என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
18 தொகுதிகளுக்கு அப்பீலை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்கக்கூடாது - தங்க தமிழ்செல்வன்
Byமாலை மலர்28 Oct 2018 8:37 AM GMT (Updated: 28 Oct 2018 8:37 AM GMT)
நாங்கள் அப்பீலுக்கு சென்றால் அதை காரணம் காட்டி 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தள்ளி வைப்பதாக இருந்தால் அப்பீல் மனுவை வாபஸ் பெற்று விடுவோம் என்று தங்க தமிழ்செல்வன் கூறினார். #Thangatamilselvan #Byelection
சென்னை:
தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான தங்க தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை சட்டத்தை தவறாக பயன்படுத்தி சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டனர். இது நாடறிந்த உண்மை.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எங்கள் 18 பேர் மீது மட்டும் சபாநாயகர் நடவடிக்கை எடுத்து எம்.எல்.ஏ. பதவியை பறித்துள்ளார்.
இதை எதிர்த்து தான் நாங்கள் ஐகோர்ட்டுக்கு சென்றோம். கோர்ட்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு வந்துள்ளதால் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய இருக்கிறோம். அங்கு எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம்.
துணைப் பொதுச் செயலாளர் இடைத்தேர்தலை சந்திப்போம் என்று கூறி இருக்கிறார். தேர்தலை சந்திக்க நாங்களும் தயாராகவே இருக்கிறோம்.
ஆனாலும் சபாநாயகரின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது. அவர் சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்பதை வெளிப்படுத்தவே கோர்ட்டுக்கு செல்கிறோம்.
நாங்கள் அப்பீலுக்கு சென்றால் அதை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளி வைப்பதாக இருந்தால் அந்த சமயத்தில் அப்பீல் மனுவை வாபஸ் பெற்று விடுவோம்.
எனவே சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #Thangatamilselvan #Byelection
தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான தங்க தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை சட்டத்தை தவறாக பயன்படுத்தி சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
பலப்பரீட்சை நடந்தபோது நாங்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக சட்டசபையில் ஓட்டு போடவில்லை. ஆதரித்து தான் ஓட்டு போட்டோம்.
ஆனால் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டனர். இது நாடறிந்த உண்மை.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எங்கள் 18 பேர் மீது மட்டும் சபாநாயகர் நடவடிக்கை எடுத்து எம்.எல்.ஏ. பதவியை பறித்துள்ளார்.
இதை எதிர்த்து தான் நாங்கள் ஐகோர்ட்டுக்கு சென்றோம். கோர்ட்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு வந்துள்ளதால் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய இருக்கிறோம். அங்கு எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம்.
துணைப் பொதுச் செயலாளர் இடைத்தேர்தலை சந்திப்போம் என்று கூறி இருக்கிறார். தேர்தலை சந்திக்க நாங்களும் தயாராகவே இருக்கிறோம்.
ஆனாலும் சபாநாயகரின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது. அவர் சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்பதை வெளிப்படுத்தவே கோர்ட்டுக்கு செல்கிறோம்.
நாங்கள் அப்பீலுக்கு சென்றால் அதை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளி வைப்பதாக இருந்தால் அந்த சமயத்தில் அப்பீல் மனுவை வாபஸ் பெற்று விடுவோம்.
எனவே சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #Thangatamilselvan #Byelection
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X