search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "18 Constituency"

    18 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். #mutharasan

    திருவாரூர்:

    திருவாரூரில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நாகை பாராளுமன்ற தொகுதி மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணி அமைப்பு ரீதியாக அமைந்துள்ள கூட்டணி. எந்த ஒரு கட்சியையும் தி.மு.க.விலை கொடுத்து வாங்கவில்லை. ஆனால் அ.தி.மு.க அமைத்துள்ள கூட்டணி பண பலத்தால் அமைந்துள்ளது.

     


    மத்தியில் ஆளும் மோடி அரசு ஜூன் 3-ம் தேதி சட்ட ரீதியாக முடிவுக்கு வருகிறது. மத்திய அரசின் ஊதுகுழலாக தமிழக அரசு உள்ளது.

    18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாயிலாக தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி.  இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி போய் விடும். பிறகு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அரசியலமைப்புச் சட்டத்தின் படி சட்டரீதியாக  முதல்-அமைச்சராக பதவி ஏற்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #mutharasan

    நாங்கள் அப்பீலுக்கு சென்றால் அதை காரணம் காட்டி 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தள்ளி வைப்பதாக இருந்தால் அப்பீல் மனுவை வாபஸ் பெற்று விடுவோம் என்று தங்க தமிழ்செல்வன் கூறினார். #Thangatamilselvan #Byelection
    சென்னை:

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான தங்க தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை சட்டத்தை தவறாக பயன்படுத்தி சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    பலப்பரீட்சை நடந்தபோது நாங்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக சட்டசபையில் ஓட்டு போடவில்லை. ஆதரித்து தான் ஓட்டு போட்டோம்.



    ஆனால் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டனர். இது நாடறிந்த உண்மை.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எங்கள் 18 பேர் மீது மட்டும் சபாநாயகர் நடவடிக்கை எடுத்து எம்.எல்.ஏ. பதவியை பறித்துள்ளார்.

    இதை எதிர்த்து தான் நாங்கள் ஐகோர்ட்டுக்கு சென்றோம். கோர்ட்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு வந்துள்ளதால் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய இருக்கிறோம். அங்கு எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    துணைப் பொதுச் செயலாளர் இடைத்தேர்தலை சந்திப்போம் என்று கூறி இருக்கிறார். தேர்தலை சந்திக்க நாங்களும் தயாராகவே இருக்கிறோம்.

    ஆனாலும் சபாநாயகரின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது. அவர் சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்பதை வெளிப்படுத்தவே கோர்ட்டுக்கு செல்கிறோம்.

    நாங்கள் அப்பீலுக்கு சென்றால் அதை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளி வைப்பதாக இருந்தால் அந்த சமயத்தில் அப்பீல் மனுவை வாபஸ் பெற்று விடுவோம்.

    எனவே சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Thangatamilselvan  #Byelection


    ×