search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cutlet"

    • டயட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் இது.
    • குழந்தைகளுக்கு சத்தானது இந்த ஸ்நாக்ஸ்.

    தேவையான பொருட்கள்

    பீட்ரூட் - 2,

    பெரிய உருளைக்கிழங்கு - 1,

    கொண்டைக் கடலை - 1 கப்,

    வெங்காயம் - 1,

    பச்சை மிளகாய் - 2,

    இஞ்சி - சிறிய துண்டு,

    கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சோம்பு - தலா 1/2 டீஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை - சிறிது.

    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,

    செய்முறை

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    கொண்டைக் கடலையை 8 மணிநேரம் ஊற வைத்து குழையாமல் பதமாக வேகவைக்கவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லித்தழை, இஞ்சி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பீட்ரூட்டை தோல் நீக்கி துருவி கடாயில் போட்டு லேசாக வதக்கவும்.

    மிக்சியில் கொண்டைக்கடலையை கரகரப்பாக அரைத்து அதனுடன் வதக்கிய பீட்ரூட்டை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த பீட்ரூட் கலவை, மசித்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய ப.மிளகாய், கொத்தமல்லித்தழை, இஞ்சி, வெங்காயம், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சோம்பு , உப்பு சேர்த்து நன்றாக கெட்டியாகப் பிசைந்து விருப்பமான வடிவத்தில் செய்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த டிக்கிகளை வைத்து மேலே சிறிது எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து, விரும்பினால் மேலே முந்திரி பதித்து, சாட் மசாலா தூவி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான பீட்ரூட் சென்னா டிக்கி ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சிக்கனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 200 கிராம்

    உருளைக்கிழங்கு - 2

    ப.மிளகாய் - 2

    உப்பு - சுவைக்கு

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிதளவு

    மிளகு தூள் - அரை டீஸ்பூன்

    சில்லி பிளேக்ஸ் - அரை டீஸ்பூன்

    வெண்ணெய் - 1 டீஸ்பூன்

    மலாய் அல்லது கிரீம் - 2 டீஸ்பூன்

    பிரெட் தூள் - தேவையான அளவு

    முட்டை - 2

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி சிறிது உப்பு, சில்லி பிளேக்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    குக்கரில் சிக்கனை போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து 1 விசில் 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக விடவும்.

    விசில் போனவுடன் குக்கரை திறந்து உருளைக்கிழங்கை எடுத்து விட்டு அதில் தண்ணீர் வற்றும் வரை சிக்கனை அடுப்பில் வைத்து வேக விடவும்.

    தண்ணீர் வற்றியதும் சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் உருளைக்கிழங்கை தோல் நீக்கி போட்டு மசிக்கவும்.

    அடுத்து அதில் மிளகு தூள், சில்லி பிளேக்ஸ், வெண்ணெய், மலாய் அல்லது கிரீம், உப்பு, கொத்தமல்லி,ப.மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும். இது சற்று தளர்வாக தான் இருக்கும்.

    ஒரு தட்டில் பிரெட் தூளை கொட்டி நன்றாக பரப்பி விடவும்.

    அப்போது சிக்கன் மசாலாவை சிறிது எடுத்து பிரெட் தூளில் போட்டு பிரட்டி வேண்டிய வடிவில் பிடிக்கவும். சிக்கன் மசாலா தளர்வாக இருக்கும் என்பதால் பிரெட் தூளில் பிரட்டினால் மட்டுமே சரியான வடிவில் வரும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    அடுத்து மற்றொரு முறை பிடித்து வைத்த கட்லெட்டை முட்டையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இதை மிதமான தீயில் வைத்து தான் செய்ய வேண்டும்.

    இப்போது சூப்பரான சிக்கன் மலாய் கட்லெட் ரெடி.

    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்

    ராகி சேமியா - 100 கிராம்,

    உருளைக்கிழங்கு - 3,

    கேரட் - 1,

    வெங்காயம் - 1,

    கரம்மசாலாத்தூள், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள் - தேவைக்கு,

    வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை - 4 டீஸ்பூன்,

    சோம்பு - 1/4 டீஸ்பூன்,

    எண்ணெய் - 50 கிராம்,

    மைதா - 4 டேபிள்ஸ்பூன்,

    கொத்தமல்லி - சிறிது.

