இலங்கை அரசியல் தலைவர்கள் எதிர்நோக்கி உள்ளனர். #MaithripalaSirisena #RanilWickremesinghe #MahindaRajapakse

    சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரை தாக்க விடுதலைப் புலிகள் முன்னர் திட்டமிட்டதாக இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்துள்ளார். #LTTE #planefromChennai #MaithripalaSirisena
    கொழும்பு:

    ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றிருந்த இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அங்கு வாழும் சிங்களத்தவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    கடந்த 2009-ம் ஆண்டில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரை தாக்க விடுதலைப் புலிகள்  திட்டமிட்டதாக அப்போது மைத்ரிபாலா சிறிசேனா குறிப்பிட்டார்.

    அந்த காலகட்டத்தில் இலங்கையின் அந்நாள் அதிபர், பிரதமர், பாதுகாப்புத்துறை செயலாளர் மற்றும் ராணுவ தளபதி அனைவருமே வெளிநாடுகளுக்கு சென்றிருந்தனர். தற்காலிக ராணுவ மந்திரியாக அப்போது நான் பொறுப்பேற்றிருந்தேன்.


    சென்னையில் இருந்தோ, வேறேதாவது காட்டுப் பகுதியில் இருந்தோ கொழும்பு நகரில் உள்ள சில முக்கிய பகுதிகளில் விடுதலைப் புலிகள் வான்வழியாக வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப் போவதாக உளவுத்துறை மூலம் தகவல் வந்தது. இதை தொடர்ந்து அனைவரும் வெளியேறி விட்டனர்.

    தாக்குதலுக்கு பயந்து நானும் கொழும்புவை விட்டு வெளியேறி வெவ்வேறு பகுதிகளில் அப்போது தங்கி இருந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த 2007 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் கொழும்பு நகரின்மீது இருமுறை விமான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #LTTE #planefromChennai #MaithripalaSirisena
    ×