search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Lanka Easter Blast"

    பெரும்பாலான சதிகாரர்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்றும் பயங்கரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம் கொண்டு வருவோம் என்றும் இலங்கை குண்டுவெடிப்பு குறித்து அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அறிக்கை வெளியிட்டுள்ளார். #srilankablasts #RanilWickremesinghe
    கொழும்பு :

    இலங்கை குண்டுவெடிப்பு குறித்து அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சிறிய அமைப்பாக இருந்தாலும், நன்கு பயிற்சி பெற்ற அமைப்புதான் இலங்கை குண்டுவெடிப்பை நடத்தி உள்ளது. அதனுடன் தொடர்புடைய பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டு விட்டனர். தற்போது, நாடு இயல்புநிலைக்கு திரும்ப தயாராகிவிட்டது. இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அனைவரும் உதவ வேண்டும்.



    கிழக்கு மாகாணத்தில், மனித வெடிகுண்டாக தயாராக இருந்தவர்கள், போலீசாரை எதிர்கொண்டபோது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதற்காக புதிய, கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும். விசா வாங்காமல் இலங்கையில் மத பிரசங்கம் செய்பவர்கள், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #srilankablasts #RanilWickremesinghe 
    இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, தலைமை போலீஸ் அதிகாரி புஜித் ஜெயசுந்தரா ஆகியோரை பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். #SrilankanBlasts #Sirisena
    கொழும்பு :

    * இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, தலைமை போலீஸ் அதிகாரி புஜித் ஜெயசுந்தரா ஆகியோரை பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். தொடர் குண்டுவெடிப்பு குறித்த உளவு தகவல் முன்கூட்டியே கிடைத்தும், செயல்பட தவறியதற்காக அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

    * இலங்கையில் மாடம்பி என்ற இடத்தில் உள்ள சர்வதேச பள்ளியில் ஒரு வெளிநாட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர். அவர் ஒரு மனித வெடிகுண்டு போன்ற தோற்றத்தில் உள்ளார். அவரிடம் பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் இல்லை.

    பயங்கரவாதிகளுக்கு அவர் பயிற்சி அளித்தவரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.



    * தொடர் குண்டுவெடிப்பு குறித்த உளவு தகவலை இலங்கைக்கு நாங்கள் அளிக்கவில்லை என்று அமெரிக்கா மறுத்துள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் உளவு தகவல் அளித்ததாக இலங்கை மந்திரி ஹர்ஷா டி சில்வா கூறியதற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா டெப்லிட்ஸ் இந்த மறுப்பை அளித்துள்ளார். தாக்குதல் பற்றி அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தெரியாது என்றும் அவர் கூறினார்.

    * நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பழிவாங்க இலங்கையில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதாக இலங்கை மந்திரி ருபன் விஜேவர்த்தனே கூறி இருந்தார். அதை இலங்கை முஸ்லிம் கவுன்சில் துணைத்தலைவர் ஹில்மி அகமது நிராகரித்துள்ளார்.

    “இரண்டு தாக்குதல்களுக்கும் இடைப்பட்ட கால அளவு மிகவும் குறுகலானது. இந்த அவகாசத்தில், இவ்வளவு பெரிய தாக்குதலை திட்டமிட முடியாது. எனவே, இரண்டுக்கும் முடிச்சு போடுவது அபத்தமானது” என்று அவர் கூறினார். #SrilankanBlasts #Sirisena 
    ×