    செய்முறை

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில் மைதா மாவு, தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து தண்ணீராகக் கரைத்துக் கொள்ளவும்.

    ராகி சேமியாவை மிக்சியில் ரவை பதத்திற்குப் பொடித்துக் கொள்ளவும்.

    மசித்த உருளைக்கிழங்குடன் துருவிய கேரட், வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், சோம்பு, பொடித்த வேர்க்கடலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டை அளவு எடுத்து விரும்பிய வடிவில் தட்டி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த கட்லெட்டுகளை மைதா கரைசலில் முக்கி, பொடித்த ராகி சேமியாயில் போட்டு பிரட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான ராகி சேமியா வெஜிடபிள் கட்லெட் ரெடி.

    • பூசணியில், கண்களின் ஆரோக்கியத்துக்கு அவசியமான வைட்டமின் 'ஏ' அதிக அளவில் இருக்கிறது.
    • பூசணிக்காயைக் கொண்டு காரம் மற்றும் இனிப்பு என பலவகையான உணவுகளை தயாரிக்க முடியும்.

    தேவையான பொருட்கள்:

    பூசணிக்காய் (துருவியது) - 300 கிராம்

    உருளைக்கிழங்கு - 1

    சோளமாவு - 2 தேக்கரண்டி

    அரிசி மாவு - 2 தேக்கரண்டி

    மிளகு தூள் - 1 தேக்கரண்டி

    கறி மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 2

    எலுமிச்சம்பழச்சாறு - 1 தேக்கரண்டி

    ரொட்டித்தூள் - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    துருவிய பூசணிக்காயின் மேல் சிறிது தண்ணீர் தெளித்து, 10 நிமிடங்கள் இட்லி வேகவைப்பது போல ஆவியில் வேகவைத்து குளிர்விக்கவும்.

    வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து மேல் தோலை உரித்து மசித்துக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் குளிரவைத்தப் பூசணிக்காய் துருவல், மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறி மசாலா தூள், மிளகு தூள், எலுமிச்சம்பழச்சாறு, அரிசி மாவு, சோளமாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.

    இந்தக் கலவையை கட்லெட் வடிவத்தில் தட்டிக்கொள்ளவும்.

    பின்பு ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.

    அடிகனமான வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் கட்லெட்டை அதில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    இப்பொழுது சுவையான பூசணிக்காய் கட்லெட் தயார்.

    இதை தக்காளி சாசுடன் சேர்த்து சாப்பிடலாம்.

    • பூசணியில் வைட்டமின் 'ஏ' அதிக அளவில் இருக்கிறது.
    • பூசணியில் பலவகையான உணவுகளை தயாரிக்க முடியும்.

    தேவையான பொருட்கள்:

    பூசணிக்காய் (துருவியது) - 300 கிராம்

    உருளைக்கிழங்கு - 1

    சோளமாவு - 2 தேக்கரண்டி

    அரிசி மாவு - 2 தேக்கரண்டி

    மிளகு தூள் - 1 கறி

    மசாலாத்தூள் - 1

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 2

    எலுமிச்சம்பழச்சாறு - 1 தேக்கரண்டி

    ரொட்டித்தூள் - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து மேல் தோலை உரித்து மசித்துக்கொள்ளவும்.

    துருவிய பூசணிக்காயின் மேல் சிறிது தண்ணீர் தெளித்து, 10 நிமிடங்கள் இட்லி வேகவைப்பது போல ஆவியில் வேகவைத்து குளிர்விக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் குளிரவைத்தப் பூசணிக்காய் துருவல், மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறி மசாலா தூள், மிளகு தூள், எலுமிச்சம்பழச்சாறு, அரிசி மாவு, சோளமாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.

    இந்தக் கலவையை கட்லெட் வடிவத்தில் தட்டிக்கொள்ளவும்.

    பின்பு ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.

    அடிகனமான வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் கட்லெட்டை அதில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    இப்பொழுது சுவையான பூசணிக்காய் கட்லெட் தயார்.

    இதை தக்காளி சாசுடன் சேர்த்து சாப்பிடலாம்.

    • குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் இது.
    • இதை செய்வது மிகவும் சுலபம்.

