search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    18 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி - முத்தரசன்
    X

    18 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி - முத்தரசன்

    18 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். #mutharasan

    திருவாரூர்:

    திருவாரூரில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நாகை பாராளுமன்ற தொகுதி மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணி அமைப்பு ரீதியாக அமைந்துள்ள கூட்டணி. எந்த ஒரு கட்சியையும் தி.மு.க.விலை கொடுத்து வாங்கவில்லை. ஆனால் அ.தி.மு.க அமைத்துள்ள கூட்டணி பண பலத்தால் அமைந்துள்ளது.

     


    மத்தியில் ஆளும் மோடி அரசு ஜூன் 3-ம் தேதி சட்ட ரீதியாக முடிவுக்கு வருகிறது. மத்திய அரசின் ஊதுகுழலாக தமிழக அரசு உள்ளது.

    18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாயிலாக தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி.  இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி போய் விடும். பிறகு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அரசியலமைப்புச் சட்டத்தின் படி சட்டரீதியாக  முதல்-அமைச்சராக பதவி ஏற்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #mutharasan

    Next Story
    ×