    தேவையான பொருட்கள்:

    பச்சை பட்டாணி - 3/4 கப்

    அரிசி மாவு - 1/2 கப்

    கடலை மாவு - 1/2 கப்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 2

    பன்னீர் - 1/4 கப்

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பௌலில் மசித்த பச்சை பட்டாணியை போட்டு, அத்துடன் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பன்னீர், உப்பு, மற்றும் தண்ணீர் ஊற்றி, சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

    பின் அந்த கலவையை கட்லெட் போல், தட்டையாகவும் சற்று தடிமனாகவும் தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் ஓரளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள கட்லெட்டை, முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.

    இதேப் போல் அனைத்து மாவையும் வேக வைத்து எடுத்தால், பச்சை பட்டாணி பன்னீர் கட்லெட் ரெடி!!!

    இதனை தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    • நீரிழிவு உள்ளவர்களும்கூட பன்னீரை தைரியமாக சாப்பிடலாம்.
    • புரதம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் பன்னீரில் அதிகம்.

    தேவையான பொருட்கள்:

    பன்னீா் - 500 கிராம்

    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    வெங்காயம் - 4

    பச்சை மிளகாய் - 7

    கறிவேப்பிலை - 2 கொத்து

    பூண்டு, பூண்டு விழுது - 1 ½மேஜைக்கரண்டி

    சோம்பு தூள் - 1 தேக்கரண்டி

    கரம் மசாலா தூள் - 1½ மேஜைக்கரண்டி

    மிளகு தூள் - 1 தேக்கரண்டி

    உருளைக்கிழங்கு - 3

    பொரிக்க தேவையான பொருட்கள்:

    சோள மாவு - 4 மேஜைக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    பிரெட் தூள் - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிக்க

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்..

    வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் சோம்பு, கரம் மசாலா மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் துருவிய பன்னீரை சேர்த்து நன்கு கிளறவும்.

    மீண்டும் 5 நிமிடம் வேக வைக்கவும். பின்பு தீயை அணைத்து அதனை ஆற வைக்கவும்.

    பின்பு பன்னீர் கலவையை மசித்த உருளைகிழங்குடன் சேர்த்து நன்கு பிசையவும்.

    பின்பு அதனை சிறு சிறு பகுதிகளாக பிரித்து உருண்டைகளாக உருட்டி, தட்டையாக செய்து கொள்ளவும்.

    பின்பு சோள மாவுடன் நீர் சேர்த்து கலவை தயாரித்து கொள்ளவும்.

    கட்லெட்டுகளை சோளமாவுக் கலவையில் முக்கி பின் பிரெட் தூளில் நன்றாக பிரட்டி எடுத்து வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    இப்போது சுவையான பன்னீர் கட்லெட் தயார்.

    மதியம் மீந்த சாதத்துடன், காய்கறிகள் சேர்த்து கட்லெட் செய்தால் அருமையாக இருக்கும். சரி, இப்போது ரைஸ் வெஜிடபிள் கட்லெட்டை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்:

    அரிசி சாதம் - 1 கப்  
    உருளைக்கிழங்கு - 1  
    மிக்ஸ்டு வெஜிடேபிள் (பீன்ஸ், கேரட், குடைமிளகாய்) - 1 கப்
    வெங்காயம் - 1
    இஞ்சி - 2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு



    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    சாதத்தை வேகவைத்து ஆறியதும் மசித்து கொள்ளவும்.

    காய்கறிகள், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, சாதம், பொடியாக நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள, மல்லித்தூள், சோள மாவு, கடலைமாவு சேர்த்து கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு தட்டில் பிசைந்து வைத்துள்ளதை கட்லெட் வடிவில் தட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான ரைஸ் வெஜிடபிள் கட்லெட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பார்லியில் அதிகளவு நார்சத்து இருக்கின்றது. பார்லி என்றாலே கஞ்சி தான் செய்ய வேண்டும் என்று இல்லாமல்..இப்படி கட்லெட்டும் செய்யலாம்.
    தேவையான பொருட்கள் :

    வேகவைத்த பார்லி - 1 கப்
    ஒட்ஸ் - 1 கப்
    எண்ணெய் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    வதக்கி கொள்ள :

    எண்ணெய் - 1 தே.கரண்டி
    கடுகு - தாளிக்க
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 1
    கேரட் துருவல் - கால் கப்
    பீன்ஸ் - 10
    கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
    கரம்மசாலா தூள் - 1/2 தே.கரண்டி



    செய்முறை :

    வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, பீன்ஸ், கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒட்ஸினை கடாயில் போட்டு வெறுமனே 1 நிமிடம் வறுத்து மிக்சியில் போட்டு ஒன்றும் பாதியுமாக பொடித்தும் கொள்ளவும்.

    வேகவைத்த பார்லியினை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். (தண்ணீர் ஊற்ற வேண்டாம்.)

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட் துருவல், பீன்ஸ் சேர்த்து வதக்கவும். காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளவும்.

    அடுத்து அதில் கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து கொத்தமல்லி, புதினா தூவி, சிறிது நேரம் ஆறவிடவும்.

    ஆறிய மசாலாவில் அரைத்த பார்லி, வறுத்த ஒட்ஸ், வதக்கிய பொருட்கள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். ( தண்ணீர் ஊற்றி பிசைய கூடாது.) இதனை அப்படியே 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    இந்த மாவை கட்லெட்டுகளாக விரும்பிய வடிவில் செய்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த கட்லெட்டுகளை தோசை கல்லில் போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி 3 நிமிடங்கள் வேகவிடவும். ஒருபுறம் நன்றாக வெந்த பிறகு, திருப்பி போட்டு மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.

    சுவையான சத்தான சத்தான ஓட்ஸ் பார்லி வெஜ் கட்லெட் ரெடி.

    இதனை சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சீஸ், உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 2,
    வெங்காயம், கேரட் - தலா ஒன்று,
    சீஸ் - 4 க்யூப்ஸ்,
    கோஸ் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,
    பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
    கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,
    பிரெட் தூள் - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:


    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், மசித்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், கோஸ், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலாத் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    இந்த மசாலா ஆறியதும் அதனுடன் துருவிய சீஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    இந்த மசாலாவை வட்டமாக தட்டி, பிரெட் தூளில் புரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

    சூப்பரான சீஸ் வெஜிடபிள் கட்லெட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் உருளைக்கிழங்கு, பாலக்கீரை சேர்த்து கட்லெட் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலைக்கீரை - ஒரு சிறு கட்டு,
    உருளைக்கிழங்கு - 2,
    பிரெட் ஸ்லைஸ்கள் - 4,
    பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பிரெட் தூள் - சிறிதளவு,
    மைதா மாவு - அரை கப்,
    சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த கீரையை பொடியாக நறுக்கி 2 கப் கொதி நீரில் 2 நிமிடம் போட்டு மூடி வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

    மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நீரில் நனைத்து பிழிந்தெடுத்த பிரெட் ஸ்லைஸ்கள், கீரை விழுது, பச்சை மிளகாய் - இஞ்சி விழுது, சீஸ் துருவல், உப்பு ஆகியவற்ரை அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டிக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டிய கட்லெட்களை மைதா கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து டொமெட்டோ சாஸுடன் பரிமாறவும்.

    சூப்பரான ஆலு பாலக் கட்லெட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முட்டையில் கட்லெட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த கட்லெட் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 5
    உருளைக்கிழங்கு - 500 கிராம்
    மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
    கரம்மசாலாத்தூள் - 1 ஸ்பூன்
    மிளகுத்தூள்     - 1 ஸ்பூன்
    வெங்காயம் - 1
    தேங்காய் பால் - அரை கப்
    மைதா மாவு - 2 ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - 250 கிராம்
    ரொட்டித்தூள் - தேவையான அளவு.



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    முட்டை, உருளைக்கிழங்கை வேக வைத்து கொள்ளவும்.

    வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து கொள்ளவும்.

    முட்டையை தோல் நீக்கி இரண்டாக வெட்டி வைக்கவும்.

    வெட்டிய முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் போட்டு கலக்கி வைக்கவும்.

    மசித்த உருளைக்கிழங்குடன் தேங்காய் பால், வெங்காயம், கொத்தமல்லி, மிளகாய் தூள், கரம்மசாலாத்தூள், மைதா மாவு போட்டு பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    உருண்டையை கையில் வட்டமாகத் தட்டி, நடுவில் பாதி முட்டையை வைத்து மூட வேண்டும்.

    இந்த முட்டையை ரொட்டித்தூளில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த முட்டைகளை போட்டு சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான முட்டை கட்லெட் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×